வால்கெய்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஜான் சார்லெஸ் டால்மேன் எழுதிய தி ரைட் ஆஃப் வால்கெயிர்

நார்ஸ் புராணத்தில் வால்கெய்ரி (முதிய நார்ஸ் வால்கெய்ரிஜா "கொல்லப்படுபவரைத் தேர்ந்தெடுப்பவர்"[1])என்பது ஒரு போரில் யார் இறப்பார்கள் என்பதை முடிவு செய்யும் பெண்ணுருவக் கூட்டத்தில் ஒருத்தி. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வால்ஹல்லா என்னும் கொல்லப்பட்டவர்களுக்கான மரணத்துக்குப் பின்னரான வாழ்வுக்கப்பால் என்னும் இடத்திற்கு வால்கெய்ரிகள் கொண்டு செல்வார்கள். இது ஓடின் என்ற கடவுளால் ஆளப்படும் பகுதியாகும். இறந்து விட்ட போர்வீரர்கள் இங்கு எய்நெர்ஜர் என மாறுவார்கள். அங்கு, ராக்னரோக் நிகழ்ச்சிகளுக்கு இந்த எய்நெர்ஜர்கள் தயாராகாதபோது, வால்கெய்ரிகள் அவர்களுக்கு மீட் என்னும் தேநீர்க் கலவை அளிப்பார்கள். கதாநாயகர்கள் மற்றும் இதர மனிதர்களின் காதலிகளாகவும் வால்கெய்ரிகள் தோன்றுகிறார்கள். இதில் இவர்கள் அரச குமாரிகளாக சில சமயங்களில் அன்னங்களுடன் இருப்பதாகவும் சில சமயங்களில் அண்டங்காக்கைகளுடன் இருப்பதாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

தொன்று தொட்ட பாராம்பரியங்களிலிருந்து தொகுக்கப்பட்ட 13வது நூற்றாண்டைச் சார்ந்த கவிதைப் புத்தகமான பொயடிக் எட்டா வில் வால்கெய்ரிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 13வது நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்னோரி ஸ்டர்லுசன் எழுதிய புரோஸ் எட்டா மற்றும் ஹெம்ஸ்க்ரிங்க்லா மற்றும் நஜல்ஸ் சாகா என்னும் ஐஸ்லேண்டர்கள் பற்றிய புராணம் ஆகியவை 13வது நூற்றாண்டில் எழுதப்பட்டவையாகும். இவை 14வது நூற்றாண்டைச் சார்ந்த மந்திர தொடர்கள் எழுதிய ஸ்கால்ட் எனப்படும் ஸ்காந்திநேவிய வீர காதை கவிஞர்கள் எழுதிய அனைத்துக் கவிதைகள் நெடுகிலும், மற்றும் பண்டைய கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது.

பண்டைக்கால ஆங்கிலம் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்திய வேல்கைர்ஜ் மற்றும் வேல்கைரி ஆகியவை பல்வேறு பழைய ஆங்கிலச் சுவடிகளில் காணப்படுகின்றன; இந்தச் சொற்கள் நார்ஸ் தாக்கத்தால் உண்டானவையா, அல்லது [[உள்நாட்டு ஆங்கிலோ-சாக்ஸன் என்னும் புற சமய சார்பி|உள்நாட்டு ஆங்கிலோ-சாக்ஸன் என்னும் புற சமய சார்பி]]லிருந்து உருவானவையா என்று அறிஞர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். வால்கெய்ரிகள் ,நார்ன்ஸ்என்னும் ஸ்காண்டிநேவிய பெண் தெய்வங்கள், டிஸ்சிர் மற்றும் ஜெர்மனியின் பெண் ஞானிகள் மற்றும் ஷீல்ட்மெய்டன் என்னும் கவசப்பெண்கள் ஆகியவற்றிற்கு இடையே தொடர்பு உண்டா என்பதைப் பற்றி பல அறிவுபூர்வமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஸ்காண்டிநேவியா முழுதும் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சிகளில் வால்கெய்ரிகளை சித்தரிக்கும் தாயத்துக்கள் பல கிடைத்துள்ளன. நவீன கலாசாரத்தில் வால்கெய்ரிகள் கலை, இசைத் தொகுப்புக்கள், விடியோ விளையாட்டுக்கள் மற்றும் கவிதைகள் ஆகிய பல்வேறு கலைப் பணிகளில் முக்கியப் பொருளாக உள்ளனர்.

சொல் இலக்கணம்[தொகு]

பண்டைய நார்ஸ் சொல்லான வால்கைர்ஜா (இதன் பன்மை வால்கைர்ஜுர் ) என்னும் சொல்லிலிருந்து வால்கெய்ரி பெறப்பட்டுள்ளது. இது இரண்டு சொற்களின் கலவை. (போரில் கொல்லப்படுபவர்களைக் குறிக்கும்)வால்ர் என்னும் பெயர்ச்சொல் மற்றும் ("தேர்ந்தெடு" என்னும் பொருள்படும்) க்ஜோசா என்னும் வினைச்சொல். இவை இரண்டுமாக இணைந்து "கொல்லப்படுபவரைத் தேர்ந்தெடுப்பவர்" என்று பொருளானது. பண்டைய நார்ஸ் வால்கைர்ஜா பண்டைய ஆங்கில ச் சொல்லான வேல்கைர்ஜ் என்பதுடன் உறவுள்ளதாகும்.[2] வால்கெய்ரியின் மற்ற பெயர்கள், ஒட்ருனார்க்ராட்ர் என்னும் கவிதையில் வரும் ஓஸ்க்மெய் (பண்டைய நார்ஸ் "விரும்பியதை அளிக்கும் பெண்") மற்றும் நஃப்னாபுலுரில் வரும் ஓடின்ஸ் மெய்ஜர் (பண்டைய நார்ஸ் "ஓடினின் பெண்கள்") வால்ஹல்லாவில் ஒடின் இறந்த வீரர்களை வரவேற்கிறார் என்னும் உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில்,ஓஸ்க்மெய் என்னும் பெயரை ஓடினிக் பெயரான ஓஸ்கி (பண்டைய நார்ஸில், "ஆசைகளை நிறைவேற்றுபவர்" என்று பொருள் படும்)என்னும் பெயருடன் தொடர்பு படுத்தலாம்.[3]

பண்டைய நார்ஸ் சான்றுகள்[தொகு]

பொயடிக் எட்டா[தொகு]

வோலுஸ்பா மற்றும் க்ரிம்னிஸ்மல்[தொகு]

லாரன்ஸ் ஃப்ரோலிச் எழுதிய தி வால்கெய்ரிஸ் ஹில்ட்ர்,ப்ரூவர் மற்றும் ஹ்லோக் பேரிங் ஏல் இன் வல்ஹல்லா(1895)

வோலுஸ்பா என்னும் கவிதையின் முப்பதாவது சரணத்தில் வோல்வா (ஜெர்மன் சமூகத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் ஞானி) ஓடினிடம், வால்கெய்ரிகளை அவள் பார்த்ததாகவும், அவை தொலைதூரத்திலிருந்து வருவதாகவும், "கடவுளரின் சாம்ராஜ்யத்திற்கு" பயணம் செல்ல அவை தயாராக இருப்பதாகவும் கூறுகிறாள். வோல்வா இதனுடன் ஆறு வால்கெய்ரிகளின் ஒரு பட்டியலையும் அளிக்கிறாள்: கேடயம் ஒன்றை வைத்திருந்த ஸ்கல்ட் (பழைய நார்ஸில் "கடன்" அல்லது "எதிர்காலம்" என்று பொருள் படக் கூடியது), ஸ்கோகுல் ("ஷேக்கர்") குன்னர் ("போர்") ஹில்ட்ர் ("யுத்தம்"), கோண்டுல் ("மந்திரக்கோலை பயன்படுத்துபவர்"), மற்றும் கெய்ர்ஸ்கோகுள் ("ஈட்டி-ஸ்கோகுல்") இதற்குப் பிறகு வோல்வா "போர்க் கடவுளின் பெண்டிர்களை நான் பட்டியலிட்டுவிட்டேன், அந்த வால்கெய்ரிகள் பூமியின் மீது பயணம் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்" என்று சொல்கிறாள்.[4]

க்ரிம்னிஸ்மல் ,என்னும் கவிதையில் சித்திரவதை செய்யப்பட்டு,பசியோடும் தாகத்தோடும் இருக்கும் ஒடின்(க்ரிம்னிர் என்பவராக மாறுவேடம் பூண்டிருப்பவர்)இளையவனாக இருக்கும் அக்னர் என்பவரிடம் ஹ்ரிஸ்ட்("ஷேக்கர்") மற்றும் மிஸ்ட்(மேகம்)வால்கெய்ரிகள் தனக்கு [[கொம்பினால் செய்யப்பட்ட [மது அருந்தும்]கிண்ணத்தை]] தரவேண்டும் என்று விருப்பப்படுவதாகக்கூறுகிறார். பின்னர் அவர் மேலும் 11 வால்கெய்ரிகளை பட்டியலிட்டு அவை எய்நெர்ஜர்களுக்கு ஏல் என்ற மதுவகையை வாங்கித்தர கடமைப்பட்டவர்கள் என்றும் கூறுகிறார் அவர்கள் ஸ்கெஜ்ஜால்ட்(கோடரி காலம்),ஸ்கோகுல்,ஹில்ட்ர்,ப்ரூவர்("செயல் திறன்"),ஹ்லாக்("சத்தம்" அல்லது "யுத்தம்"),ஹெர்ஃப்ஜோதுர்("விலங்கிடுபவர்"),கோல்("அடக்கம் செய்பவர்"),கெய்ராஹூ("ஈட்டியால் சண்டையிடுபவர்"),ரான்ட்க்ரியோ(கேடயம்-சமாதானம்),ரோக்ரியோ(ஆலோசனை-சமாதானம்) மற்றும் ரெஜின்லெய்ஃப்(சக்தி-சமாதானம்)ஆகியவர்களாகும்.[5]

வோலுண்டர்க்வியோ[தொகு]

எமில் டோப்ளரின் வால்கெய்ரியன் (சி. 1905)

வோலுண்டர்க்வியோ என்னும் கவிதையில் வசன நடை அறிமுகம் ஒன்று சகோதரர்கள் ஸ்லாக்ஃபியோர்,எஜில் மற்றும் வோலுந்த் உல்ஃப்டாலிர்(ஒநாய்கள் பள்ளத்தாக்கு)என்னும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்ததாக கூறுகிறது. அங்கே ஒரு நாள் விடியற்காலையில் மூன்று பெண்கள் உல்ஃப்ஜார்(ஒநாய் ஏரி)ஏரியின் கரையில் லினென் ஆடையை நெய்வதை சகோதரர்கள் பார்க்கிறார்கள், "அவர்களுக்குப் பக்கத்தில் அவர்களுடைய அன்னத்தின் ஆடைகள் இருந்தன;அவர்கள் வால்கெய்ரிகள் ஆவார்கள்" இருவர், ஹ்லோத்வர் அரசனின் மகள்கள் ஹ்லோகுவா ஸ்வான்விட்(அன்னத்தின் வெண்மை)மற்றும் ஹெர்வார் ஆல்விட்ர்("முழுமையான புத்திசாலி" அல்லது "வினோத உயிரினம்"[6] என்று பொருள்படலாம்)என்று பெயரிடப்பட்டும் மூன்றாமவர் வாலன்ட்டின் ஜார் என்பவரின் மகளான ஒல்ருன்("பியர் மறைபுதிர்[7]" என்று பொருள் கொள்ளலாம்)என்றும் பெயரிடப்பட்டார்கள். அந்த சகோதரர்கள் அந்த மூன்று பெண்களையும் தங்கள் அறைகளுக்கு தங்களுடன் அழைத்துச்சென்றார்கள்- எஜில் ஒல்ருன்னையும், ஸ்லாக்ஃபியோர் ஹ்லோகுவா ஸ்வான்விட்டையும், மற்றும் வோலுந்த் ஹெர்வார் ஆல்விட்ர்யையும் அழைத்துச் சென்றார்கள். அந்தப்பெண்கள் ஒரு யுத்தத்திற்கு பறந்து செல்லும் வரை அவர்கள் ஏழு பனிக்காலங்களுக்கு சேர்ந்து வாழ்ந்தார்கள். அந்தப்பெண்கள் பின்னர் திரும்பவேயில்லை. எஜில் பனிக்காலணிகளை போட்டுக்கொண்டு ஒல்ருன்னை தேடிச்சென்றான்,ஸ்லாக்ஃபியோர் ஹ்லோகுவா ஸ்வான்விட்டை தேடிச்சென்றான் மற்றும் வோலுந்த் உல்ஃப்டாலிர் என்ற இடத்திலேயே இருந்தான்.[8]

ஹெல்காக்வியோ ஜோர்வரோஸனார்[தொகு]

கேஸ்டெல்லெட், கோபன்ஹேகன் கண்டு பிடித்த ஸ்டீஃபன் சிண்டிங்கின் வால்கெய்ரி (1908)

ஹெல்காக்வியோ ஜோர்வரோஸனார் என்னும் கவிதையில், நார்வேயின் அரசனான ஜோர்வரோ மற்றும் ஸ்வாஃபாலான்டின் ஸிர்லின் ஆகியவர்களின் மகனான ஒரு பெயர் தெரியாத அமைதியான இளைஞன் ஒரு கல்லறை மேடுமீது உட்கார்ந்திருக்கும் போது ஒன்பது வால்கெய்ரிகள் சவாரி செய்ததை பார்த்ததாக ஒரு வசன உரை கூறுகிறது. அவர்களில் ஒருத்தி மட்டும் மிகவும் கவரக்கூடியவளாய் அவனுக்குத்தெரிந்தாள். இந்த வால்கெய்ரியைப்பற்றி பின்னர் ஒரு வசன உரையில் அரசன் எய்லிமியின் மகள் ஸ்வாவா என்றும் "அடிக்கடி அவனை யுத்தங்களில் காப்பாற்றியவள்" என்றும் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த பெயரில்லாத மனிதனிடம் அந்த வால்கெய்ரி பேசுகிறாள் மற்றும் அவனுக்கு ஹெல்கி ("புனிதமான" என்ற பொருள்படும்[9])என்ற பெயரையும் இடுகிறாள். அதற்கு முன்னர் மௌனமாக இருந்த ஹெல்கி பேசுகிறான்; அவன் அந்த வால்கெய்ரியை "ஒளி பொருந்திய முகத்தை உடைய பெண்" என்று குறிப்பிட்டு, பின்னர் அவளிடம், அவள் கொடுத்த இந்த பெயரினால் அவனுக்கு என்ன அன்பளிப்பு கிடைக்கும் என்றும் அந்த அன்பளிப்பு அவளாக இல்லாவிட்டால் அதை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறான். அந்த வால்கெய்ரி ஸிகர்ஸோம் என்னும் இடத்தில் உள்ள வாள்களின் குவியலைப்பற்றி தனக்குத்தெரியும் என்று கூறுகிறாள். அதிலும் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாள் இருக்கிறது என்றும் கூறி அதைப்பற்றி விளக்கமாகவும் கூறுகிறாள்.[10] மேலும் இந்தக்கவிதையில் அட்லி பெண்ணான ஜோதுன் ஹ்ரிம்கெரோவுடன் கோபமாக வார்த்தைகளை பரிமாறிக் கொள்கிறது. அப்படி அட்லியுடன் கோபமாக பேசும் பொழுது ஹ்ரிம்கெரோ ஹெல்கியுடன் தான் இருப்பத்தேழு வால்கெய்ரிகளை பார்த்ததாகவும் அவற்றிலும் முக்கியமாக ஒரு வெண்மையான வால்கெய்ரி அந்தப்படையை தலைமை தாங்கி நடத்திச்சென்றதாகவும் கூறுகிறது.

