மனோரா கோட்டை
மனோரா கோட்டை Manora Fort | |
---|---|
பகுதி: மனோரா படையிடம் | |
மனோரா, கராச்சி, பாக்கித்தான் | |
![]() | |
மனோரா கோட்டை 1839 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் 1888 ஆம் ஆண்டில் வலுப்படுத்தப்பட்டது. | |
ஆள்கூறுகள் | 24°47′24″N 66°58′46″E / 24.79000°N 66.97944°E |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | பாக்கித்தான் கடற்படை |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1797 |
கட்டிடப் பொருள் |
மண்கோட்டை (அசல்) |
மனோரா கோட்டை (Manora Fort) பாக்கித்தான் நாட்டின் கராச்சி துறைமுகத்தைப் பாதுகாப்பதற்காக கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். [1] முதலில் 1797 ஆம் ஆண்டில் தல்பூர் மிர்சால் ஒரு மண் கோட்டையாக இது கட்டப்பட்டது. கோட்டை 1839 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது - இதன் பிறகு அவர்கள் கராச்சி மற்றும் கீழ் சிந்துவின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றினர்.
வரலாறு[தொகு]
கோட்டை[தொகு]
ஓமன் மற்றும் பகுரைனில் நடைபெற்ற வர்த்தகத்தை கையாண்ட துறைமுகத்தைப் பாதுகாப்பதற்காக 1797 ஆம் ஆண்டில் தல்பூர் வம்சத்தால் மனோரா கோட்டை கட்டப்பட்டது. [2] [3] 90–100 அடிகள் (27–30 m) ) உயரம் கொண்ட பாறைகளின் உச்சியில் கோட்டை கட்டப்பட்டது. ஒரு சிறிய பள்ளிவாசலும் வட்ட கோபுரமும் கோட்டையுடன் இணைந்துள்ளன. [4] 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கராச்சி துறைமுகத்தை அச்சுறுத்திய மற்றும் சில சமயங்களில் தாக்கிய காசிமி கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களைத் தடுக்க இந்த கோட்டை பயன்படுத்தப்பட்டது. பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு கடற்கொள்ளை நடவடிக்கைகள் உதவியாக இருந்தன.
ஆங்கிலேயர்கள் கைப்பற்றல்[தொகு]
பிப்ரவரி 1, 1839 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியில் எச்எம்எசு வெல்லசுலி (1815) என்ற பிரிட்டிசு கப்பல் மனோரா தீவில் நங்கூரமிட்டது. பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இக்கப்பல் கோட்டை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. [4] பிரிட்டிசு துருப்புக்கள் கோட்டையைத் தாக்கியபோது கோட்டைக் காவலுக்கு 4 அல்லது 5 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் துப்பாக்கி ஏந்தியிருக்கவில்லை, அதனால் உசுல் பென் புட்சாவிடம் கோட்டை விரைவாக சரணடைந்தது. </ref> [5] கராச்சியும் கைப்பற்றப்பட்டது. [4]
கோட்டை கைப்பற்றப்பட்ட பிறகு, இந்த கட்டிடம் கராச்சி துறைமுகத்தில் ஒரு குடியிருப்பிடமாக பயன்படுத்தப்பட்டது.. போர்க் கப்பல்களை செப்பனிடும் தொழில்நுட்பத் தலைவர் இங்கு வசித்தார். செயின்ட் பால் தேவாலயம் [6] 1865 ஆம் ஆண்டு கோட்டைக்கு அருகாமையில் கட்டப்பட்டது. 1888 ஆம் ஆண்டில், பழைய கோட்டை பெரும்பாலும் அகற்றப்பட்டது, மேலும் மின்கலம் வலுப்படுத்தப்பட்டது. கராச்சி துறைமுகத்தை நெருங்கும் கப்பல்களுக்கு உதவ 1889 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் ஒரு கலங்கரை விளக்கம் இங்கு கட்டப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பின்[தொகு]
1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, மனோரா கோட்டை பாக்கித்தான் கடற்படையின் முக்கிய தளமாக மாறியது. தீவின் கிழக்கு விளிம்பில் கடற்படை கப்பல்களுக்கான நிறுத்துமிடங்கள் அமைந்தன. அன்றிலிருந்து இந்த தீவு இராணுவப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 250 கிலோமீட்டர்கள் (160 mi) தொலைவில் உள்ள ஓர்மாராவில் புதிய சின்னா கடற்படைத் தளம் திறக்கப்பட்டது. தோராயமாக பாதி கடற்படை கப்பல்கள் மனோராவிலிருந்து நகர்ந்துவிட்டன. க் கோட்டை இப்போது பாக்கித்தான் கடற்படையின் பொதுத் தலைமையகமாக செயல்படுகிறது. [7]
படக்காட்சியகம்[தொகு]
-
மனோரா கோட்டை அதன் அணைக்கரையிலிருந்து தெரிகிறது.
-
கோட்டையில் பழைய கப்பல் எதிர்ப்பு வெடிமருந்துகள்
இதையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Manora Light House and Fort, Karachi
- ↑ "Qasim Fort – The Flawless Complex" இம் மூலத்தில் இருந்து 30 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180830174151/https://www.sindhidunya.com/qasim-fort-the-flawless-complex/.
- ↑ "Qasim Fort also known as Manora Fort". https://www.globalsecurity.org/military/world/pakistan/pns-qasim.htm.
- ↑ 4.0 4.1 4.2 A handbook for India. Part ii. Bombay. https://books.google.com/books?id=Vg0IAAAAQAAJ&dq=manora+fort+1797&pg=PA475.Murray (publishers.), John (1859). A handbook for India. Part ii. Bombay.
- ↑ Our Freedom Fighters, 1562-1947: Twenty-one Great Lives. https://books.google.com/books?id=oX9XAAAAMAAJ&q=manora+karachi.
- ↑ Murray (Firm), John; Eastwick, Edward Backhouse (1881) (in en). Handbook of the Bombay Presidency: With an Account of Bombay City. John Murray. பக். 385. https://archive.org/details/handbookbombayp00eastgoog.
- ↑ "Marine Badges: Pakistan"