பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு
குற்றவியல் நடைமுறை தொடர்பான விதித்தொகுப்பை ஒருங்கிணைத்து திருத்துவதற்கான ஒரு மசோதா.
சான்றுமசோதா எண் 122, 2023
நிலப்பரப்பு எல்லை இந்தியா
இயற்றியதுமக்களவை (இந்தியா)
இயற்றப்பட்ட தேதி20 திசம்பர் 2023
இயற்றப்பட்ட தேதி21 திசம்பர் 2023
சம்மதிக்கப்பட்ட தேதி25 திசம்பர் 2023
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவுபாரதிய குடிமக்கள் பாதுகாப்பு (இரண்டாம்) விதித்தொகுப்பு மசோதா, 2023
அறிமுகப்படுத்தியதுஉள்துறை அமைச்சர் அமித் ஷா
ரத்து செய்யப்படுபவை
குற்றவியல் நடைமுறைச் விதித்தொகுப்பு

பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 (The Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023) இந்தியாவின் குற்றவியல் நடைமுறை தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்துவதற்கான ஒரு விதித்தொகுப்பு ஆகும்[1][2][3]

பின்னணி மற்றும் காலக்கோடு[தொகு]

2023 ஆகத்து 11 அன்று, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[4][5][6]

2023 திசம்பர் 12 அன்று, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 திரும்பப் பெறப்பட்டது.

2023 திசம்பர் 12 அன்று, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு (இரண்டாம்) விதித்தொகுப்பு மசோதா, 2023 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது[7].

2023 திசம்பர் 20 அன்று, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு (இரண்டாம்) விதித்தொகுப்பு மசோதா, 2023 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.[8].

2023 திசம்பர் 21 அன்று, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு (இரண்டாம்) விதித்தொகுப்பு மசோதா, 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

2023 திசம்பர் 25 அன்று, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு (இரண்டாம்) விதித்தொகுப்பு மசோதா, 2023 இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது[9].

மாற்றங்கள்[தொகு]

பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, ரத்து செய்யப்பட்ட குற்றவியல் நடைமுறை விதித்தொகுப்பில் பல மாற்றங்களைச் ஏற்படுத்துகின்றது, அவற்றுள்:

  • சட்டத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் எளிமைப்படுத்துதல்: பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு ஆனது, குற்றவியல் நடைமுறை விதித்தொகுப்பின் பல விதிகளை நீக்கி திருத்துவதன் மூலம் சட்டத்தை ஒருங்கிணைத்து எளிதாக்குகிறது[10].
  • குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல்: ஒரு வழக்கறிஞருக்கான உரிமை, அமைதியாக இருப்பதற்கான உரிமை மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை போன்ற பல பாதுகாப்புகளை வழங்குவதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகளை பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு பலப்படுத்துகிறது[11].
  • குற்றவியல் நீதி அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துதல்: பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் தாமதங்களைக் குறைப்பதன் மூலமும் குற்றவியல் நீதி அமைப்பின் செயல்திறனை மேம்படுத்த முயல்கிறது[12].

பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பில் செய்யப்பட்ட சில முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:

  • கைது: பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு கைது செய்வதற்கான காரணங்களை விரிவுபடுத்துகிறது, மற்றும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஆணைப்பத்திரம் இல்லாமல் கைது செய்ய அனுமதிக்கிறது.
  • ஜாமீன்: பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு ஜாமீனை எதிர்ப்பதை காவல்துறைக்கு மிகவும் கடினமாக்குகிறது, மற்றும் பரந்த அளவிலான வழக்குகளில் ஜாமீன் பெற அனுமதிக்கிறது.
  • புலனாய்வு: குற்றங்களை விசாரிக்க காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு வழங்குகிறது, மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணைகளை முடிக்க வழிவகுக்கிறது.
  • விசாரணை: பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு விசாரணை செயல்முறையை நெறிப்படுத்துகிறது, மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றங்கள் வழக்குகளை தீர்க்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது.

அமைப்பு[தொகு]