மூவொன்பது பெண்கள்,ஆனால் ஒரு பெண் முன்னே செல்ல
தன் தலைக்கவசத்திற்குள் வெண்மையாய் இருந்தவள்
குதிரைகள் தங்கள் பிடரிமயிர்களுக்குள் நடுங்கிக்கொண்டிருந்தன
ஆழப்பள்ளத்தாக்குகளில் பனி விழுந்துக்கொண்டிருக்க
உயர்ந்த காடுகளின் மேல் பறந்துக்கொண்டிருந்த
அவர்களால் ஆண்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் பிறக்கிறது
இவையெல்லாம் பார்ப்பதற்கு எனக்கு வெறுப்பாக இருந்தது.[11]

பகல் வெளிச்சத்தினால் ஹ்ரிம்கெரோ கல்லாக மாறிய பிறகு தொடரும் வசன உரை, இப்பொழுது அரசனாக இருக்கும் ஹெல்கி, ஸ்வாவாவின் தந்தையான அரசன் எய்லிமியிடம் சென்று அவர் மகளை கேட்கிறான் என்று கூறுகிறது. ஹெல்கிக்கும் ஸ்வாவாவிற்கும் திருமணம் நிச்சயமாகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராக நேசிக்கிறார்கள். ஸ்வாவா வீட்டில் தன் தந்தை அரசன் எய்லிமியுடன் தங்குகிறாள், மற்றும் ஹெல்கி திடீர் தாக்குதல்களுக்கு செல்கிறான், மற்றும் ஸ்வாவா எப்பொழுதும் போல் வால்கெய்ரியாக இருக்கிறாள் என்றும் இத்துடன் அந்த உரை கூறுகிறது.[12] மற்ற நிகழ்ச்சிகளுக்கு இடையே போரில் அடைந்த காயம் ஒன்றினால் ஹெல்கி இறக்கிறான் என்று கவிதை தொடர்கிறது. ஹெல்கியும் அவனது வால்கெய்ரி மனைவியுமான ஸ்வாவாவும் "மறு அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது"என்று அந்த கவிதையின் இறுதியில் உள்ள உரை கூறுகிறது.[13]

ஹெல்காக்வியோ ஹுண்டிங்க்ஸ்பனா I[தொகு]

ராபர்ட் எங்கல்ஸின் ஹெல்கி ஹுண்டிங்க்ஸ்பனே அண்ட் ஸிக்ருன் (1919)

ஹெல்காக்வியோ ஹுண்டிங்க்ஸ்பனா I என்னும் கவிதையில் அதன் நாயகன் ஹெல்கி ஹுண்டிங்க்ஸ்பனே பிணங்கள் சிதறிக்கிடக்கும் லோகாஃப்ஜால் என்னும் போர் முனையில் உட்கார்ந்திருக்கிறான். ஒரு குன்றின் மீதிருந்து ஒளி தோன்றுகிறது அந்த ஒளியிலிருந்து மின்னல்கள் தோன்றுகின்றன. வானத்தில் பறந்துகொண்டிருக்கும் தலைக்கவசம் அணிந்த வால்கெய்ரிகள் தோன்றுகின்றனர். அவர்கள் இடையளவு உள்ள கவசம் குருதியில் நனைந்திருக்கிறது; அவர்கள் ஈட்டி பளிச்சென்று மின்னுகிறது.

பின்னர் லோகாஃபெல்லிலிருந்து ஒளி தோன்றியது
அந்த வெளிச்சத்திலிருந்து மின்னல்கள் தோன்றின;
ஹிமிங்க்வனியில் தலைக்கவசங்களுடன்[வால்கெய்ரிகள் வந்தன].
அவர்களின் கவச மேற்சட்டைகள் குருதியில் நனைந்திருந்தன;
அவர்களின் ஈட்டிகளிலிருந்து ஒளிக்கற்றைகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன.[14]

அதை தொடர்ந்த சரணத்தில், ஹெல்கி வால்கெய்ரிகளை பார்த்து ("தெற்கு பெண் கடவுள்கள்"என்று அவர்களை குறிப்பிடுகிறான்) இரவு துவங்கும் பொழுது போர்வீரர்களோடு வீடு வர அவர்களுக்கு விருப்பமுண்டா (இப்பொழுதும் அம்புகள் பறந்து கொண்டேயிருக்கின்றன)என்று கேட்கிறான். போர் முடிந்த பின்,ஸிக்ருன்("வெற்றி-ரூன்"[15])என்னும் வால்கெய்ரி தனது தந்தை ஹோக்னி,ஹ்னிஃப்ளங்க் இனத்தின் அரசன் க்ரான்மரின் மகனான ஹூபிரோத்ர் என்பவனுடன் தன் திருமணத்தை நிச்சயித்திருப்பதாக தனது குதிரையிலிருந்து அவனுக்கு அறிவிக்கிறாள். அவன் சிறிதும் தகுதியற்றவன் என்று ஸிக்ருன் கருதுகிறாள். ஸிக்ருன் தனது நிச்சயதார்த்தத்தை தவிர்க்க வேண்டிய நிலையில் அவளுக்கு உதவி புரிவதற்காக, ஹ்னிஃப்ளங்க் இனத்திற்கு எதிராக ஃப்ரெகெஸ்டீன் என்ற இடத்தில் போர் புரிவதற்காக ஹெல்கி ஒரு பெரும் படையை திரட்டுகிறான்.[16] இந்தக்கவிதையில் பின்னர், நாயகன் ஸின்ஃப்ஜோட்லி கோமுந்தர் என்பவனுடன் கோபமாக விவாதிக்கிறான். ஸின்ஃப்ஜோட்லி கோமுந்தர் ஒரு காலத்தில் பெண்ணாக இருந்தான் என்று சாடுகிறான்,மேலும் "ஒடினின் வால்கெய்ரிகளில் சூனியக்காரியாக,கொடுமையானவளாக செயற்கையானவளாக" அவள் இருந்ததாகவும் அவளை ஏளனம் செய்கிறான். மேலும் எய்நெர்ஜர் எல்லோரும் "உன் பொருட்டு மிகுந்த பலசாலியான பெண்ணுடன் சண்டையிட வேண்டியிருந்தது" என்றும் கூறுகிறான்.[17] மேலும் இந்தக்கவிதையில் "வால்கெய்ரியின் காற்றோட்டமான கடல்" என்பது "மூடுபனி" என்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.[18]

இந்தக்கவிதையின் இறுதியில்,இந்த முறை ஃப்ரெகஸ்டீன் என்னுமிடத்தில் நடைபெறும் யுத்தத்தில் ஹெல்கியை காப்பாற்றுவதற்காக வால்கெய்ரிகள் மறுபடியும் வானத்திலிருந்து இறங்கி வந்தனர். போருக்கு பிறகு, எல்லா வால்கெய்ரிகளும் பறந்து சென்று விட்டனர். ஆனால் ஸிக்ருன் மற்றும் ஒநாய்கள்(பூதம்-பெண்ணின் காவலன் என்று குறிப்பிடப்படுவது)பிணங்களை உண்கிறார்கள்

தலைக்கவசம் அணிந்த வால்கெய்ரிகள் வானத்திலிருந்து இறங்கி வந்தனர்.
-ஈட்டிகளின் இரைச்சல் அதிகரித்தது-இளவரசனை அவர்கள் காத்தார்கள்;
ஸிக்ருன் சொன்னது-பின்னர் காயம்-ஏற்படுத்தும் வால்கெய்ரிகள் பறந்து சென்றார்கள்,
பூதம்-பெண்களின் காவலன் அண்டங்காக்கைகளின் தீனியை விருந்தாகக்கொண்டான்:[19]

போரில் ஜெயித்து விட்டாய், என்றும் ஹெல்கி ஒரு சிறந்த அரசனாவான் என்றும் கூறி ஸிக்ருன், தன்னையே அவனுக்கு அளிக்கிறாள்.[20]

ஹெல்காக்வியோ ஹுண்டிங்க்ஸ்பனா II[தொகு]

ஜோஹன்ஸ் கெர்ட்ஸின் ஹெல்கி அண்ட் ஸிக்ருன் (1901)

ஹெல்காக்வியோ ஹுண்டிங்க்ஸ்பனா II என்னும் கவிதையின் தொடக்கத்தில்,அரசன் ஸிக்மன்ட்(வோல்சுங்க் என்பவரின் மகன்)மற்றும் அவர் மனைவி போர்கைல்ட்(ப்ராலன்டை சார்ந்தவள்)என்பவருக்கும் ஹெல்கி என்றொரு மகன் இருந்தான் என்றும், அவனுக்கு ஹெல்ஜி ஹ்ஜோர்வரோஸ்ஸான் என்று(முன்னர் இருந்த ஹெல்காக்வியா ஹ்ஜோர்வரோஸ்ஸான் என்பவரின் எதிரியாக இருந்தவர்)பெயரிட்டார்கள் என்றும் ஒரு வசன உரை கூறுகிறது.[21] ஹெல்கி அரசன் ஹூண்டிங்கை கொலை செய்த பிறகு, தப்பித்து அவன் கடற்கரையில் வதை செய்த மாட்டின் பச்சை மாமிசத்தை உண்கிறான், பின்னர் ஸிக்ருனை சந்திக்கிறான் என்று நான்காவது சரணத்தில் ஒரு வசன உரை விளக்கமாக கூறுகிறது. அரசன் ஹோக்னியின் புதல்வியான ஸிக்ருன், "கடல் மற்றும் காற்றில் பறந்து செல்லும் ஒரு வால்கெய்ரி" என்றும் மேலும் அவளே ஸ்வாவா என்னும் வால்கெய்ரியின் மறு பிறப்பு என்றும் அந்த உரை கூறுகிறது.[22] சரணம் 7ல்,ஸிக்ருன் "குன்னரின் சகோதரிகளின் வாத்துக்குஞ்சுகளுக்கு உணவானது" என்னும் சொற்றொடரை உபயோகப்படுத்துகிறாள். இதில் குன்னரும் அவளது சகோதரிகளும் வால்கெய்ரிகள் ஆவார்கள்,அங்கு குறிப்பிடப்பட்ட வாத்துக்குஞ்சுகள் என்பவை போர்வீரர்களால் விட்டு செல்லப்பட்ட பிணங்களை தின்னும் அண்டங்காக்கைகளை குறிப்பிடுபவையாகும்.[23]

சரணம் 18க்குப்பிறகு,ஒரு வசன உரை ஹெல்கியும் அவனது மிகப்பெரிய கப்பல் படையும் ஃப்ரெகஸ்டீனுக்கு சென்று கொண்டிருக்கும்பொழுது ஒரு பெரும் புயலை எதிர் கொள்கிறார்கள் என்று உரைக்கிறது. கப்பல்களுள் ஒன்றை மின்னல் தாக்குகிறது. அந்த கப்பற்படை ஒன்பது வால்கெய்ரிகள் காற்று மார்க்கமாய் பறந்து செல்வதை பார்க்கிறது, அவற்றுள் ஸிக்ருன்னையும் அடையாளம் கண்டு கொள்கிறது. புயல் ஒய்கிறது, பின்னர் அந்த படை பாதுகாப்பாக கரையை அடைகிறது.[24] ஹெல்கி போரில் இறந்து போகிறான், ஆனாலும் வால்ஹல்லாவிலிருந்து ஸிக்ருன்னை சந்திப்பதற்காக திரும்பி வருகிறான், ஒரு முறை பிணக்குழியின் மீது சந்திக்கிறான், கவிதையின் இறுதியில் ஒரு வசன முடிவுரை, ஸிக்ருன் பின்னர் வருத்தத்தினால் இறந்து போனாள் என்று விளக்குகிறது. அந்த முடிவுரை "பேகன் மதத்தில், மனிதர்கள் மறுபிறப்பு எடுக்கிறார்கள் என்று, இப்பொழுது நாம் பழங்காலத்து மனைவிகளின் கதை என்று எண்ணும் ஒரு நம்பிக்கை இருந்து வந்தது" என்றும் " ஹெல்கியும் ஸிக்ருன்னும் மறுபடி மற்றொரு ஹெல்ஜி மற்றும் வால்கெய்ரி தம்பதிகளாக பிறந்தார்கள்"; ஹெல்ஜி ஹெல்ஜி ஹாடிங்க்ஜாஸ்காய் என்றும் ஸிக்ருன் ஹால்ஃப்தான் என்பவரின் மகளாக; வால்கெய்ரி காராவாக பிறந்தார்கள் என்றும் விளக்குகிறது. இந்த இருவரைப்பற்றிய மற்ற விவரங்களை (இப்பொழுது தொலைந்து விட்ட) காருல்ஜோ என்னும் நூலில் காணலாம் என்று இந்த முடிவுரை விளக்குகிறது.[25]

