மரியா வெட்ரோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா வெட்ரோவா
தாய்மொழியில் பெயர்Марія Вєтрова
பிறப்பு(1870-01-03)3 சனவரி 1870
சோலோனிவ்கா, செர்னிகிவ் மாகாணம், உருசியப் பேரரசு (நவீன உக்ரைன்)
இறப்பு24 பெப்ரவரி 1897(1897-02-24) (அகவை 27)
பீட்டர் ம்ற்றும் பால் கோட்டைகள், சென் பீட்டர்சுபெர்கு, உருசியப் பேரரசு
இறப்பிற்கான
காரணம்
தீக்குளிப்பு
கல்லறைசென் பீட்டர்சுபெர்கு
தேசியம்உக்ரைனியர்
பணி
  • ஆசிரியர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1888–1897
அரசியல் இயக்கம்நரோடினிக்சு

மரியா பெடோசிவ்னோ வெட்ரோவா ( Mariia Fedosiivna Vetrova ; 3 ஜனவரி 1870 - 24 பிப்ரவரி 1897) ஓர் உக்ரைனிய ஆசிரியரும் மற்றும் புரட்சியாளரும் ஆவார். உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து, நாடகக் குழுவில் சேர்ந்த பிறகு, அசோவ் நகரத்தில் ஒரு சோசலிச வட்டத்தில் சேர்ந்தார். லியோ டால்ஸ்டாயின் படைப்புகளில் ஈர்க்கப்பட்டார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தனது படிப்பைத் தொடர்ந்தார். ஆனால் டால்ஸ்டாயை சந்தித்த பிறகு ஒரு புரட்சியாளராக ஆவதற்கு ஊக்குவிக்கப்பட்டார். உருசியப் பேரரசின் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். பீட்டர் மற்றும் பால் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த இவர் தீக்குளித்து இறந்தார். இவரது மரணம் உருசிய பேரரசு-எதிர்ப்பு மாணவர் இயக்கத்தின் எழுச்சிக்கான ஒரு முழக்கமாக மாறியது. டால்ஸ்டாய் மற்றும் மாக்சிம் கார்க்கி ஆகியோரின் அர்ப்பணிப்புகளை தூண்டியது. இதன் விளைவாக கார்க்கி புரட்சிகர இலக்கியத்தின் ஒரு சிறிய கவிதையான " தி சாங் ஆஃப் தி ஸ்டோர்மி பெட்ரல் " என்பதை எழுதினார்.

சுயசரிதை[தொகு]

மரியா பெடோசிவ்னா வெட்ரோவா 3 ஜனவரி 1870 இல் [1] உருசியப் பேரரசிலிருந்த ( நவீன உக்ரைனின் செர்னிகிவ் மாகாணம்) சோலோனிவ்கா என்ற ஊரில் பிறந்தார்.[2] உள்ளூர் ஆவண எழுத்துபதிவாளர்ஒலெக்சாண்ட்ரா வெட்ரோவா என்பவருக்கும் ஒரு கோசாக் இனப் பெண்ணுக்கும் முறைகேடாக பிறந்த குழந்தையான இவர்[2] மற்றும் ஒரு கிராமத்திலுள்ள தனது வயதான ஒரு விவசாயப் பெண்ணால் அனாதையாக வளர்க்கப்பட்டார்.[1] 1888 இல், இவர் கல்லூரியில் இருந்து ஆசிரியராகப் பட்டம் பெற்றார், [2] பின்னர் லியூபெக்கில் உள்ள ஒரு கிராமப்புறப் பள்ளியில் கற்பிக்கச் சென்றார்.[1]

ஆசிரியர் பணியில் கிடைந்த ஊதியம் இவருக்குப் போதுமானதாக இல்லை. மேலும் சிறிய கிராமத்தில் தனிமையில் இருந்தார். [1] ஏப்ரல் 1889 இல், இவர் மைகோலா சடோவ்சிகி என்ற உக்ரேனிய நடிப்புக் குழுவில் சேர்ந்தார். [2] அவர்கள் உக்ரைன் முழுவதும் பயணம் செய்தனர். சிறிய நாடக அரங்குகளில் மேடையேறினர். இவர் தனது முதல் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தபோது பயந்து நாடகக் குழுவை விட்டு வெளியேறினார்.[1]

