முதலாம் சைரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் சைரஸ் (கிமு ஏழாம் நூற்றாண்டு), இவர் பேரரசர் இரண்டாம் சைரசின் தாத்தா ஆவார். இவர் பாரசீகத்தை மையமாகக் கொண்டு அகாமனிசியப் பேரரசை நிறுவியவர். முதலாம் சைரஸ் முதலில் ஈலாம் பகுதியை வெற்றி கொண்டார். கிமு 651-இல் புது அசிரியப் பேரரசுக்கு எதிராக கலகத்தில் பாபிலோனில் ஈடுபட்டார். பின்னர் கிமு 639-இல் மெசொப்பொத்தேமியாவின் பேரரசர் அசூர்பனிபால், ஈலாம் பகுதியை கைப்பற்றினார். எனவே அவரின் தலைமையை ஏற்று, தன் மகன் அருக்குவை நினிவே நகர அரண்மனைக்கு அனுப்பி திறை செலுத்தினார்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cyrus I KING OF PERSIA
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சைரஸ்&oldid=3338018" இலிருந்து மீள்விக்கப்பட்டது