ஸிக்ரிட்ரிஃப்யூமல்[தொகு]

வால்கெய்ரி ஸிக்ரிட்ரிஃபா ஸிக்ரிட்ரிஃப்யூமலில் ஒரு பேகன் நார்ஸ் பிரார்த்தனையைச் சொல்கிறார்.ஆர்தர் ராக்ஹான் வரைந்த சித்திரம் (1911)

ஸிக்ரிட்ரிஃப்யூமல் என்னும் கவிதையின் வசன முகவுரையில், நாயகன் ஸிகுர்ட் ஹின்டர்ஃபெல் என்னும் இடம் வரை பயணம் செய்ததாகவும் பின்னர் "ஃப்ராங்குகளின் பூமியை" நோக்கி தெற்கு திசையில் சென்றான் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த மலையில் ஸிகுர்ட் "நெருப்பு எரிவது போல வானம் வரை வெளிச்சம் பரவிய" ஒரு மிகப்பெரிய ஒளியை கண்டான். ஸிகுர்ட் அதை நோக்கி சென்றபொழுது,அங்கு தலைக்கு மேல் ஒரு கொடி பறக்க ஒரு ஸ்கால்த்போர்க் நிற்பதைக்கண்டான். அந்த ஸ்கால்த்போர்க் கிற்குள் ஸிகுர்ட் சென்ற பொழுது,முழுவதும் கவசம் அணிந்து உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு போர் வீரனைக்கண்டான். அந்த போர் வீரனின் தலைக்கவசத்தை ஸிகுர்ட் அகற்றியபொழுது, ஒரு பெண்ணின் முகத்தைக்கண்டான். அந்தப்பெண்ணின் கவச சட்டை அவளுடனேயே வளர்ந்ததைப்போல இறுக்கமாக இருந்தது. ஸிகுர்ட் தன் வாளான கிராம் என்பதை அவள் கவசத்தை கத்திரிப்பதற்கு பயன்படுத்தி,அந்த சட்டையின் கழுத்திலிருந்து ஆரம்பித்து,அவள் கை ஆடைகளையும் கத்திரித்து,பின்னர் அந்த கவசத்தை அவளிடமிருந்து பிரித்தெடுத்தான்.[26]

அப்பொழுது அந்தப்பெண் விழித்துக்கொண்டு,எழுந்து உட்காருகிறாள்,ஸிகுர்டை பார்க்கிறாள்,அவர்கள் இருவரும் இரண்டு சரணங்கள் கவிதை நடையில் உரையாடுகிறார்கள். இரண்டாவது சரணத்தில், ஒடின் அவளால் உடைக்க முடியாத ஒரு உறங்கும் மந்திரத்தை அவள் மேல் பிரயோகித்து விட்டதாகவும், அதனாலேயே நீண்ட நேரம் அவள் உறங்க நேரிட்டதாகவும் அந்தப்பெண் விளக்குகிறாள். ஸிகுர்ட் அவள் பெயரை கேட்கும் பொழுது, அவள் வார்த்தைகளை அவன் ஞாபகத்தில் வைத்திருக்க உதவுவதற்காக அந்தப்பெண் ஸிகுர்டிற்கு கொம்பினால் செய்யப்பட்ட குடிகலத்தில் தேநீர்க்கலவைஒன்றை அளிக்கிறாள். புற சமயத்தை சார்ந்த பிரார்த்தனை ஒன்றை இரண்டு சரணங்களில் அந்தப்பெண் பாடுகிறாள். அந்தப்பெண்ணின் பெயர் ஸிக்ர்டிரிஃபா என்றும் அவள் ஒரு வால்கெய்ரி என்றும் ஒரு வசன உரை விளக்குகிறது.[27]

ஸிக்ர்டிரிஃபா ஸிகுர்டிடம் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் இரண்டு அரசர்கள் இருந்ததாக விளக்குகிறாள் என்று ஒரு உரை வர்ணிக்கிறது. ஒடின் அதில் ஒருவனான ஹ்ஜால்ம்குன்னார் என்பவனுக்கு போரில் வெற்றியை தருவதாக உறுதி அளித்தான்,ஆனால் இவள் போரில் ஹ்ஜால்ம்குன்னாரை தோற்கடித்து விட்டாள். இதன் விளைவாக ஒடின் அவளை ஒரு உறக்கம் தரும் முள்ளால் குத்தி,இனி எப்பொழுதும் அவள் "போரில் ஜெயிக்கும் விதமாக போரிட மாட்டாள்" என்று கூறி அவளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து விட்டார். இதன் எதிரொலியாக,அச்சத்தை அறிந்தவனை தான் ஒரு போதும் மணக்க மாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பதாக ஸிக்ர்டிரிஃபா ஒடினிடம் கூறினாள். ஸிக்ர்டிரிஃபா தனது அனைத்துலக ஞானத்தையும் தன்னுடன் பகிர்ந்துகொள்ளுமாறு ஸிகுர்ட் அவளிடம் கேட்டுக்கொண்டான். ஸிக்ர்டிரிஃபா ஸிகுர்டிற்கு மந்திரவார்த்தைகளை எழுதுவது,மெய்யுணர்வுடைய ஞானம் மற்றும் தொலைநோக்கு ஆகிய அறிவை அளிக்கிறாள் என்று கவிதை நடையில் இந்த கவிதை கூறுகிறது.[28]

புரோஸ் எட்டா[தொகு]

ஹெர்மன் வில்ஹெல்ம் பிஸ்ஸெனின் வால்கெய்ரி(1835)

ஸ்னோரி ஸ்டர்லுஸன் என்பவரால் 13வது நூற்றாண்டில் எழுதப்பட்ட புரோஸ் எட்டா வில்,கைல்ஃபாக்னிங் என்ற புத்தகத்தில் 36வது அத்தியாயத்தில் முதன்முதலில் வால்கெய்ரிகளை பற்றி எழுதப்பட்டிருக்கிறது.அதில் அரியணையில் அமர்ந்திருக்கும் ஹை காங்க்லேரி (மாறுவேடத்தில் இருக்கும் அரசன் கைல்ஃபை)என்பவரிடம் வால்கெய்ரிகளின் செய்கைகளை பற்றியும் சில பெண் தெய்வங்களைப் பற்றியும் குறிப்பிடுகிறான். "வால்ஹல்லாவில் பணிபுரிய வேண்டியவர்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள்" என்று ஹை கூறுகிறான். அவர்கள் மது வகைகள் கொண்டு வந்து மேஜைகளையும் ஏல் மதுக் கிண்ணங்களையும் கவனித்து பரிமாறுவார்கள்." இதை தொடர்ந்து வால்கெய்ரிகளின் பட்டியல் அடங்கிய ஒரு சரணத்தை க்ரிம்னிஸ்மல் என்னும் கவிதையிலிருந்து ஹை வழங்குகிறான். "இந்தப்பெண்கள் வால்கெய்ரிகள் எனப்படுவார்கள், அவர்களை ஒடின் ஒவ்வொரு போருக்கும் அனுப்புவார்,அங்கே யார் இறக்க வேண்டும் என்றும் யார் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர்கள் முடிவு செய்வார்கள்" என்று ஹை கூறுகிறான். குன்னர்(யுத்தம்[15]),ரோட்டா,மற்றும் ஸ்கல்ட்-இந்த மூவரில் கடைசியாக இருப்பவள்"இளையவளான பெண் தெய்வம்" என்று தான் குறிப்பிடுபவளே-"எப்பொழுதும் போரின் முடிவையும் யார் அதில் கொல்லப்படுவார்கள் என்றும் தேர்ந்தெடுக்க செல்வாள் என்று ஹை மேலும் கூறுகிறான்.[29] அத்தியாயம் 49ல், ஒடின் மற்றும் அவன் மனைவி ஃப்ரிக்கும் தங்கள் கொல்லப்பட்ட மகன் பால்டர் என்பவனின் இறுதி சடங்கிற்கு வந்தபொழுது,அவர்களுடன் வால்கெய்ரிகளும் ஒடினின் அண்டங்காக்கைகளும் வந்தன என்று ஹை விளக்குகிறான்.[30]

ஸ்கால்டிக் கவிதையைப்பற்றி விவரங்கள் தரும் ஸ்கால்ட்ஸ்கபர்மல் என்னும் புத்தகம் நெடுகிலும் வால்கெய்ரிகளை பற்றிய குறிப்புகள் தென்படுகின்றன. அத்தியாயம் 2ல்,10வது நூற்றாண்டை சேர்ந்த ஸ்கால்ட் உல்ஃபர் உகாஸன் என்பவரின் நூலான ஹூஸ்த்ரபா என்பதிலிருந்து ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கவிதையில்,ஒரு புதிதாக கட்டப்பட்ட அறையில்,பால்டரின் இறுதி சடங்கில் ஒடினுடன் வால்கெய்ரிகளும் அண்டங்காக்கைகளும் இருக்கும் புராணக்காட்சிகளை உல்ஃபர் விரிவாக கூறுகிறார்.

அங்கே நான் வால்கெய்ரிகளையும் அண்டங்காக்கைகளையும் காண்கிறேன்,
அறிவார்ந்த வெற்றி-விருட்சம்(ஒடின்)உடன் இருப்பதை
அந்த புனித பயணத்தின் விருந்தில் -[பால்டரின் இறுதி சடங்கில்]
இந்த காட்சிகளும் தென்படுகின்றன[31]

மேலும்எய்ரிக்ஸ்மல் என்னும் நூலாசிரியரின் பெயர் தெரியாத 10வது நூற்றாண்டு நூலின் 2வது அத்தியாயத்தில் ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது (மேலும் விவரங்களுக்கும் மற்றொரு மொழிபெயர்ப்புக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபாகர்ஸ்கின்னா என்னும் பகுதியை பார்க்கவும்):

என்ன மாதிரியான கனவு அது,ஒடின்?
நான் விடிவதற்கு முன்பே எழுவது போல் கனவு கண்டேன்
கொலை செய்யப்பட்டவர்களுக்காக வால்-ஹாலை சுத்தம் செய்வதற்காக
எய்நெரியரையும் நான் எழுப்பினேன்,
அவர்களை எழச்சொல்லி அழைத்தேன் மேஜைகளை இடுவதற்காக,
மதுக்கிண்ணங்களை சுத்தம் செய்வதற்காக,
வால்கெய்ரிகள் மது பரிமாறுவதற்காக
ஒரு இளவரசனின் வருகைக்காக.[32]

அத்தியாயம் 31ல்,கவிதை நடையில் ஒரு பெண்ணை குறிப்பிடும் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன,"[அ]பெண்களை அஸினியுர் அல்லது வால்கெய்ரிகள் அல்லது பெண் தெய்வங்கள் அல்லது டிஸிர் என்றும் குறிப்பிடுகிறார்கள்" என்றும் உள்ளது.[33] அத்தியாயம் 41ல்,நாயகன் ஸிகுர்ட் தன் குதிரை க்ரானியில் சவாரி செய்யும் பொழுது,ஒரு மலையில் ஒரு கட்டிடத்தை எதிர்கொள்கிறான். அந்த கட்டிடத்திற்குள் ஒரு தலைக்கவசமும் இரும்புக்கவசமும் அணிந்து உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஸிகுர்ட் காண்கிறான் அந்த இரும்புக்கவசத்தை அவளிடமிருந்து ஸிகுர்ட் கத்திரிக்கிறான், அவள் எழுந்து விடுகிறாள். அவள் தனது பெயர் ஹில்டர் என்றும், "அவள் ப்ரைன் ஹில்டர் என்று அறியப்படுபவள்,மற்றும் ஒரு வால்கெய்ரி" என்றும் கூறுகிறாள்.[34]

அத்தியாயம் 48ல்,"போர்" என்பதற்கு கவிதை நடையில் "ஆயுதங்கள் அல்லது கவசங்களின் பருவம்,அல்லது ஒடினின் காலம் அல்லது வால்கெய்ரி அல்லது போர் அரசர்கள், அல்லது அவர்களின் மோதல்கள் அல்லது இரைச்சல்,"என்றும் அதைத்தொடர்ந்து வால்கெய்ரிகளின் பெயர்களை கீழ்காணும் விதத்தில் பயன்படுத்திய பல்வேறு ஸ்கால்ட்களின் கட்டுரைகளின் உதாரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பார்ப்ஜோர்ன் ஹார்ன்க்ளோஃபி "போர்முனை" என்பதை "ஸ்கோகுலின் இரைச்சல்" என்று பயன்படுத்துகிறார்,பெர்ஸி ஸ்கால்ட்டார்ஃப்யுசன் "வாள்" என்பதை "குன்னரின் நெருப்பு" என்றும் "போரு"க்கு "ஹ்ளாக்கின் பனி" என்றும் பயன்படுத்துகிறார்,எய்னார் ஸ்குலாசன் கவசம் என்பதை "ஹில்டரின் படகு" என்றும் "போர்" என்பதை "கோண்டுலின் நசுக்கிவிடும் காற்று" என்றும் எய்னார் ஸ்காலக்ளாம் "கோண்டுலின் இரைச்சல்" என்றும் பயன்படுத்துகிறார்கள். அத்தியாயம் 49 ஆயுதங்களையும் கவசங்களையும் குறிப்பிடும்போது இதைப்போன்ற ஒத்த விவரங்களை மேலும் உதாரணங்களுடன் அளிக்கிறது ("இறந்தவர்களுடன் இருக்கும் பெண்கள்"-பண்டைய நார்ஸ் வால்மேஜார் - "வால்கெய்ரிகள்" என்பதற்கு பதிலாக இங்கு பயன்படுத்தபட்டாலும்).[35] அத்தியாயம் 57ல், கொடுக்கப்பட்டுள்ள அஸிஞ்ஜூரின் பெயர் பட்டியலில்(பிறகு ஃப்ரேஜா என்னும் பெண் தெய்வத்திற்கு வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன)மேலும் ஒரு பகுதியில் "ஒடினின் பணிப்பெண்கள்";வால்கெய்ரிகள்: ஹில்டர், கோண்டுல், ஹ்ளாக், மிஸ்ட், ஸ்கோகுல் என்றும் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கூடுதலாக நான்கு பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன;ஹ்ருன்ட், எய்ர்,ஹ்ரிஸ்ட் மற்றும் ஸ்கல்ட். "அவர்கள் தேவையை வடிவமைக்கும் பெண் தெய்வங்கள்" என்றும் இந்த பகுதி மேலும் கூறுகிறது.[36]

