பேச்சு:கோனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கடுரையில் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பில்லை. கோனார், மதுரைப் பற்றி தெரிந்தவர்கள் இதை திருத்தலாம் அல்லது நீக்கப்பட வேண்டும்--டெரன்ஸ் \பேச்சு 06:55, 22 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

உள்ளடக்கம் நீக்கம்[தொகு]

கோனார், யாதவர், புராதன யாதவர் போன்ற விடயங்கள் கலந்து எழுதப்பட்டு இருந்தன. மேலும் ஆதாரமற்ற சொந்த கருத்துக்களும் காணப்பட்டன. --Anton (பேச்சு) 04:56, 11 சூலை 2013 (UTC)[பதிலளி]

வேளிர் பற்றிய கருத்துக்கள் ஏன் இங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது? கோனார் பற்றிய விடயங்களைச் சேர்ப்பது நன்று. கட்டுரையைக் குழப்பும் உள்ளடக்கம் பொருத்தமில்லாதவிடத்து நீக்கப்படும். --Anton (பேச்சு) 04:17, 18 சூலை 2013 (UTC)[பதிலளி]
யாதவர்-ஆயர்-இடையர்-வேளிர்-கோனார் போன்றவை ஒன்றென்று கூருவோர்கள் உண்டு. அதனால் அந்த பழங்கதையை பற்றி ஒரு பத்தி மட்டும் வருமாறு எழுதலாம். தற்போது இவர்களை உடன் நினைவுப்படுத்துவது கோனார் தமிழுரை மறவர். நாடார், வன்னியர், பரதவர் தற்போது கோனார். இன்னும் எத்தனை பேர் தங்களைத் தான் பாண்டியர் என்று கூறப்போகிறார்களோ?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:10, 30 செப்டம்பர் 2013 (UTC)
கேரளாவிலிருப்பவர்கள், தமிழகத்தின் தென் மாவட்டத்தினர் அனைவரையும் பாண்டியர் என்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மறவர் எனும் சாதியினர் தங்களைப் பாண்டியர்கள் என்கின்றனர். இதுபோல் வேறு சில சாதியினரும் தங்களைப் பாண்டியர்கள் என்கின்றனர். இதில் கேரளத்தினர் பயன்படுத்தும் குறிப்பை ஏற்கலாம். பாண்டிய நாட்டில் இருந்தவர்கள் அனைவரும் பாண்டியர்கள்தான். இதில் சாதீய வழிகளிலான பாகுபாடு தேவையற்றதே...!--தேனி. மு. சுப்பிரமணி./[[பயனர் பேச்சு:Theni.M.Subra

பின்வரும் வரியில் உள்ளது போன்றுதான் மற்ற ஜாதிக்கட்டுரைகளிலும் எழுதுகின்றனர்.

//பாண்டியர்கள் யாதவ குலத்தைச் சேர்ந்தவர்களே என்பதற்கான தரவுகள் தற்காலத்தில் கிடைக்கின்றன யாதவர்களில் ஒரு பிரிவான தென்பகுதி ஆயர்கள் மன்ன்ன் குலசேகர பாண்டியனை அவர் மான்ட இடத்தே கோவில் அமைத்து குல தெய்வமாக வணங்குகின்றனர் அதனோடு மற்ற மன்னர்களும் அங்கே வழிபடப்படுகின்றனர்//--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:59, 30 செப்டம்பர் 2013 (UTC)

தங்கள் சாதிப்பெயருடன் ஏதாவது சிறு சொல் அல்லது தகவல் தெரிந்து விட்டால் போதும். அதை எப்படியாவது தங்களது சாதியுடன் தொடர்புப்படுத்தித் தங்கள் சாதியினை முதன்மைப்படுத்திக் கொள்ளும் போக்கு அனைத்து சாதியினரிடமும் இருக்கவே செய்கிறது. இதுபோன்ற தகவல்களுக்குச் சரியான ஆதாரம் இல்லாத நிலையில், அந்தச் செய்தியை உடனடியாக நீக்கம் செய்யலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:43, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கோனாரை யாதவர் என்று கூறுவதே வரலாற்று பிழை. இடையர் ஆயர் கோனார் என்பதே சரி. 1965 முன் இடையர்கள் கோனார்களே.

