பெரும்பரம்பு மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்குக் கோபுரம்

பெரும்பரம்பு மகாதேவர் கோயில் இந்தியாவில், கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில் எடப்பாலில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவரான சிவன் மேற்கு நோக்கிய கருவறையில் உள்ளார். [1] கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் பரசுராம முனிவரால் சிவனுக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. [2] [3] எடப்பால் - பரப்புரம் - அயங்கலம் சாலையில் எடப்பாலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மூலவர் கருவறை இரண்டு நிலைகளைக் கொண்டு, குக்குடக்ருதி பாணியில் சதுர வடிவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை பரசுராமர் நிறுவியதாக நம்பப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "108 Siva Temples".
  2. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website".
  3. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information".