ஸ்கால்ட்ஸ்கபர்மல் லில் உள்ள நஃப்னாபுலூர் என்னும் பகுதியின் சுவடிகளில் இருபத்தொன்பது வால்கெய்ரிகளின் ஒரு விரிவாக்கப்பட்ட பெயர் பட்டியல் உள்ளது("வியோரிரின் வால்கெய்ரிகள்" என்று பட்டியலிடப்பட்டுள்ளது-ஒடினின் ஒரு பெயர்). முதல் சரணம் கீழ்காண்பவர்களை பட்டியலிடுகிறது: ஹ்ரிஸ்ட், மிஸ்ட், ஹெர்ஜா, ஹ்ளாக், கெய்ரோவர், கோல், ஹ்ஜோர்ப்ரிமுல், குவோர், ஹெர்ஃப்ஜோத்ரா, ஸ்கல்ட், கெய்ரோனுல், ஸ்கோகுள், மற்றும் ரான்ட்க்னியோ. இரண்டாவது சரணம் கீழ்காண்பவர்களை பட்டியலிடுகிறது : ராக்ரியோ, கோண்டுல், ஸ்விபுல், கெய்ர்ஸ்கோகுள், ஹில்டர், ஸ்கெகால்ட், ஹ்ருன்ட், கெய்ர்ட்ரிஃபுல், ராண்ட்க்ரியோர், ப்ரூவர், ரெஜின்லெய்ஃப், ஸ்வியோ, போக்ன், ஹ்ஜால்ம்ப்ரிமுல், ப்ரிமா, மற்றும் ஸ்கால்மோல்ட்.[37]

ராஃப்ன்ஸ்மல்[தொகு]

அண்டோனி ஃப்ரெடரிக் அகஸ்டஸ் சேண்டிஸில், ஒரு வால்கெய்ரி ஒரு அண்டங்காக்கையுடன் பேசுகிறார் (1862)

முடிவு பெறாத ஸ்கால்டிக் கவிதையான ராஃப்ன்ஸ்மல் (9வது நூற்றாண்டை சார்ந்த நார்வேஜியன் ஸ்கால்ட் பார்ப்ஜோன் ஹார்ன்க்ளோஃபி என்பவரால் இயற்றப்பட்டதாக பரவலாக ஒப்புகொள்ளப்பட்டது) ஒரு வால்கெய்ரிக்கும் ஒரு அண்டங்காக்கைக்கும் இடையில் நடக்கும், பெரும்பாலும் நார்வேயின் ஹரால்ட் I என்பவரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிய உரையாடலை வர்ணிக்கிறது. ஹரால்ட் ஃபேர்ஹேர் என்பவரின் சாதனைகளை ஸ்கால்ட் கூறுவதற்காக அமர்ந்திருக்கும் கனவான்களை அமைதியாக இருக்குமாறு பணிவுடன் கேட்டுகொள்வதிலிருந்து இந்த கவிதை தொடங்குகிறது. "நல்ல சிந்தனையுடைய","தங்க நிறக் கூந்தலுடைய", மற்றும் "வெண்மையான கைகளுடைய" ஒரு பெண் பளபளவென்ற மூக்குடைய அண்டங்காக்கையிடம் பேசிக்கொண்டிருந்ததை ஒரு முறை தற்செயலாக கேட்டதாக ஆசிரியர் கூறுகிறார். அந்த வால்கெய்ரி தன்னை அறிவாளி என்று எண்ணுகிறாள்,பறவைகளின் பாஷை அறிந்திருக்கிறாள், மேலும் அவள் வெண்மையான கழுத்துடையவளாகவும்,மின்னும் கண்களை உடையவளாகவும் வர்ணிக்கப்படுகிறாள், மற்றும் அவளுக்கு ஆண்களின் பால் எந்த ஈர்ப்பும் இருப்பதில்லை:

தன்னை அறிவாளி என நினைத்துக்கொண்டாள் அந்த வால்கெய்ரி;ஆண்களை தன் பால் அழைக்காத அவள்
மின்னும் கண்களுடன்,பறவைகளின் பாஷையும் அறிந்தவளாக இருந்தாள்.
மர விளிம்பில் அமர்ந்திருந்த ஹைமிரின்

மண்டையோட்டைப் பிளந்ததைப் போல்.

முன்னர் வெண்மையாகவும் அழகாகவும் சித்தரிக்கப்பட்ட அந்த வால்கெய்ரி,குருதியால் நனைந்தும் பிண வாடை அடித்துக்கொண்டிருக்கும் அந்த அண்டங்காக்கையிடம் பேசுகிறாள்:

அண்டங்காக்கையே,-இப்பொழுது எங்கு வந்தாய் நீ
குருதியால் அலகுகள் நனைந்திருக்க,இந்த விடிகாலையில்?
அழுகிய பிணத்தின் துர்நாற்றம் வீச,உனது நகங்கள் குருதியில் நனைந்திருக்க.
இரவு வேளையில்,அருகிருந்தாயா,பிணங்களைப்பற்றி எங்ஙனம் அறிந்தாய்?[38]

அந்த கரிய அண்டங்காக்கை தன்னைத்தானே உதறிக்கொண்டு,தானும் மற்ற அண்டங்காக்கைகளும் முட்டையில் இருந்து வெளி வந்த நாள் முதலாய் ஹரால்டை தொடர்வதாய் பதிலுரைக்கிறது. ஹரால்டின் சாதனைகளைப்பற்றி அந்த வால்கெய்ரிக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் அந்த அண்டங்காக்கை தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது,மேலும் அவனுடைய சாதனைகளைப்பற்றி பல சரணங்களில் அவளுக்கு கூறுகிறது. சரணம் 15ல், ,வால்கெய்ரி ஹரால்டைப்பற்றி அண்டங்காக்கையிடம் கேள்வி கேட்பதாகவும் அதற்கு அண்டங்காக்கை பதிலிறுப்பதாகவும் ஒரு கேள்வி பதில் வடிவத்தில் உரையாடல் தொடங்குகிறது அந்த கவிதை பாதியில் முடிவடையும் வரை இது தொடர்கிறது.[39]

நஜல்ஸ் சாகா[தொகு]

ஹென்ரி டெ க்ரௌக்ஸின் ரைட் ஆஃப் தி வால்கெய்ரிஸ் (1890 வாக்கில்)

நஜல்ஸ் சாகா வின் 157வது அத்தியாயத்தில்,டோருவோ என்னும் பெயருடைய மனிதன் ஒருவன் கெய்த்னெஸ் என்னும் இடத்தில் உள்ள ஒரு கற்குடிசைக்கு புனித வெள்ளி அன்று 12 பேர் ஒன்றாக சவாரி செய்து கொண்டு சென்றதை காண்கிறான். அந்த பன்னிருவரும் குடிசைக்குள் சென்றுவிட்ட பிறகு டோருவோவால் அவர்களை பார்க்க முடியவில்லை. டோருவோ குடிசைக்கு சென்று,அதன் சுவற்றில் உள்ள ஒரு துளை வழியாக உள்ளே பார்க்கிறான். அவன் அங்கு பெண்கள் இருப்பதையும்,அவர்கள் ஒரு குறிப்பிட்ட நெசவு தறியை நிறுவியிருப்பதையும் காண்கிறான்;ஆண்களின் தலைகள் எடைகளாகவும, ஆண்களின் குடல்கள் நெசவுப்பாவு இழையாகவும் நெசவு குறுக்கு இழையாகவும்,ஒரு வாள் நெசவுத்தறி நாடாவாகவும், நூலை சுற்றி வைக்கும் உருளை அம்புகளால் ஆனதாகவும் இருக்கிறது. அந்தப்பெண்கள் டாராரல்ஜோ என்னும் பாடலை பாடுகிறார்கள்,டோருவோ அதை மனப்பாடம் செய்து கொள்கிறான்.[41]

அந்தப்பாடல் 11 சரணங்கள் உடையதாய் இருந்தது, மேலும் அந்த பாடலிலேயே வால்கெய்ரிகள் நெய்து கொண்டே க்ளான்டார்ஃப் என்னும் இடத்தில் நடக்கும் போரில் யார் கொல்லப்பட வேண்டும் என்றும் தேர்ந்தெடுக்கிறார்கள்(1014 சி.ஈ யில் ட்யூப்ளின் என்னும் இடத்திற்கு வெளியில் நடக்கும் போர்). நெய்து கொண்டிருந்த 12 வால்கெய்ரிகளில்,ஆறு வால்கெய்ரிகளின் பெயர்கள் பாடலிலேயே வருகிறது" ஹில்டர்,ஹ்ஜோர்ப்ரிமுல்,ஸாங்க்ரியோர்,ஸ்விபுல்,குவோர் மற்றும் கோண்டுல். பாடலின் 9 வது சரணம் பின் வருமாறு கூறுகிறது:

வால்கெய்ரிகள் நாங்கள் போர் கீதங்கள் இசைக்கும் பொழுது,
இரத்த சிவப்பில்
வான்மேகங்கள் தலைக்கு மேல் விரைந்து செல்கையில்
போர் வீரர்களின் குருதியில் வானமே நனைந்தது போல்
காட்சியளிப்பதை,குறிப்பிடாமல் விட முடியாது.[40]

கவிதையின் இறுதியில்,"இப்பொழுது நாம் சுழலும் வாட்களுடன் போர் புரிய-சேணம் இடாத புரவிகளுடன் விரைவாக புறப்படுவோம்!" என்று வால்கெய்ரிகள் பாடுகிறார்கள்.[40] இங்கு மீண்டும் தோன்றும் ஒரு வசன உரை,வால்கெய்ரிகள் தங்கள் நெசவுத்தறியை துண்டு துண்டாக கிழித்துப்போடுகிறார்கள் என்று கூறுகிறது. ஒவ்வொரு வால்கெய்ரியும் தனது கையில் இருப்பதை பிடித்துக்கொள்கிறார்கள். டோருவோ அந்த சுவற்றின் துளையை விட்டு நீங்கி தனது வீட்டிற்கு செல்கிறான்,அந்தப்பெண்கள் தங்கள் புரவிகளின் மீதேறி அறுவர் தென் திசையிலும் அறுவர் வட திசையிலும் செல்கிறார்கள்.

ஹெய்ம்ஸ்க்ரிங்கலா[தொகு]

எட்வர்ட் ராபர்ட் ஹக்ஸின் தி வால்கெய்ரி'ஸ் விஜில் (1906)

ஹெய்ம்ஸ்க்ரிங்கலா என்பவரின் வீரகாவியமான ஹகோனார் சாகா கோவா என்பதன் இறுதியில்,10வது நூற்றாண்டை சார்ந்த ஸ்கால்ட் எய்விந்தர் ஸ்கால்டாஸ்பில்லிர் என்பவரின் ஹகோனார்மல் என்னும் கவிதை இடம் பெறுகிறது. இந்த வீரகாவியம் பின்வருமாறு கூறுகிறது, நார்வேயின் அரசன் ஹாகான் I போரில் இறந்து விடுகிறான், அவன் கிறித்துவனாக இருந்த போதிலும்,தான் இறக்கும் போது, "நான் புற சமயத்தினருடன் இறப்பதால்,எனக்கு தகுந்தது என்று நீங்கள் தீர்மானிக்கும் கல்லறையை எனக்கு வழங்குங்கள்" என்று ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். ஹாகான் அவன் பிறந்த அதே பாறை மேடையின் மீது இறந்த பிறகு,அவன் நண்பர்களும் எதிரிகளும் ஒரு சேர துக்கம் அனுஷ்டித்து,அவனது நண்பர்கள் அவனது சடலத்தை வடக்கு ஹார்டாலாண்டில் உள்ள ஸாஹெய்ம் என்னும் இடத்திற்கு செல்வதற்கு வடக்கு திசையில் கொண்டு சென்றார்கள் என்று அந்த வீரகாவியம் மேலும் விவரிக்கிறது. அங்கு இருந்த மிகப்பெரிய சவக்குழியில் முழுகவசங்களுடனும் மிக உன்னதமான ஆடைகளுடனும்,ஆனால் வேறு விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாமல் ஹாகான் புதைக்கப்பட்டான். மேலும்,புற சமயத்தினருடைய சடங்குகளுக்கு ஏற்ப அவன் கல்லறையின் மீது வார்த்தைகள் கூறப்பட்டு அவனை வால் ஹல்லாவிற்கு செல்லும் வழியில் அனுப்பி வைத்தனர்". ஹகோனார்மல் என்னும் கவிதை பின்னர் இடம் பெறுகிறது.[41]

ஹகோனார்மல் லில்,ஒடின் கோண்டுல் மற்றும் ஸ்கோகுல் என்னும் இரு வால்கெய்ரிகளை அனுப்பி போரில் இருக்கும் அரசனின் உறவினர்கள் யார் ஒடினுடன் வால்ஹல்லாவில் இருப்பார்கள் என்று அறிந்து வரச்சொன்னான். பலத்த உயிர் சேதங்களுடன் போர் நடக்கிறது, அந்தக் கவிதையில் "போர்" என்பதை விவரிப்பதற்கு "ஸ்கோகுலின் புயல்" என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஹாகானும் அவன் மக்களும் போரில் இறந்து விடுகிறார்கள்,அப்பொழுது கோண்டுல் என்னும் வால்கெய்ரி ஒரு ஈட்டியின் மேல் சாய்ந்து கொண்டு இருப்பதை காண்கிறார்கள்."ஹாகான் இங்கு இருப்பவர்களால் மிக நன்றாக தெய்வங்களுடன் வழியனுப்பி வைக்கப்பட்டதால்,அவனை தெய்வம் தொடர்ந்து செல்லும்" என்று கோண்டுல் விமரிசனம் செய்கிறான். "வால்கெய்ரிகள் கூறியதை" ஹாகான் கேட்கிறான்,வால்கெய்ரிகள் "குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் உயர்ந்த உள்ளம் உடையவர்கள்",தலைக்கவசங்கள் அணிந்து,கேடயங்கள் தாங்கிய அவர்களை தாங்கும் குதிரைகள் உயர்ந்தவை என்றும் வர்ணிக்கப்படுகிறார்கள்.[42] ஹாகானுக்கும் வால்கெய்ரி ஸ்கோகுலுக்கும் ஒரு சிறிய உரையாடல் தொடர்கிறது:

