விசயலட்சுமி (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விசயலட்சுமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விஜயலக்ஷ்மி
பிறப்புஆகத்து 2, 1960 (1960-08-02) (அகவை 63)
எர்ணாகுளம், கேரளா, இந்தியா
மொழிமலையாளம்
தேசியம்இந்தியன்
குறிப்பிடத்தக்க படைப்புகள்'
துணைவர்பாலசந்திரன் சுள்ளிக்காடு

விஜயலஷ்மி ( ஆங்கிலம்: Vijayalakshmi) மலையாள மொழிக் கவிஞர் ஆவார். இவர் இந்தியாவின் கேரளாவைச் சார்ந்தவர். இவர் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 ஆம் நாள் பிறந்தார். இவர், 1980க்கும், 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 199 கவிதைகளை இயற்றியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

விஜயலட்சுமி 1960 ஆகஸ்ட் 2 அன்று குழிக்காட்டில் ராமன் வேலாயுதன், காமாட்சி இணையருக்கு மகளாகப் பிறந்தார். இவர், சோற்றானிக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி, எர்ணாகுளம் புனித தெரசா கல்லூரி, எர்ணாகுளம் மகாராஜாவின் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் தனது படிப்பை நிறைவு செய்தார். இவர் உயிரியல் பாடத்தில் பட்டத்தையும், மலையாள இலக்கியத்தில் முதுநிலை பட்டத்தையும் கேரள பல்கலைக்கழகத்தில் முதல் தரத்தில் பெற்றார். இவர் புகழ் பெற்ற மலையாள கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயலட்சுமி_(கவிஞர்)&oldid=3935151" இலிருந்து மீள்விக்கப்பட்டது