முதலாம் தியோடோசியஸ்
முதலாம் தியோடோசியஸ் | |||||
---|---|---|---|---|---|
ரோமானிய பேரரசின் 69 வது பேரரசர் | |||||
ஆட்சிக்காலம் | 19 ஜனவரி 379 – 15 மே 392 (கிழக்கில் பேரரசர்; 15 மே 392 - 17 ஜனவரி 395 (முழு பேரரசு) | ||||
முன்னையவர் | கிழக்கு மாகாணத்தில் வாலென்ஸ் மேற்கில் கிரேசியன் மேற்கில் இரண்டாம் வாலண்டைன் | ||||
பின்னையவர் | கிழக்கில் ஆர்காடியஸ்; மேற்கில் ஹானரியஸ் | ||||
புதைத்த இடம் | |||||
துணைவர் | 1) Aelia Flaccilla (?–385) 2) Galla (?–394) | ||||
குடும்பம்உறுப்பினர் | Arcadius Honorius Pulcheria Galla Placidia | ||||
| |||||
அரசமரபு | Theodosian | ||||
தந்தை | Theodosius the Elder | ||||
தாய் | Thermantia | ||||
மதம் | Nicene Christianity |
தியோடோசியஸ் I (இலத்தீன்: ஃபிளேவியஸ் தியோடோசியஸ் அகஸ்டஸ்; 11 ஜனவரி 347 - 17 ஜனவரி 395), மாமன்னன் தியோடோசியஸ் என்றும் அறியப்பட்ட இம்மன்னன், கி.பி. 379 முதல் கிபி 395 வரை ரோமானியப் பேரரசராக இருந்தார். தியோடோசியஸ் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் ஆட்சி செய்த கடைசி பேரரசராக இருந்தார். ரோம சாம்ராஜ்ய மக்கள் இவரது ஆட்சியை ஏற்றுக் கொண்டனர். அவர் கோதங்கள் மற்றும் பிற காட்டுமிராண்டி அரசுகளுக்கு எதிராக போரிட்டார். ஆனால் அவர்களைக் கொல்லத் தவறிவிட்டார். மேலும் கோதிக் போருக்குப் பிறகு, அவர்கள் பேரரசின் எல்லைகளுக்குள், இலில்ரிக்யூமில், டானுபியிலிருந்து தெற்கே ஒரு தாயகத்தை நிறுவினர். அவர் இரண்டு அழிவுகரமான உள்நாட்டுப் போர்களைப் போரிட்டார், அதில் அவர் பேரரசர் மக்னஸ் மாக்சிமஸ் மற்றும் யூஜெனியஸ் ஆகியோரை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டார்.