ஹாகான் கூறுகிறான்:
எங்களுக்கு வெற்றியைத்தர ஏன் கெய்ர்ஸ்கோகுளுக்கு மனமில்லை?
கடவுளே எங்களுக்கு அதை வழங்குவதற்கு நாங்கள் தகுதியுடையவராய் இருந்தும்?"
ஸ்கோகுல் கூறுகிறாள்:
"குறிக்கோள் வெற்றியடைந்ததும்
உங்கள் எதிரிகள் சிதறியோடியதும் எங்களால்"[43]

தாங்கள் இப்பொழுது "ஆண்டவனின் பசுமையான இல்லத்தை" நோக்கி சென்று அரசன் வால்ஹல்லாவிற்கு வருவதாக ஒடினிடம் சொல்லப்போகிறோம் என்று ஸ்கோகுல் கூறுகிறாள். ஹாகான் வால்ஹல்லாவின் எய்நெர்ஜரில் ஒரு பாகமாகி விடுவதாகவும்,கொடிய ஒநாயான ஃபென்ரிருடன் போர் புரிய காத்திருப்பதாகவும் கவிதை தொடர்கிறது.[44]

ஃபாகர்ஸ்கின்னா[தொகு]

லாரன்ஸ் ஃப்ரோலிச்: ஒரு இறந்த மனிதனை வால்ஹல்லாவுக்கு கொண்டு செல்லும்போது ஹெய்ம்டல்லர் கடவுளுடன் வால்கெய்ரிகளின் சந்திப்பு.
எமில் டோப்ளரின் வால்ஹல்லா (1905)

ஃபாகர்ஸ்கின்னா வின் 8வது அத்தியாயத்தில்,தனது கணவன் எரிக் ப்ளட்ஆக்ஸ் இறந்த பிறகு,குன்ஹில்ட் அரசர்களின் மாதா அவனைப்பற்றிய ஒரு கவிதை புனைய செய்தாள் என்று ஒரு வசன உரை கூறுகிறது. 10வது நூற்றாண்டை சார்ந்த ஒரு பெயர் தெரியாத ஆசிரியரால் புனையப்பட்ட அந்த தொகுப்பு எய்ரிக்ஸ்மல் என்னும் பெயரால் அறியப்படுகிறது. எரிக் ப்ளட்ஆக்ஸும் வேறு ஐந்து அரசர்களும் தங்கள் மரணத்திற்கு பிறகு வால்ஹல்லா வருவதைப்பற்றி அது விவரிக்கிறது. ஒடினின் (பண்டைய நார்ஸ் ஒடின்) விமரிசனங்களுடன் அந்த கவிதை தொடங்குகிறது:

'என்ன மாதிரியான கனவு இது'ஒடின் கூறுகிறான்,
விடிவதற்கு முன்பாக,
வால் ஹல்லாவை சுத்தப்படுத்தி வைத்தேன்,
கொல்லப்பட்டவர்களின் வருகைக்காகவா?
எய்நெர்ஜரையும் துயிலெழுப்பி,
வால்கெய்ரிகளையும் எழுப்பி,
மேஜைகளை இடச்செய்து,
மதுவை தாங்க கிண்ணங்களை
சுத்தம் செய்ய வைத்து,
ஒரு அரசனின் வரவேற்பை போல்
என்னை எதிர்பார்க்க வைத்த
தலை சிறந்த நாயகர்கள்
உலகத்திலிருந்து வருகிறார்கள்,
பூரிப்படைகிறது என் மனம்.[45]

கடவுள் ப்ராகி எங்கிருந்து இடி இடிக்கும் சத்தம் வருகிறது என்று கேட்கிறார்,கடவுள் பால்டர் வால்ஹல்லாவிற்கு திரும்பி வந்து விட்டதைப்போல மேஜைகள் கிரீச் என்று ஒலியிடுகின்றன-மேலும் ஆயிரம் மக்கள் நடமாடுவதைப்போல அந்த ஒலி இருக்கிறது என்றும் கூறுகிறார். வால்ஹல்லாவிற்கு விரைவில் வர இருக்கும் எரிக் ப்ளட் ஆக்ஸிற்கான ஒலிகள்தான் அவை என்று ப்ராகி நன்றாக அறிவார் என்று ஒடின் பதிலுரைக்கிறார். நாயகர்கள் ஸிக்மண்ட் மற்றும் ஸின்ஃப்ஜோட்லியிடம் எரிக் வரும்பொழுது அது அவராக இருந்தால், அவரை வரவேற்று வரவேற்பறைக்கு அழைத்துவருமாறு ஒடின் கூறுகிறார்.[46]

ரகநில்ட் ட்ரெகாகஸ் மந்திரம்.[தொகு]

1324ல் நார்வேயின் பெர்கனில் நடந்த ஒரு பில்லிசூனிய வழக்கு,குற்றவாளி ரகநில்ட் ட்ரெகாகஸ்,பார்ட் என்னும் பெயர் கொண்ட தனது முன்னாள் காதலனின் திருமணத்தை முடிப்பதற்காக ஒரு சூனியம் செய்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மந்திரத்தில் வால்கெய்ரி கோண்டுல் "வெளியே அனுப்பப்படுவதாக" குறிப்பிடப்படுகிறது:

என்னுள்ளிலிருந்து கோண்டுலின்(வால்கெய்ரி)சக்தியை வெளியேற்றுகிறேன்.
முதலாவது உனது பின்பக்கத்தை கடிக்கட்டும்.
இரண்டாவது உனது மார்பை கடிக்கட்டும்.
மூன்றாவது உன் மேல் வெறுப்பையும் பொறாமையையும் ஏவட்டும்.[47]

பண்டைய ஆங்கில சான்றுகள்[தொகு]

செர்மோ லுபி அட் ஆங்கிலோஸிலிருந்து ஒரு பக்கம்.

பண்டைய ஆங்கில கையெழுத்துப்பிரதிகளில்,பொதுவாக வெளிநாட்டு கருத்துக்களை பண்டைய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது, பண்டைய ஆங்கிலமான வெல்கைர்ஜ் மற்றும் வெல்கைரி என்னும் வார்த்தைகள் பல முறை தென்படுகின்றன. உல்ஃப்ஸ்தான் என்பவர் எழுதிய ஸெர்மோ லுபி மற்றும் ஆங்கிலோஸ் என்னும் நீதி போதனையில் வெல்கைரி என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது,அது மனித உருவில் இருக்கும் "பயங்கரமான சூனியக்காரி" என்பதை குறிப்பதாக கருதப்படுகிறது.[48] 11வது நூற்றாண்டை சார்ந்த அல்டெலம் என்பவரின் கையெழுத்துப்பிரதியான டெ லாடிஸ் வர்ஜினிடாடிஸ் (ஆக்ஸ்போர்ட்,பாட்லெயன் நூலகம்,டிக்பி 146)என்பது வெல்கைர்ஜ் என்பதை யூனெரிஸ் என்பதுடன் விளக்குகிறது("பெண் தெய்வம்" என்னும் பொருள்படும் கைடீன் என்பதுடன்). வெல்கைர்ஜ் என்பது இரண்டு கையெழுத்துப்பிரதிகளில் இலக்கியங்களில் காணப்படும் சண்டைக்காரிகளின் பெயர்களை மொழிபெயர்க்க பயன்படுத்தப்பட்டது(காட்டன் கிளியோபாட் ரா ஏ.iii, மற்றும் பண்டைய இலக்கிய அரும்பதவுரைத்தொகுதி ). காட்டன் கிளியோபாட்ரா ஏ.iii என்னும் கையெழுத்துப்பிரதியில், வெல்கைர்ஜ் என்பது ரோமானியப்பெண் கடவுளான பெல்லோனாவை விளக்க பயன்படுத்தப்படுகிறது. எகிப்திய படையின் மீது பறந்து செல்கிற ஒரு அண்டங்காக்கையை வர்ணிப்பது வோன் வெல்ஸீசெக் ("கொல்லப்படுபவரை தேர்ந்தெடுக்கும் கரியவன்" என்ற பொருள்படுவது)என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சான்றுகள் நார்ஸூகளுடன் ஆங்கிலோ சாக்ஸன்களும் பகிர்ந்து கொண்ட முதற் தோன்றிய ஒரு நம்பிக்கையா, அல்லது பின்னர் வந்த நார்ஸ் கலாசாரத்தின் தாக்கமா என்ற விவாதங்களை அறிஞர்களின் கருத்துக்கள் முன் வைக்கின்றன (கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பகுதியை காண்க).[48]

அகழ்வாராய்ச்சி பதிவுகள்[தொகு]

பெண் உருவங்களும், குவளை மற்றும் கொம்பு-ஏந்தியவர்களும்[தொகு]

குதிரையின் மீதிருக்கும் ஒரு உருவம் கேடயம் தாங்கியிருக்கும் (இடது) ஒரு உருவத்தைச் சந்திக்கிறது மற்றும் எண்ணற்ற பெண் வெள்ளி உருவங்களில் ஒன்று (வலது)

பெண்களை நீண்ட ஆடைகளை அணிந்தவராய்,அவர்கள் கூந்தல் பின்னால் முடியப்பட்டவராய்,சில சமயங்களில் கொம்பினால் செய்யப்பட்ட மதுக்கிண்ணங்களை ஏந்தியவர்களாய் சித்தரிக்கும் படங்கள் ஸ்காண்டிநேவிய கடற்கொள்ளை வீரர் வைகிங் காலத்தியவெள்ளி தாயத்துகளில் ஸ்காண்டிநேவியா முழுவதும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த உருவங்கள் வால்கெய்ரிகளையோ அல்லது பெண் தெய்வங்களான டிஸிரையோ குறிப்பதாய் கருதப்படுகின்றது.[49] மிண்டி மெக்லியோட் மற்றும் பெர்னார்ட் மீஸ் ஆகியோரை பொறுத்தவரை,அந்த தாயத்துக்கள் வைகிங் காலத்து கல்லறைகளில் காணப்படுகிறது,"அவை காக்கும் சக்தியுடையதாய் நம்பப்பட்டதால்தான்"அங்கே வைக்கப்பட்டிருந்தன என்று கூறப்படுகிறது.[47]

ஸ்வீடனின் கோட்லாண்ட் தீவிலிருக்கும் ஜாங்க்வைட் உருவச்சிலையில்,எட்டு கால்கள் கொண்ட குதிரை மீது ஒருவர் சவாரி செய்வது போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது, அது ஒடினின் எண்கால் குதிரை ஸ்லெய்ப்னிர் ஆக இருக்கலாம்,அதை வரவேற்பது போல் உள்ள பெண் உருவம், வால்ஹல்லாவில் உள்ள ஒரு வால்கெய்ரியாக இருக்கலாம்.[50] 11வது நூற்றாண்டு கல்வெட்டுகளில் யூ 1163 ஒரு பெண் கொம்பு ஒன்றை ஏந்தியிருப்பதை போன்று செதுக்கப்பட்ட சிற்பத்தை சித்தரிக்கின்றது அது வால்கெய்ரி ஸிகர்ட்ரிஃபா ஸிகுர்ட் என்ற நாயகனுக்கு(இதுவும் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது) கொம்பால் செய்யப்பட்ட கிண்ணத்தில் மதுவை அளிக்கும் காட்சியாக கூறப்படுகிறது.[51]

பண்டைய ஜெர்மானிய எழுத்துக் கல்வெட்டுக்கள்[தொகு]

தி ராக் ரூன்ஸ்டோன்.

