போஜஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயோனில் உள்ள பண்டைய பாரசீக கோட்டை (இடது) மற்றும் ஸ்ட்ரூமா ஆற்றின் முகத்துவாரம் (வலது), என்னியா ஹோடோயிலிருந்து (ஆம்பிபோலிஸ்) தோற்றம்.

போஜஸ் (Boges) என்பவர் ஒரு பாரசீக அதிகாரி மற்றும் இராணுவத் தளபதி ஆவார். இவர் பேரரசர் முதலாம் செர்கஸ் ( r. கிமு 486–465) மன்னரின் கீழ் திரேசில் உள்ள இயோனின் ஆளுநராக ( ஹைபார்ச்சோஸ் ) பணியாற்றினார். [1] [2] [3] எரோடோடசின் கூற்றின்ப்படி, பிளாட்டீயா போர் மற்றும் மைக்கேல் போர்களில் பாரசீகம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, 476/5 இல் ஏதெனியர்கள் படையானது சிமோன் (மில்டியாடீசின் மகன்) தலைமையில் இயோனை முற்றுகையிட்டபோது போஜஸ் இயோனைக் கைவிட்டு வெளியேற மறுத்தார். [1] [4] [5] ஒருவேளை இவர் நகரத்தைக் கைவிட்டு, கிரேக்கர்களிடன் சரணடைந்து பாதுகாப்பாக வெளியேறி இருக்கலாம். ஆனால் எதிரிக்கு பணியும் அவமானத்தை அடையக்கூடாது என்று கருதியதால், கடைசி வரை கோட்டையை காத்து இருக்க முடிவு செய்தார். [1] [4] முற்றுகை நீடித்து வந்த நிலையில் இயோனில் சேகரிப்பில் இருந்த தானியங்கள் தீர்ந்து மேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்ப்பட்டது. அதனால் போஜஸ் ஒரு பெரிய தீயை எழுப்பி, தன் மனைவி, குழந்தைகள், காமக்கிழத்திகள், வேலையாட்கள் போன்றோரை கொன்று அதில் வீசினார். [1] [4] பின்னர் இவர் இயோனின் கருவூலத்தில் சேமித்து வைத்திருந்த வெள்ளி, தங்கக் கட்டிகள் என செல்வம் அனைத்தையும் ஸ்ட்ரூமா ஆற்றில் வீசினார். [1] [4] பின்னர் இவரும் தீயில் பாய்ந்தார். [1] [4] போஜசின் வீரம் மற்றும் விசுவாசத்தை பேரரசர் செர்கசால் மிகவும் பாராட்டினார். [1] மேலும் அதை எரோடோடஸ் கூட ஒப்புக்கொண்டார். [3] கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் எரோடோடஸ் தனது இஸ்டரிஸ் என்ற நூலில், போஜசி்ன் செயல்களுக்காக பாரசீகர்களால் அவர் மறக்கப்படாமல் பாராட்டப்பட்டுவந்தார். [1] [1] பேரரசிற்குள் உயிரோடு இருந்த போஜசின் பிள்ளைகளும் முதலாம் செர்க்சால் பெரிதும் கௌரவிக்கப்பட்டனர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போஜஸ்&oldid=3397925" இலிருந்து மீள்விக்கப்பட்டது