வட்டாராதனை
வட்டாராதனை (Vaddaradhane) என்பது கன்னடத்தின் முதல் உரைநடை நூலாகும். இதை சிவகோட்டாச்சார் என்பவர் எழுதினார். இது பத்தொன்பது கதைகள் உள்ளடங்கிய நூலாகும். இது ஹரிசேனரின் பிரஹாத்கதாகோசாவை அடிப்படையாகக் கொண்டது.
விளக்கம்[தொகு]
இது சரவணபெலகுளாவுக்கு வந்த பத்திரபாகுவின் வாழ்க்கை பற்றி விரிவாக கூறுகிறது. இந்த நூல் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் சில அறிஞர்கள் இது அதற்கும் முந்தைய ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்த்து என்கின்றனர். அகச்சான்றுகளின் அடிப்படையில் சிவாக்கோதிய்யா, நவீன கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள கோகலியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.[1]
இதில் உள்ள 19 கதைகளின் பட்டியல்
- சுகுமார சுவாமியின் கதை
- சுகாசுசுலா சுவாமியின் கதை
- கஜகுமாரா
- சாந்தகுமார இளவரசன்
- அன்னி கவ்ருதா
- பத்ரபாவு பத்ர்ராரா
- லலிதகதே
- தர்மகோசா
- ஸ்ரீதின்னியா பத்ராரா
- விருஷப சேன பத்தரரா
- கர்த்தகா ரிஷி
- அபய கோஷ ரிஷி
- வித்யுத்சோர ரிஷி
- குருதாதா பட்டராரா
- சில்லடா புத்ரா
- தண்டகா ரிஷி
- மஹேந்ரதத்தாச்சாரியனந்த்
- சணக்ய ரிஷி
- விருஷபாசேனர் ரிஷி
குறிப்புகள்[தொகு]
- ↑ Sahitya Akademi (1992), p. 4027
மேற்கோள்கள்[தொகு]
- Shivakotiacharya Virachita Vaddaradhaane, D L Narshimachaar(M A), Sharada Mandira Krishnarajapuram, Mysore
- Various (1992). Encyclopaedia of Indian literature. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-260-1221-8.