பின்னாஅர் மீண்டும் ஆசிரியராகப் பணியைத் தொடர அசோவ் நகருக்குச் சென்றார். அங்கு அவர் உள்ளூர் சோசலிச வட்டத்தில் சேர்ந்தார். அங்கு ஆர்வமுள்ள வாசகராக ஆனார் . குறிப்பாக லியோ டால்ஸ்டாயின் "மகிழ்ச்சி என்றால் என்ன?" என்ற கட்டுரையால் ஈர்க்கப்பட்டார். பின்னர் தனது கல்வி மேல் ஈடுபாடு காட்டினார்.[1] 1894 இல், அசோவை விட்டு வெளியேறி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[2] ஆனால் தனது பேராசிரியர்களால் விரைவில் ஏமாற்றமடைந்தார். அவர்களின் விரிவுரைகள் அறிவுபூர்வமாக ஊக்கமளிக்கவில்லை. அடுத்த ஆண்டு டால்ஸ்டாயை சந்தித்தார். அவர் இவரை ஒரு புரட்சியாளராக மாறத் தூண்டினார். பின்னர் ஒபுகோவ் மாநில ஆலையில் உள்ள தொழிலாளர் ஞாயிறு பள்ளியில் உருசிய மொழி மற்றும் எண்கணிதத்தை கற்பிக்கத் தொடங்கினார்.[1]

1897 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, உருசிய ஜார் மன்னனின் அதிகாரிகள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நரோட்னிக் அச்சிடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பெருமளவில் கைது செய்தனர்.[1] கைது செய்யப்பட்ட பலரை வெட்ரோவா அறிந்திருந்தார்.2 January 1897 [யூ.நா. 22 December 1896] ,[3] [1] 2 ஜனவரி 1897 அன்று, [3] புரட்சிகர அச்சு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர், பீட்டர் மற்றும் பால் கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் 20 பெப்ரவரி அன்று தீக்குளித்துக் கொண்ட இவர் 24 பெப்ரவரி அன்று இறந்தார்.20 February [யூ.நா. 8 February] 1897 சிறை அதிகாரிகள் இவரது தற்கொலையை மறைக்க முயன்றனர், [1] இவர் அடையாளம் தெரியாத ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டார்.[3]

கௌரவம்[தொகு]

இவரது மரணம் பற்றிய செய்தி சில மாதங்களில் வெளியேத் தெரிய ஆரம்பித்தது.[1] செயின்ட் பீட்டர்ஸ்பர்க், மாஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இடங்களில் மாணவர் போராட்டங்களில் ஈடுபட்டனர். [3] 1897 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கசான் தேவாலயத்தில் வெட்ரோவாவுக்கு அஞ்சலி செலுத்த ஐயாயிரம் பேர் கூடினர். ஆனால் அது தடைசெய்யப்பட்டது, மேலும் 850 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். [1] 1901 இல் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் மாக்சிம் கார்க்கியின் கவிதை " தி சாங் ஆஃப் தி ஸ்டார்மி பெட்ரல் " புரட்சிகர கீதமாக மாறியது. மேலும் மாணவர் ஆர்ப்பாட்டங்களுக்கு கசான் தேவாலயம் ஒரு மைய புள்ளியாக மாறியது. [1]

உக்ரேனிய எழுத்தாளர்ரும் அரசியல் ஆர்வலர்களான மைகோலா வோரோனி மற்றும் போரிஸ் ஹ்ரின்சென்கோ ஆகியோரால் வெட்ரோவா ஒரு புரட்சிகர தியாகியாக அறிவிக்கப்பட்டார், அதே நேரத்தில் இரகசிய புரட்சிகர அமைப்புகள் இவரது பெயரில் பிரகடனங்களை வெளியிட்டன. [3] லியோ டால்ஸ்டாயும் இவரது நினைவாக அஞ்சலி செலுத்தினார். [1]

மேற்கோள்கள்[தொகு]

நூல்பட்டியல்[தொகு]

  • Evans Clements, Barbara (1997). Bolshevik Women. University of Cambridge. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521599202. https://books.google.com/books?id=nnIQ1B25EV8C&pg=PP25. 
  • Shulyatikov, Vladimir (16 March 2010). "Мария Ветрова в памяти поколений" [Mariia Vetrova in the memory of generations]. Gorodnya (in ரஷியன்). Archived from the original on 8 January 2021. பார்க்கப்பட்ட நாள் 10 January 2024.
  • Usenko, Pavlo Heorhiyovych (2003). "ВІТРОВА Марія Федосіївна". Encyclopedia of History of Ukraine 1. Kyiv: Institute of History of Ukraine. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_வெட்ரோவா&oldid=3905556" இலிருந்து மீள்விக்கப்பட்டது