விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 2
Appearance

- 1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1815 – கண்டி ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட கண்டி மன்னர் விக்கிரம ராஜசிங்கன் (படம்) என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
- 1917 – புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
- 1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.
- 1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொல்லப்பட்டார்.
- 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
ரா. பி. சேதுப்பிள்ளை (பி. 1896) · குன்னக்குடி வைத்தியநாதன் (பி. 1935) · இரா. செல்வக்கணபதி (இ. 2016)
அண்மைய நாட்கள்: மார்ச் 1 – மார்ச் 3 – மார்ச் 4