இரண்டு கல்வெட்டுகளில் சில குறிப்பிட்ட வால்கெய்ரிகளைப்பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது;ஸ்வீடனின் ஆஸ்டர்கோட்லாண்ட்டில் உள்ள 9வது நூற்றாண்டின் தொடக்க காலத்திய ராக் கல்வெட்டு மற்றும் ஸ்வீடனின் ஒலான்ட் என்னும் இடத்தில் உள்ள 10வது நூற்றாண்டின் கார்லெவி கல்வெட்டு ஆகியவற்றில் ப்ரூவர் என்னும் வால்கெய்ரியைப்பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.[47] ராக் கல்வெட்டில்,ஒரு வால்கெய்ரி தனது புரவி போல ஒநாயின் மேல் சவாரி செய்வதாக ஒரு சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பன்னிரண்டாவதை பார்த்து கூறுகிறோம்,இருபது அரசரின் சடலங்கள் கிடக்கும் போர்முனையில் வால்கெய்ரியின் குதிரை [உண்மையில் "குன்னின் குதிரை"]உணவை பார்க்கிறது.[52]

நார்வேயில் உள்ள பெர்கெனில் காணப்பட்ட ப்ரிக்கென் கல்வெட்டுகளில், 14வது நூற்றாண்டின் இறுதி காலத்திய "வால்கெய்ரியின் கோல்" காணப்படுகிறது. அந்தக்கோல் மந்திரம் இடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு மந்திர வார்த்தையை குறிக்கிறது. "நான் மந்திரங்களை உடைப்பேன்,சீர் செய்வேன்" மற்றும் "மந்திரங்களுக்கு உதவி செய்வேன்",ஒரு முறை சூனியம் செய்பவர்களுக்கு எதிராக,இரு முறை அரக்கர்களுக்கு எதிராக,மூன்று முறை தர்ஸூக்கு எதிராக,என்று அந்த கல்வெட்டு கூறுகிறது,அதைத்தொடர்ந்து ஒரு வால்கெய்ரி கூறுவது வருகிறது"

புண்படுத்துகிற ஸ்காக் வால்கெய்ரிக்கு எதிராக,
இதனால் அவள் எப்பொழுதும் பெண்களுக்கு தீங்கிழைக்க முடியாதபடி,அவள் எப்பொழுதும்-
பெண்களுக்கு தீங்கிழைக்க மாட்டாள்

!-காயப்படுத்தமாட்டாள்(?) உங்கள் வாழ்வை.[53]

இதைத்தொடர்ந்து,"உன்னிடம் அனுப்புகிறேன்,உன்னைப்பார்க்கிறேன்,ஒநாயின் வக்கிரத்துடன்,மற்றும் பொறுக்க முடியாத ஆசையினாலும்,ஜோலுன் னின் சீற்றத்தினால் உன்னை கடுந்துன்பம் வந்தடையட்டும். எப்பொழுதும் நீ அமர முடியாமலும்,எப்பொழுதும் நீ உறங்க முடியாமலும்...(அதாவது நீ)தன்னை போலவே என்னை நேசிப்பாய்." மின்டி மெக்லியோட் மற்றும் பெர்னார்ட் மீஸை பொறுத்தவரை, அந்த கல்வெட்டு "ஒரு நற்செயலை செய்வது போல தொடங்குகிறது ஆனால் இடையிலேயே திடீரென்று தீங்கிழைக்கிற வால்கெய்ரியை விட மந்திரத்தை பெறுபவரே கடுந்துன்பமும் வேதனைகளும் அனுபவிக்குமாறு சபிப்பது போல் தோன்றுகிறது,"ஒரு பெண்ணின் நேசத்தைப்பெற பகை உள்ளத்தோடு பிரயோகிக்கப்பட்ட ஒரு மந்திரம்" என்று பொருள்படுவது போல அதன் இறுதி வரிகள் இருப்பதாக அவர்கள் விளக்குகிறார்கள்.[54]

அந்த மந்திரத்தின் தொடக்க வரிகள் ஸிக்ரிட்ரிஃப்யூமல் என்னும் பொயடிக் எட்டா கவிதையில் இடம் பெறுவதாக மெக்லியோட் மற்றும் மீஸ் கூறுகிறார்கள்,இதில் வால்கெய்ரி ஸிக்ர்டிரிஃபா மந்திர உபதேசம் செய்கிறாள்,ஸ்காக் என்பதன் பொருள் தெளிவற்றதாய் இருந்தாலும், இதில் ஹெல்காக்வியா ஹூண்டிங்க்ஸ்பனா I வுடன் ஒரு தொடர்பு இருப்பதாகவும் அதில் ஸின்ஃப்ஜோட்லி ஒரு முறை ஸ்காஸ் வால்கெய்ரியாக இருந்ததாக கோமுந்தர் என்பவனை குற்றம் சாட்டுகிறாள் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். அந்த வார்த்தைக்கு "தெய்விக ஆற்றலால் அனுப்பப்பட்டவர்",என்பது போல பொருள்படுவதாய் நினைப்பதாகவும் மேலும் ஒரு வால்கெய்ரி அனுப்பப்படுவதாய் ராகநில்ட் ட்ரெகாகஸ் மந்திரம் என்னும் கவிதையில் தென்படுவதால் அதனுடன் இந்த வார்த்தைகள் தொடர்பு கொண்டவையாய் தோன்றுகிறது என்றும் மெக்லியோட் மற்றும் மீஸ் கூறுகிறார்கள்.[54]

வால்கெய்ரி பெயர்கள்[தொகு]

புரோஸ் எட்டா புத்தகமான ஸ்கால்ட்ஸ்கபர்மல் என்னும் பண்டைய கால கவிதையின் பகுதிகளானவோலுஸ்பா க்ரிம்னிஸ்மல் டாராரல்ஜோ நஃப்னாபுலுர் ஆகியவை வால்கெய்ரிகளின் பெயர்ப்பட்டியலை வழங்குகிறது. கூடுதலாக,சில வால்கெய்ரி பெயர்கள் இந்தப்பட்டியலை தவிர்த்து தனியாகவும் தென்படுகின்றன,உதாரணத்திற்கு ஸிக்ருன் (ஹெல்காக்வியா ஹூண்டிங்க்ஸ்பனா I மற்றும் ஹெல்காக்வியா ஹூண்டிங்க்ஸ்பனா II ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது). பல வால்கெய்ரி பெயர்கள் போர்களுடன் ஒரு தொடர்பை வலியுறுத்துகின்றன,பல சமயங்களில்,கடவுள் ஒடின்னுடன் மிகுந்த தொடர்புடைய ஆயுதமான ஈட்டியுடன்.[55] சில அறிஞர்கள் வால்கெய்ரிகளின் பெயர்களுக்கு சுயமாக தனித்துவம் ஏதுமில்லையென்றும்,அவை போர்-பெண் கடவுளர்களின் இயல்பையும் தோற்றக்கூறுகளையும் விளக்குபவை என்றும் மேலும் அவை ஸ்கால்ட் என அழைக்கப்படும் ஸ்காண்டிநேவிய வீரகாதை கவிஞர்களின் கற்பனை படைப்புகளே என்றும் கூறுகிறார்கள்.[56]

சில வால்கெய்ரிகளின் பெயர்கள் அவர்களுடைய பணிகளையும் அவர்கள் திறமைகளையும் விளக்குவதாய் இருக்கின்றன. ஹெர்ஜா என்னும் வால்கெய்ரியின் பெயர் 187 சீஈ கல்வெட்டுகளில் காணப்படும் ஹரியாஸா என்னும் கடவுளின் பெயருடன் தொடர்புடையதாய் சில கருத்துக்கள் உள்ளன.[57] ஹெர்ஃப்ஜோதுர் என்னும் பெயர் வால்கெய்ரிகளின் விலங்கிடும் திறமைக்கு தொடர்புடைதாய் கருதப்படுகிறது.[58] ஸ்விபுல் என்னும் பெயர் விதி என்பதன் ஜெர்மானிய கருத்தான வைர்ட் அல்லது ஆர்லாக் என்பதின் மீது வால்கெய்ரிகளுக்கு உள்ள செல்வாக்கை விளக்குவதாக இருக்கலாம்.[59]

கருத்தாக்கங்கள்[தொகு]

பண்டைய ஆங்கில வேல்கிர்ஜ் மற்றும் பண்டைய ஆங்கில மந்திரங்கள்[தொகு]

இங்கிலாந்தின் சுஃபோக்கிலுள்ள சுட்டன் ஹூவில் ஒரு ஆங்கில-சாக்ஸன் பிணக்குழி மேடு.

ஒரு அண்டங்காக்கை எகிப்திய படையின் மீது பறந்து செல்வதாக கூறப்படும் வர்ணனை(வான் வால்ஸீசெக் என பொருள்படுத்தப்பட்டது)வால் ஹல்லாவின் பண்டைய நார்ஸ் கருத்துக்களின் நேரடி தாக்கமாக இருக்கலாமென்று ரிச்சர்ட் நார்த் கூறுகிறார்,டெ லாடிபியஸ் வர்ஜினிடாடிஸ் என்பதில் உள்ள வால்கைர்ஜ் என்னும் பதம் பண்டைய நார்ஸ் வால்கைர்ஜா விலிருந்து இரவல் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்ட அல்லது இரவல் பெற்று மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பதமாக இருக்கலாம்,ஆனால் "அது சம காலத்திய ஸ்காண்டிநேவியன் தாக்கம் ஏதும் இல்லாத ஆங்கிலோ-சாக்ஸன் வெல்கைர்ஜ் என்பதன் கருத்தாக்கமாக தென்படுகிறது" என்று காட்டன் கிளியோபாட்ரா ஏ.iii மற்றும் கார்பஸ் கிளாஸரி எடுத்துரைக்கிறது.[48]

ஆங்கிலோ-சாக்ஸன் எண்ணமான வால்கெய்ரிகள் அல்லது வால்கெய்ரியை போன்ற பெண் உருவங்களை இரண்டு பண்டைய ஆங்கில மந்திரங்கள் குறிப்பதாக கருதப்படுகின்றன;வியோ ஃபேர்ஸ்டைஸ் ,திடீர் வலி அல்லது விலாக்குத்தல் வலியை குணப்படுத்தும் ஒரு மந்திரம்,மற்றும் தேனீக்கூட்டத்திற்கு ,தேனீக்கள் மொய்ப்பதை தடுப்பதற்கு ஒரு மந்திரம். வியோ ஃபேர்ஸ்டைஸ் என்பதில்,திடீர் வலி என்பது "கடும் பாய்ச்சலு"டன் இரைச்சலோடு பறக்கும் பிணமேட்டின் மீது சவாரி செய்த "சக்தி வாய்ந்த பெண்களின்"(பண்டைய ஆங்கில மிட்டிகன் விஃப் ) தெய்வீக ஆற்றலால் எறியப்பட்ட ஒரு பேரிரைச்சலோடு வரும் சின்ன ஈட்டியால் ஏற்படும் வலியாக தொடர்புபடுத்தப்படுகிறது(பண்டைய ஆங்கில மேகன் ).

அவை இருந்தன சத்தமாக,ஆம்,சத்தமாக,
அந்த (பிண)மேட்டின் மீது சவாரி செய்த போது;
நிலத்தில் அவர்கள் சவாரி செய்த போது அவர்கள் கடும் பாய்ச்சலுடன் இருந்தனர்.
இப்பொழுது உங்களை காத்துக்கொள்ளுங்கள், இந்த சண்டையிலிருந்து நீங்கள் தப்ப முடியும்.
இங்கு இருப்பின்,வெளியே வா,சிறிய ஈட்டியே.
இளமஞ்சள் மலர்களையுடைய மரத்திற்கு கீழே/பின்னால் அது நின்றிருந்தது(அதாவது ஒரு கவசம்),ஒரு இள நிறமுள்ள/மெல்லிய-எடையுள்ள கவசம்,
அதில் அந்த சக்தி வாய்ந்த பெண்கள் தங்கள் சக்திகளை காட்டி,பேரிரைச்சலுடன் ஈட்டிகளை அனுப்பினார்கள்.[60]

இந்த உருவங்கள் வால்கெய்ரிகளுடன் தொடர்புடையவையாய் கருத்துக்கள் நிலவுகின்றன.[61] "கவிஞர்கள் இந்த பெண்களை எப்படிப்பட்டவர்களாக கற்பனை செய்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லையென்றாலும்,அவர்களின் பெண் பாலினம்,பறந்து சவாரி செய்வது மற்றும் ஈட்டிகளை எறிவது போன்றன இங்கிலாந்தில் பிற்காலத்திய நார்ஸில் உள்ள வால்கைர்ஜூர் " என்பவர்களுடன் ஒத்த பெண்ணாய் கற்பனை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுவதாய் ரிச்சர்ட் நார்த் கூறுகிறார்.[62] வியோ ஃபேர்ஸ்டைஸ் என்பது தொடக்கத்தில் ஒரு போர் மந்திரமாக இருந்ததாகவும்,காலப்போக்கில், ஒரு சாதாரணமான விலாக்குத்து நோயாக குறைந்து விட்டதாகவும் ஹில்டா எல்லிஸ் டேவிட்சன் என்பவர் கருத்துரைக்கிறார்.[63] தேனீக்கள் கூட்டத்திற்காக என்பதன் இறுதியில்,மொய்க்கும் தேனீக்கள் என்பது "வெற்றியடைந்த பெண்டிர்"(பண்டைய ஆங்கிலமான ஸைக்விஃப் ) என்பதைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது:

வெற்றியடைந்த பெண்டிரே,ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்,
கோபப்பட்டு காடுகளுக்கு திரும்பி விடாதீர்கள்.
எனது நலனை மனதில் கொள்ளுங்கள்,
ஒவ்வொரு மனிதனும் உண்பதையும் வீட்டையும் கொள்வது போல.[64]

வால்கெய்ரிகளுடன் கூட்டிணையாக இருப்பதை "வெற்றியடைந்த பெண்டிர்" என்னும் பதம் சுட்டிக்காட்டுவதாக கருதப்படுகிறது. இந்த கருத்து உலகம் முழுவதும் ஏற்றுகொள்ளப்படவில்லை,மற்றும் அந்த குறிப்பு தேனீக்களின் "வெற்றிகரமான வாள்"(கொட்டும் கொடுக்கு)என்பதற்கு ஒரு உருவகமாக கருதப்படுகிறது.[64]

மெர்ஸ்பர்க் மந்திர உச்சரிப்புக்கள், கால்விலங்குகள், டிசிர், இடிசி மற்றும் ஸ்காண்டிநேவிய புராண தெய்வங்களான நார்ன்[தொகு]

எமில் டோப்ளரின் இடிஸ் (1905)

இரண்டு பண்டைய உயர்ந்த ஜெர்மானிய மெர்ஸ்பர்க் மந்திர உச்சரிப்புக்களில் ஒன்று ஒரு படையை கட்டுவதற்கும் தடைகள் ஏற்படுத்துவதற்கும் பெண்களை-இடிசி அழைக்கின்றது. அந்த மந்திர உச்சரிப்பு பின் வருமாறு கூறுகிறது:

ஒரு முறை இடிசி அமர்ந்தாள், இங்கும் அங்கும் அமர்ந்தாள்,
சிலர் விலங்குகளை இட்டனர்,சிலர் படையினருக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர்,
சிலர் விலங்கு சங்கிலிகளை பிரித்தனர்:
விலங்கு சங்கிலிகளிலிருந்து தப்பித்துக்கொள்,எதிரிகளிடமிருந்து ஒடி விடு.[65]

அந்த மந்திர உச்சரிப்புகளில் குறிப்பிடப்படும் இடிசி என்பது பொதுவாக வால்கெய்ரிகளாக கருதப்படுகிறது. "இந்த இடிசி என்பது வால்கெய்ரியின் ஒரு வகையை சேர்ந்தவர்கள்,நார்ஸ் புராணங்களில் எதிரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் சக்தியுடையவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்" என்று ருடால்ஃப் சிமெக் கூறுகிறார்,மேலும் இதனுடன் தொடர்புடையதாய் ஹெர்ஃப்ஜோதுர் (பண்டைய நார்ஸின் படை-விலங்கிடுபவர்) என்னும் வால்கெய்ரியையும் சுட்டிக்காட்டுகிறார்.[65] இந்த மந்திர உச்சரிப்புகளை பண்டைய ஆங்கில வியோ ஃபேர்ஸ்டைஸ் மந்திரத்துடன் ஒப்பிட்டு,இரண்டினுடைய செயல்களும் ஒத்தவை என்று கருத்துரைக்கிறார் ஹில்டா ஆர். டேவிட்சன் என்பவர்.[63]