பாண்டியர்கள் யார்?[தொகு]

பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பாண்டியர் எனப் பெயர் பெற்றனர். பாண்டியர் என்ன குலம் என்பது தெளிவாக இருக்கும் பொது அதை மறைத்து ஒவ்வொரு ஜாதியினரும் நாங்கள் தான் பாண்டிய மன்னரின் பரம்பரை என்று புத்தகங்களை எழுதி நூலகத்தை நிரப்பிவிட்டார்கள். அதன்படியே 2001ல் நெல்லையிலிருந்து சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாடார்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. தன்னை பாண்டியன் பரம்பரை என்று சொல்வோர் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால் கோனார்கள் பாண்டியன் சகோதரியான யாதிரையை மணமுடித்து இப்பாண்டிய நாட்டை சீதனமாகக் கொடுத்ததாக இதிகாசம் கூறுகிறது. யாதிரையின் வம்சாவழியினரே பாண்டியர்கள். யாதிரையின் கதைக்கு முன்பாகவே குமரி கண்டத்தைக் கடல்கோள் அழித்து விட்டது. அப்பொழுது ஒரு சில யாதவர்கள் வட இந்தியாவிற்கு சென்று குடியேறினார்கள். பின் ஆரிய படையெடுப்பின் காரணமாக மறுபடியும் இந்த யாதவர்கள் தெற்கே தள்ளப்படுகின்றனர் என்றும் இதிகாசம் சொல்கிறது. இவர்களின் ஒரு பிரிவினரே பாண்டியர்கள்

முல்லை நிலத்து ஆயர் பாண்டியர்களோடு பிறந்த குடியினர் எனக் கலித்தொகைக் கூறுகின்றது.

"மலிதிரை யூர்ந்து தன் மண்கடல் வெளவலின்

மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்

புலியோடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர்க்கெண்டை

வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்

தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்".

ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி

கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது "மீன்" கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர் இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும். மேலும் ஒரு வரலாற்று ஆசிரியரின் கூற்றையும் கவனிக்க வேண்டும். மங்கையன் அல்லது ஆதியதுனே என்ற யாதவனே பாண்டிய அரசனை உருவாக்கியவன் என வில்லியம் கோயிலோ என்பவர் கூறுகிறார்.

"The pandiyas built their pedigree much later,for an inscription of A.D. 1141 one of first of it's kind-traces their origin to mangayan or adiyadudevan of the yadava branch from whom sprang pandiyas". -Prof William Coehlo[தொகு]

மற்றோர் இலக்கியச் சான்று[தொகு]

ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் யாதவர்கள் என்பதனை விளக்குகிறார்.

"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி

வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த

பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்".

பாட்டு விளக்கம்:

பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். எனவே மன்னனான பிறகும் குட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.

கோ- என்றால் மன்னன், பசு என்ற இரு பொருள் உண்டு. இந்த இரண்டு பொருளிலும் இவர் பயன்படுத்துகிறார்.

மற்றோர் சரித்திர அதாரம் கூறுகின்றது

தமிழகத்தின் மீது சூறாவளி தாக்குதல்கள் நடத்தி வேங்கடம் முதல் குமரி வரை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த களப்பிரர் என்பவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உண்டு.

4-ம் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டு வரை தமிழகம் முழுவதும் தடுமாறச் செய்த இக்களப்பிரர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது களப்பிரரது கொடுமைகளிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உரியது. அவர் 590-620ல் அரசாண்டார். அவர் காலம் பாண்டியர் புத்துயிர் பெற்றனர்.

'"All historiyans are agreed on the point that roughly.between the IV and VI centuries the new race of kalabhras took hold of the south throwing all the erstwhile rulership of the region into darkness and disrepute, so that when the velkudi grant of the later day pandya refers to the defeat effected by kadun kone over this race usurpers" -nilakanta sasthiri.


அனால் கோனார்கள் பாண்டிய மன்னர்களின் வழி வந்தவர்கள் என்று இதுவரையும் சொல்லி கொண்டதுமில்லை. இப்படி தற்பெருமை கொள்வது கோனார்களின் வழக்கமில்லை இபொழுது அவர்கள் தங்கள் வரலாற்றை மறந்து கொண்டு இருப்பதால் சொல்லி தான் அக வேண்டும். இடையர் ஆயர் கோனார் இது தான் உண்மை வரலாறு.

கோனார்[தொகு]

தமிழ் நாட்டில் வேணாடு பகுதியில் சங்க காலம் முதல் 8ம் நூற்றாண்டு வரை ஆயர் குடி ஆட்சி செலுத்தியது அவர்களோடு அண்டை நாட்டார் ஆன பாண்டியரும் சேரரும் திருமண உறவு கொண்டனர் ஆதலால் அவர்களுக்கு பின் வந்த சேர பாண்டிய மன்னர்கள் தங்கள் இடையர் குலம் என்றனர் இது போல அந்தந்த கால பெரும் குலத்தவரோடும் மன்னர்கள் உறவு கொண்டனர். பிற்கால சேரர் சோழரால் வழுவிழந்த பொழுது அண்டை நாட்டாரான ஆயரோடு இணைந்து வேணாடு வம்சம் என்ற புதிய வம்சத்தை உண்டாக்கினர், அதன் பின் வந்த வேணாட்டு மன்னர்கள் தங்களை யது(இடையர்) குலம் என கூறுவதில் ஆச்சரியம் இல்லை. சதீஸ் (பேச்சு) 05:18, 17 மே 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோனார்&oldid=2525295" இலிருந்து மீள்விக்கப்பட்டது