விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 17
தோற்றம்

- 1893 – அவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லில்லியுகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.
- 1917 – கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: நேசநாட்டுப் படைகள் குளிர்காலக் கோட்டை ஊடறுத்து உரோமைக் கைப்பற்ற மோண்டி கசீனோ மீது முதலாவது தாக்குதலை மேற்கொண்டது. இச்சண்டைகளில் 105,000 நேசப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1961 – கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பத்திரிசு லுமும்பா (படம்) இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்தியமைக்காக சப்பானியப் பிரதமர் கீச்சி மியாசாவா தென் கொரியாவில் வைத்து மன்னிப்புக் கேட்டார்.
- 2007 – வட கொரியா அணுவாயுதச் சோதனை நடத்தியதற்குப் பதிலளிக்கும் வகையில், ஊழிநாள் கடிகாரம் நள்ளிரவுக்கு 5 மணித்துளிகளுக்கு முன்னதாக இருக்குமாறு மாற்றியமைக்கப்பட்டது.
ம. கோ. இராமச்சந்திரன் (பி. 1917) · செ. இராசநாயகம் (இ. 1940) · மு. மு. இஸ்மாயில் (இ. 2005)
அண்மைய நாட்கள்: சனவரி 16 – சனவரி 18 – சனவரி 19