மேல் ஜெர்மானிய பதமான இடிசி (பண்டைய சாக்ஸன் இடிஸ் ,பண்டைய உயர்ந்த ஜெர்மானிய இட்டிஸ் ,பண்டைய ஆங்கில ஐட்ஸ் )"மதிப்பிற்குரிய,மரியாதைக்குரிய பெண்டிர்(மணம் ஆனவர் அல்லது மணமாகாதவர்)என்றும் ,எந்த பெண்ணையும் குறிக்கக்கூடிய ஒரு பதம்,எனவே லத்தீனின் மேட்ரோனா என்பதை விளக்கக்கூடியது"என்றும் மேலும் வட ஜெர்மானிய பதமான டிஸிர் என்பதுடன் தொடர்புடையதாய் ஏற்று கொள்ள, சர்ச்சைகளுக்கு உட்பட்டதுதான் என்ற போதிலும் வலுவான காரணங்கள் இருக்கிறது என்றும் சிமெக் கூறுகிறார். கூடுதலாக,இடிஸியாவிஸோ("இடிஸியின் நிலம்" என்னும் பொருள்படுவது)என்பது 16 சீஈ யில் வெஸர் ரிவர் என்னும் போரில் ஆர்மினியஸின் படைகள் ஜெர்மானிக்கஸின் படைகளுடன் மோதிய இடம்.சிமெக் இடிஸியாவிஸோ ,இரண்டு மெர்ஸ்பெர்க் மந்திர உச்சரிப்புகளில் இடிஸியின் பங்கு மற்றும் வால்கெய்ரிகளுக்கு இடையேயான தொடர்பை சுட்டி காட்டுகிறார்.[65]

டிஸிரை பொறுத்தவரை,பண்டைய நார்ஸில் டிஸ் என்பது பண்டைய உயர்ந்த ஜெர்மானிய இட்டிஸ் ,பண்டைய சாக்ஸன் இடிஸ் ,மற்றும் பண்டைய ஆங்கில ஐட்ஸ் போலவே எளிமையாக "பெண்" என்பதை குறிக்கும் பதமாக தென்படுவதாகவும், மற்றும் ஒரு வித பெண் தெய்வங்களை குறிப்பதற்கும் பயன்பட்டிருக்கலாம் என்றும் சிமெக் உரைக்கிறார். சிமெக்கை பொறுத்தவரை,"பல்வகை எட்டிக் மூலங்கள் டிஸிர் என்பவை வால்கெய்ரியை போன்ற இறந்தவர்களின் பாதுகாவலர்கள் என்று ஒரு முடிவான கருத்துக்கு நம்மை அழைத்து செல்கிறது, அதிலும் கோருனார்க்வியா I 19 என்பதில் வால்கெய்ரிகள் ஹெர்ஜான்ஸ் டிஸிர் "ஒடினின் டிஸிர்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். அட்லாமல் 28ல் டிஸிர் என்பவை இறந்த பெண்டிர் என வெளிப்படையாக கூறப்படுகின்றது மற்றும் இரண்டாவது கருத்து ஒன்று டிஸிர் என்பவை இறந்த பெண்டிரின் ஆத்மாக்கள் என்றும்(ஃபில்க்ஜூர் என்பதை காண்க)மேலும் ஐஸ்லாண்டின் மரபு நம்பிக்கையான லாண்ட்டிஸிரை யும் உள்ளடக்கியது.[66] "மேட்ரான் என்பவற்றின் செயல்கள் பல்வேறு விதமாக-வளமை தரும் தெய்வம், மெய்க்காப்பாளர்கள், ஆனால் போர் கடவுளர்கள் என இருந்ததைப்போலவே - டிஸிர் என்பதில் உள்ள நம்பிக்கை,வால்கெய்ரிகளில் உள்ள நம்பிக்கையைப்போலவே, ஸ்காண்டிநேவிய பெண் தெய்வங்கள், மற்றும் மேட்ரன்கள், போன்றவை பல வகையான பெண்(பாதி-?) தெய்வங்களின் மேல் இருக்கும் நம்பிக்கைகளை காட்டும் பல வகையான வெளிப்பாடுகள் என சிமெக் கூறுகிறார்.[66]

ஸ்காண்டிநேவிய பெண்தெய்வங்களான நார்ன்களும் வால்கெய்ரிகளும் இயல்பில் ஒத்தவையாக இருந்தாலும்,இரண்டிற்கும் அடிப்படை வித்தியாசம் ஒன்றிருப்பதாக ஜேகப் க்ரிம் என்பவர் கூறுகிறார். ஒரு டிஸ் என்பது பெண் தெய்வமாகவும் வால்கெய்ரியாகவும் இருக்கலாம்,"ஆனால் அவர்கள் செயல்பாடுகள் தனியாக இருக்கும் மற்றும் பெரும்பாலும் ஆட்களே வேறானவர்களாக இருப்பார்கள்" என்று க்ரிம் கூறுகிறார். நார்ன்கள் என்பவர்கள் விதியின் தீர்ப்பை வழங்க வேண்டும்,அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்கிறார்கள், அல்லது நாடு முழுவதும் திரிந்து இறக்க வேண்டியவர்களின் இடையில் தங்கள் கயிறுகளை இறுக்குகிறார்கள். அவர்கள் சவாரி செய்வதாய் எங்குமே குறிப்பிடப்படவில்லை. வால்கெய்ரிகள் போருக்கு பயணம் செய்கிறார்கள்,சண்டையின் விளைவுகளை முடிவு செய்கிறார்கள், மற்றும் இறந்தவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்; அவர்களின் பயணம் நாயகர்கள் மற்றும் கடவுள்களை போன்றது[...]."[67]

தோற்றமும் வளர்ச்சியும்[தொகு]

ஜோஹென்ஸ் கெர்ட்ஸின் தி நார்ன்ஸ் (1889)

ஜெர்மானிய பேகனிஸத்திலிருந்து பிற்காலத்திய நார்ஸ் புராணங்கள் வரை வால்கெய்ரிகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை பற்றி பல வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. வால்கெய்ரிகள் தொடக்கத்தில் "போர்முனையில் கொல்லப்பட்ட வீரர்கள் சொந்தமாகும் இறந்தவர்களின் ஆவியாக "கருதப்பட்டிருக்கலாம் என்று ருடால்ஃப் சிமெக் யோசனை கூறுகிறார்,மேலும் "வால்ஹல்லா என்பதன் கருத்து போர்முனை என்பதிலிருந்து வீரர்களின் சொர்க்கம் என்னும் கருத்து மாற்றம் ஏற்பட்ட பிறகு வால்கெய்ரிகள் என்னும் பதத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார். இந்த தொடக்க காலத்து கருத்து "பின்னர் கவசப்பெண்கள்-வால்ஹாலில் இருந்த எய்நெர்ஜரை ப்போல வாழ்ந்த ஐரிஷ் பெண் போர் வீராங்கனைகள் என்னும் கருத்தால் மாற்றப்பட்டது" என்று சிமெக் உரைக்கிறார். வால்கெய்ரிகள் ஒடினுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாய் இருந்தார்கள்,மேலும் இந்த தொடர்பு "மரணத்தின் ஆவி"யாக செயல்படுவதில் இருந்தது என்று சிமெக் கூறுகிறார். இந்த கருத்து மாற்றத்தால், வால்கெய்ரிகள் சாதனை மிக்க நாயகர்களின் கவிதைகளில் புகழ்மிக்க பாத்திரங்களாய் ஆகி விட்டார்கள்,மேலும் இந்த மாற்றத்தின் போது "ஆவியுலக குணாதிசயங்களை நீக்கி விட்டு மனித குணம் கொண்டவர்களாக,அதனால் இறப்புக்கு கட்டுப்பட்ட மனிதர்களுடன் காதல் கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாறினார்கள்[...]" என்று சிமெக் எடுத்துரைக்கிறார். வால்கெய்ரிகளின் பெயர்கள் பெரும்பாலும் போர் போன்ற செயல்களை குறிப்பதாகவும்,அவர்கள் பெயர்கள் மிகவும் பழமையானதாக தோன்றவில்லையென்றும்,அவை உண்மையான மரபு நம்பிக்கையிலிருந்து வந்ததை விட கவிதைகளுக்காக புனையப்பட்ட கற்பனைகளிலிருந்து வந்தவை" என்றும் சிமெக் கூறுகிறார்.[68]

"பிற்காலத்திய நார்ஸ் புராணங்களில் பிணங்களை தேர்ந்தெடுக்கும் வால்கெய்ரிகளின் செயல்பாடுகள் நார்ன் என்னும் மனித விதியை நிர்ணயம் செய்யும் தெய்வீக ஆற்றலுடைய பெண் தெய்வங்களுடன் ஒப்பிடப்பட்டு அதிக குழப்பத்தை உண்டு பண்ணியதாக" மெக்லியோட் மற்றும் மீஸ் கருத்துரைக்கிறார்கள்.[...]."[69]

ஹில்டா எல்லிஸ் டேவிட்சன் கூறுகிறார்,"தெளிவாக ஒரு விவரமான இலக்கிய பாத்திரம் பல தலைமுறைகளை சேர்ந்த கவிஞர்கள் மற்றும் கதை கூறுபவர்களால் எழுப்பப்பட்டிருக்கிறது,அதில் பல கருத்துக்கள் உணர்த்தப்பட்டிருக்கின்றன. நார்ன் எனப்படும் மனித விதியை நிர்ணயிக்கும் ஆவிகள்; தங்கள் மந்திரத்தால் போரில் வீரர்களை காக்கக்கூடிய தெய்வீக ஆற்றலுடைய பெண்கள்;தனது பாதுகாப்பினால் இளையவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு தரும், சில குடும்பங்களை சார்ந்த சக்திமிக்க பாதுகாக்கும் பெண் ஆத்மாக்கள்; ப்ளாக் ஸீ எனப்படுவதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள சரித்திர ஆதாரங்கள் உள்ள கவசமிட்டு ஆண்களைப்போல போர் புரிந்த சில பெண்கள் ஆகியவை நார்ன் எனப்படுபவர்களுடன் தொடர்புடையதாய் உணர்கிறோம். "போர்க்கடவுளின் சமய குருக்களாக,போருக்கு பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட பிறகு நடக்கும் பலி யாகங்களில் தலைமை தாங்கும் பெண்களை"ப்பற்றி நினைவு கூறுவதாகவும் இது இருக்கலாம் என்று அவர் மேலும் கூறுகிறார்.[70]

வால்கெய்ரி என்பது "கொல்லப்படுபவர்களை தேர்ந்தெடுப்பவர்கள்" என்று நேரான பொருள்படும் என்னும் உண்மையை டேவிட்சன் அழுத்தமாக எடுத்துரைக்கிறார். அவர் உல்ஃப்ஸ்தான் என்பவரின் தனது ஸெர்மோ லுபி உரையை ஒப்பிடுகிறார்,அது "பாவம் செய்தவர்கள்,சூனியக்காரர்கள் மற்றும் கெடுதல் செய்பவர்கள்" என்பவர்களின் பாவப்பட்டியலின் இடையே தென்படும் "கொல்லப்படுபவர்களை தேர்ந்தெடுப்பவர்" என்று கூறியிருப்பதை,"அவர் குறிப்பிடும் மற்ற எல்லா வகைகளை சார்ந்தவர்"களோடும் ஒப்பிட்டு,"அவர்கள் மனிதப்பிறவிகள்,ஆனால் அவர்களை புராணக்கதை பாத்திரங்களாய் அவர் அறிமுகம் செய்திருப்பது இயல்பானதாய் இல்லை" என்று தீர்மானமாக கூறுகிறார். அராபிய பயணியான இபன் ஃபாட்லானின் 10வது நூற்றாண்டை சார்ந்த வோல்கா ஆற்றில் நடைபெற்ற ரஸ்கப்பல் இறுதி சடங்கின் விவரமான குறிப்புகள் ஒரு அடிமைப்பெண்ணை கொல்வதை செயல்படுத்தும், ஃபாட்லான் மகள்கள் என குறிப்பிடும் வேறு இரண்டு பெண்களுடன் "பார்ப்பதற்கு மலைக்க வைக்கிற,கடுமையான தோற்றமுடைய,முதிய ஹன்னிஷ் பெண்மணி"("மரணத்தின் தேவதை" என ஃபாட்லான் குறிப்பிடுவர்)ஒருவரை சித்தரிக்கிறது என்று டேவிட்சன் சுட்டி காட்டுகிறது. "தங்கள் கொடிய செயல்களால் தங்கள் இனத்தவரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்டிரைப்பற்றி புராணக்கதைகள் உருவானால் அது ஆச்சரியப்படக்கூடியதாய் இருக்காது" என்று டேவிட்சன் கூறுகிறார். எந்தக்கைதிகள் கொல்லப்பட வேண்டுமென்பது நிறைய பேரால் முடிவு செய்யப்படுவது என்பதால்,சமய குருக்களின் மூலமாக கடவுள் தனது பலியை "தேர்ந்தெடுக்கிறார்" என்னும் எண்ணம் நடைமுறையில் இருந்த ஒரு வழக்கமாக இருந்திருக்கும்,போரில் சிலர் கொல்லப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்னும் எளிதான ஊகத்தை தவிர." "தொடக்க காலங்களிலிருந்து" ஜெர்மானிய மக்கள் "போர்க்கடவுளின் ஆணைகளை முரட்டுத்தனமான பெண் ஆவிகள் நிறைவேற்றுவதாக,ஒழுங்கின்மையை உருவாக்குவதாக,போரில் பங்கு கொள்வதாக,கொல்லப்பட்டவர்களை பறித்து விழுங்குவதாக நம்பினார்கள்" என்று தோன்றுவதாக டேவிட்சன் கூறுகிறார்.[71]

ஃப்ரெய்ஜா மற்றும் ஃபோல்க்வங்கர்[தொகு]

கார்ல் எமில் டோப்லரின் ஃப்ரெயா (1882)

கடவுள் ஃப்ரெய்ஜா மற்றும் அவரின் வாழ்வுக்கப்பால் என்னும் இடமான, கொல்லப்பட்டவர்களில் பாதியை பெற்றுக்கொள்ளும் களமான ஃபோல்க்வங்கர்,இரண்டும் வால்கெய்ரிகளுடன் தொடர்புடையதாய் கருதப்படுகின்றன. கைல்ஃபாகினிங் என்பதில் ஃப்ரெய்ஜாவைப்பற்றி " போரில் அவள் பயணம் செய்யும் போதெல்லாம் கொல்லப்பட்டவர்களில் பாதியை எடுத்து செல்கிறாள்" என்றும் ஃபோல்க்வங்கர் என்பது "வீரர்களின் களம்" என்றும் வர்ணிக்கப்பட்டிருப்பதாக ப்ரிட் மாரி நாஸ்ட்ராம் என்பவர் சுட்டிக்காட்டுகிறார். ஒடினைப்போலவே,ஃப்ரெய்ஜா போர்முனையில் கொல்லப்பட்ட வீரர்களை வரவேற்பதாகவும்,அவள் வீடு ஸெஸ்ரும்னிர்("நிறைய இருக்கைகள் கொண்டது" என்று அவர் மொழிபெயர்ப்பது),வால்ஹல்லாவை போலவே செயல்படும் ஒரு இடம் என்றும் நாஸ்ட்ராம் குறிப்பிடுகிறார். "இருந்தும், மரணத்திற்கு அப்பாலான வாழ்வு என்ற பண்டைய நார்ஸ் கருத்தாக்கத்தில் இரண்டு சொர்க்கங்கள் ஏன் இருக்கின்றன என்று நாம் கேட்க வேண்டும்" என்று நாஸ்ட்ராம் விமரிசனம் செய்கிறார். அது போர் வீரர்களின் வீர துவக்கத்தின் வேறுபட்ட வடிவங்களின் விளைவாக இருக்கக்கூடும்;இதில் ஒரு பகுதி ஒடினை சார்ந்ததாகவும் மற்றொன்று ஃப்ரெய்ஜாவை சார்ந்ததாகவும் இருக்கலாம். இந்த உதாரணங்கள் ஃப்ரெய்ஜா ஒரு போர்-பெண் கடவுள் என்றும் ,அவர் உண்மையில் 'கொல்லப்படுபவரை தேர்ந்தெடுப்பவர்' எனப்படும் வால்கெய்ரியாகவும் தோன்றுகிறாள் என்றும் குறிக்கின்றன."[72]

"தனது புராண கதாபாத்திரத்தில் தனது மரண சாம்ராஜயமான ஃபோல்க்வங்கருக்காக கொல்லப்படும் வீரர்களில் பாதியை தேர்ந்தெடுக்கும், பெண் கடவுள் ஃப்ரெய்ஜா,வால்கைர்ஜார் [sic] மற்றும் டிஸிர் என்பதற்கு புராண கதாபாத்திர முன்னோடியாக பரிமளிக்கிறார்" என்று ஸைக்ஃப்ரைட் ஆன்ட்ரெஸ் டோபட் விமரிசிக்கிறார்.[73]

நவீன ஆதிக்கம்[தொகு]

ரிச்சர்ட் வாக்னரின் ஒபராவான டை வால்க்யுருக்கு பி.ஸ்காட்டின் குரல் இசைக் குறி - ஒரு சித்திர முகப்புப் பக்கம் (1889)

வால்கெய்ரிகளைப்பற்றி பல்வேறு கவிதைகள்,கலை சார்ந்த வேலைகள் மற்றும் இசை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கவிதைகளில்,ஹெச்.ஹெய்ன் என்பவரின் "டை வால்குரென்"(1847,ரோமன்ஜீரோ என்பதில் தோன்றுவது),ஹெச்.வி.லிங்கெ என்பவரின் "டை வால்குரென்"(1864),"ஸ்கால்ட்மான்"(கோம்டா லாண்ட் ,1904ல் தோன்றுவது)ஆகியவற்றில் வால்கெய்ரிகள் தென்படுகிறார்கள்.[68]

வால்கெய்ரிகளை சித்தரிக்கும் கலைப்பொருட்களில்,"டை வால்குரென்" (ஜே.ஜி. ஸாண்ட்பெர்க் என்பவரால் வரையப்பட்ட (சித்திரம்,1818)எம்.எச்டெர் என்பவரின் "ரெய்டென்ட் வால்குரெ"(ஃப்ரெஸ்கோ,இப்பொழுது அழிந்துவிட்ட முனிச் அரண்மனையில் முன்னர் இருந்தது,1865/1866),"வால்கெய்ரியென்" மற்றும் "வால்கெய்ரியென்ஸ் டாட்"(இரண்டு ஒவியங்களும்,1860),ஏ.வெல்டி என்பவரின் "வால்குரென்ரிட்"(உலோகத்தட்டில் செதுக்கப்பட்ட சித்திரம்,1871)டீ.பிக்ஸிஸ் என்பவரின் "வால்குரென்ரிட்"(மரத்தில் வடிவமைக்கப்பட்டது,1871),ஏ.பெக்கர் என்பவரின் "வால்குரென்ரிட்"(1872)(1873ல் ஆ.ஹெய்டே என்பவரால் அதே பெயரில் மறுபடியும் உருவாக்கப்பட்டது),கே.எஹ்ரென்பெர்க் என்பவரின் "டை வால்கிரென்"(கரித்துண்டு ஒவியம்,1880)மற்றும் வால்கைரென் வாஹ்லென் உண்ட் வெக்கென் டை கெஃபாலெனென் ஹெல்டென் (எய்நெரியர்),உம் ஸை வோம் ஸ்காலசட்ஃபீல்ட் நாச் வால்ஹால் ஸூ கெலெய்டென்"(ஒவியம்,1882) மற்றும் வால்கைரென் ஸ்காலசட்(ஆயில் பெயின்டிங்,1884),ஏ.வெல்டியின் "வால்குரென்ரிட்"(ஆயில் பெயின்டிங்,1888,மற்றும் உலோகதட்டில் செதுக்கப்பட்ட சித்திரம்,1890),ஹெச்.கன்தர் என்பவரின் "வால்குரெ" என்னும் சிலை,ஹெச்.ஹென்ட்ரிச் என்பவரின் "வால்குரென்ரிட்" (ஆயில் பெயின்டிங்),எஃப்.லீக் என்பவரின் "வால்குரென்ரிட்" (ஒவியம்), கே.டைலிட்ஸ் என்பவரின் "எய்நெரியர்"(1900களை சார்ந்த ஒவியம்),ஜே.சி.டால்மன் என்பவரின் "தி ரைட் ஆஃப் தி வால்கெய்ரிஸ்"(1900 களை சார்ந்த ஒவியம்,ஏ.கோல்ப் என்பவரின் "வால்கெய்ரி"(சிலை,1910),"வால்ஹல்லா-ஃப்ரீஃஜ்"(1886/1887ல் கோபென் ஹாகெனின் நை கார்ல்ஸ்பெர்க் க்ளிப்டோடெக் என்னும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது), "வால்கைரியென்"(அச்சுப்பிரதி,1915)மற்றும் ஈ.ஹான்ஸென் என்பவரின் "வால்கெய்ரியர்" (ஒவியம்,1925) ஆகிய அனைத்தும் அடங்கும்.[74]

இசையை பொறுத்தவரை,ரிச்சர்ட் வாக்னரின்(டேர் ரிங் டெ நிபெலுங்கென் என்பதில் இருக்கும் 4 இசைநாடகங்களில் இரண்டாவது) "டை வால்குரெ"(1870) என்னும் இசைத்தட்டில் வால்கெய்ரிகள் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கிறார்கள். அதில் "ரைட் ஆஃப் தி வால்கெய்ரிஸ்" ஆக்ட் III என்பதில் தொடங்கி,அதிலிருந்து பல்வேறு புகழ்பெற்ற கலாசார வேலைப்பாடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆபரேஷன் வால்கெய்ரி என்பது ஜெர்மானியப்படையின் ஒரு திட்டமாக இருந்து பின்னர் (1944 )ஜுலை 20 சதித்திட்டத்தால் பலமான ஒரு தாக்குதலுக்கான முயற்சியாக உருமாறிவிட்டது. இந்த ஆபரேஷனை மையமாக வைத்து நடந்த நிகழ்வுகளை கொண்டு வால்கெய்ரி (2008) என்றொரு திரைப்படம் உருவாக்கப்பட்டது.

வால்கெய்ரிகள் முக்கிய பங்கு வகிப்பவர்களாக அல்லது முக்கிய கதாபாத்திரங்களாக விடியோ விளையாட்டுகளில்Valkyrie no Bōken: Toki no Kagi Densetsu (1986),மற்றும் வால்கெய்ரி நோ டென்ஸெட்ஸூ (1989),வால்கெய்ரியா க்ரானிக்கல்ஸ் (2008),ஒடின் ஸ்ஃபியர் (2007),வால்கெய்ரி ப்ரொஃபைல் (1999) மற்றும் அதன் தொடர்பகுதிValkyrie Profile 2: Silmeria (2006)ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

குறிப்புகள்[தொகு]

  1. ஆர்சர்ட் (1997:172).
  2. பயோக் (2005:142–143).
  3. சிமெக் (2007:254 and 349).
  4. ட்ரோங்க் (1997:15). ஆர்சர்டிலிருந்து வால்கெய்ரி பெயர் இயல் (1995:193–195).
  5. லாரிங்டன்(1999:57). ஆர்சர்டிலிருந்து வால்கெய்ரி பெயர் இயல் (1995:193–195).
  6. ஆர்சர்ட் (1997:83).
  7. சிமெக் (2007:251).
  8. லாரிங்டன்(1999:102).
  9. ஆர்சர்ட் (1997:81).
  10. லாரிங்டன்(1999:125).
  11. லாரிங்டன்(1999:128).
  12. லாரிங்டன்(1999:129).
  13. லாரிங்டன்(1999:130–131).
  14. லாரிங்டன்(1999:116).
  15. 15.0 15.1 ஆர்சர்ட் (1997:194).
  16. லாரிங்டன்(1999:116–117).
  17. லாரிங்டன்(1999:119).
  18. லாரிங்டன்(1999:120).
  19. லாரிங்டன்(1999:121).
  20. லாரிங்டன்(1999:122).
  21. லாரிங்டன்(1999:132).
  22. லாரிங்டன்(1999:133).
  23. லாரிங்டன்(1999:133 and 281).
  24. லாரிங்டன்(1999:135).
  25. லாரிங்டன்(1999:141).
  26. தோர்ப்(1907:180).
  27. லாரிங்டன்(1999:166–167).
  28. லாரிங்டன்(1999:167).
  29. பயோக் (2005:44–45).
  30. பயோக் (2005:67).
  31. ஃபால்க்ஸ் (1995:68).
  32. ஃபால்க்ஸ் (1995:69).
  33. ஃபால்க்ஸ் (1995:94).
  34. ஃபால்க்ஸ் (1995:102).
  35. ஃபால்க்ஸ் (1995:117–119).
  36. ஃபால்க்ஸ் (1995:157).
  37. ஜான்சன் (1973:678).
  38. ஹாலன்டர் (1980:54).
  39. ஹாலன்டர் (1980:54–57).
  40. 40.0 40.1 ஹாலன்டர் (1980:68).
  41. ஹாலன்டர் (2007:124–125).
  42. ஹாலன்டர் (2007:125).
  43. ஹாலன்டர் (2007:126).
  44. ஹாலன்டர் (2007:126–127).
  45. ஃபின்லே (2004:58).
  46. ஃபின்லே (2004:59).
  47. 47.0 47.1 47.2 மெக்லியோட் (2006:37).
  48. 48.0 48.1 48.2 நார்த் (1997:106).
  49. ஆர்சர்ட் (1997:172) மற்றும் லிண்டோ (2001:96).
  50. லிண்டோ (2001:276).
  51. வெஸ்ஸென் & ஜான்சன் (1953–58:621).
  52. ஆன்ட்ரென் (2006:11).
  53. மெக்லியோட் (2006:34–35).
  54. 54.0 54.1 மெக்லியோட் (2006:34–37).
  55. டேவிட்சன் (1988:96).
  56. உதாரணங்கள் டேவிட்சன் (1988:96–97)மற்றும் சிமெக்கை உள்ளடக்கியுள்ளன. (2007:349).
  57. சிமெக் (2007:143). ஹரியாஸாவிற்கு, சிமெக் (2007:131).
  58. சிமெக் (2007:142).
  59. சிமெக் (2007:308).
  60. ஹால்(2007:1–2).
  61. க்ரீன்ஃபீல்ட் (1996:257).
  62. நார்த் (1997:105).
  63. 63.0 63.1 டேவிட்சன் (1990:63).
  64. 64.0 64.1 க்ரீன்ஃபீல்ட் (1996:256).
  65. 65.0 65.1 65.2 சிமெக் (2007:171).
  66. 66.0 66.1 சிமெக் (2007:61–62).
  67. க்ரிம்(1882:421).
  68. 68.0 68.1 சிமெக் (2007:349).
  69. மெக்லியோட் (2006:39).
  70. டேவிட்சன் (1990:61).
  71. டேவிட்சன் (1990:61–62).
  72. நாஸ்ட்ராம் (1999:61).
  73. டோபட்(2006:186).
  74. சிமெக் (2007:349–350).

தொடர்புக் குறிப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Valkyries
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மியூசியம் டஸ்குலானம் ப்ரெஸ். ஐ.எஸ்.பி.என் 87-7289-533-0

வார்ப்புரு:Valkyries வார்ப்புரு:Norse mythology வார்ப்புரு:Anglo-SaxonPaganism

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்கெய்ரி&oldid=3777903" இலிருந்து மீள்விக்கப்பட்டது