484 சட்டப்பிரிவுகள் உள்ளடங்கிய குற்றவியல் நடைமுறை சட்டம், 533 சட்டப்பிரிவகளாக அதிகரிக்கப்பட்டது. 160 சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டு, 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன; 22 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வழக்குகள் 40 சதவீதம் உள்ளன. இவை, சுருக்க விசாரணைக்கான சிறு குற்ற வழக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 40 சதவீத குற்ற வழக்குகள் விரைவாக தீர்வு காணப்பட உள்ளது. குற்றவியல் வழக்கு விசாரணையில், தேடுதல் மற்றும் பறிமுதல் ஆகியவை முக்கிய பகுதிகள். இவற்றில், ஒளிப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவு இல்லாமல் குற்றப்பத்திரிகை செல்லாது. ஏழாண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனைக்குரிய குற்றங்கள், சம்பந்தப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் தரப்பை கேட்காமல், எந்த அரசும் வழக்கை தன்னிச்சையாக வாபஸ் பெற முடியாது. குற்ற வழக்குகளில் காவல்த்துறை, ஆண்டுக்கணக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடிக்கக்கூடும். ஆனால், புதிய சட்டத்தில், 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுமதித்தால் மட்டும் மேலும், 90 நாட்கள் கால அவகாசம் எடுத்து கொள்ளலாம். 180 நாட்கள் முடிந்தவுடன், குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரணை நடத்தியாக வேண்டும். சாட்சி விசாரணை, வாதங்கள் முடிந்து, 30 நாட்களில் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதிலிருந்து ஏழு நாட்களுக்குள் தீர்ப்பை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வரும் கோப்புகளின் மீது, 120 நாட்களில் முடிவு எடுக்கவில்லை என்றால், அனுமதி வழங்கப்பட்டதாக கருதி, நீதிமன்றங்கள் மேற்கொண்டு விசாரணையை தொடரலாம். பழைய சட்டத்தில், எதிரிகள் தலைமறைவானால் வழக்கு பல ஆண்டுகள் அப்படியே நிலுவையில் இருக்கும். ஆனால், புதிய சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தால், தொடர்ந்து விசாரணை நடத்தி தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு தேங்குவது குறையும்.

புதிய மற்றும் பழைய குற்றவிய நடைமுறைச் சட்டங்களின் கூறுகள் மற்றும் பிரிவுகள் ஒப்பீடு
குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023
பிரிவு தலைப்பு கூறு தலைப்பு
1 சுட்டுப்பெயர், அளாவுகை, தொடங்கமை 1 சுட்டுப்பெயர், அளாவுகை, தொடங்கமை
2 வரையறைகள் 2 வரையறைகள்
3 குறிப்பீடுகளை பொருள்கொள்ளல் 3 குறிப்பீடுகளை பொருள்கொள்ளல்
4 இந்திய தண்டனை சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் குற்றங்கள் நீதிவிசாரணை 4 பரத நீதி தொகுள் மற்றும் பிற சட்டங்களின் கீழ் குற்றங்கள் நீதிவிசாரணை
5 ஒழிவாக்கல் 5 ஒழிவாக்கல்
6 குற்றவிய நீதிமன்றங்களின் வகுப்புகள் 6 குற்றவிய நீதிமன்றங்களின் வகுப்புகள்
7 ஆட்சிநிலவரை கோட்டங்கள் 7 ஆட்சிநிலவரை கோட்டங்கள்
8 பெருநகரப் பகுதிகள் - நீக்கப்பட்டது
9 அமர்வு நீதிமன்றம் 8 அமர்வு நீதிமன்றம்
10 உதவி அமர்வு நீதிபதிகளின் கீழமைவு - நீக்கப்பட்டது
11 நீதியிய நடுவர்கள் நீதிமன்றம் 9 நீதியிய நடுவர்கள் நீதிமன்றம்
12 தலைமை நீதியிய நடுவர்கள் மற்றும் கூடுதல் தலைமை நீதியிய நடுவர்கள், ஏனைய 10 தலைமை நீதியிய நடுவர்கள் மற்றும் கூடுதல் தலைமை நீதியிய நடுவர்கள், ஏனைய
13 சிறப்பு நீதியிய நடுவர்கள் 11 சிறப்பு நீதியிய நடுவர்கள்
14 நீதியிய நடுவர்களின் வட்டார ஆள்வரை 12 நீதியிய நடுவர்களின் வட்டார ஆள்வரை
15 நீதிய நடுவர்களின் கீழமைவு 13 நீதிய நடுவர்களின் கீழமைவு
16 பெருநகர நடுவர்கள் நீதிமன்றங்கள் - நீக்கப்பட்டது
17 தலைமை பெருநகர நடுவர் மற்றும் கூடுதல் தலைமை பெருநகர நடுவர் - நீக்கப்பட்டது
18 சிறப்பு பெருநகர நடுவர் - நீக்கப்பட்டது
19 பெருநகர நடுவர்களின் கீழமைவு - நீக்கப்பட்டது
20 நிருவாக நடுவர்கள் 14 நிருவாக நடுவர்கள்
21 சிறப்பு நிருவாக நடுவர்கள் 15 சிறப்பு நிருவாக நடுவர்கள்
22 நிருவாக நடுவர்களின் வட்டார ஆள்வரை 16 நிருவாக நடுவர்களின் வட்டார ஆள்வரை
23 நிருவாக நடுவரின் கீழமைவு 17 நிருவாக நடுவரின் கீழமைவு
24 பொது குற்றவுரைஞர்கள் 18 பொது குற்றவுரைஞர்கள்
25 உதவி பொது குற்றவுரைஞர்கள் 19 உதவு பொது குற்றவுரைஞர்கள்
25A குற்றவுரைப்பு இயக்குநரகம் 20 குற்றவுரைப்பு இயக்குநகரம்
26 குற்றங்களை நீதிவிசாரணை செய்யக்கூடும் நீதிமன்றங்கள் 21 குற்றங்களை நீதிவிசாரணை செய்யக்கூடும் நீதிமன்றங்கள்
27 சிறார்கள் பொறுத்தவற்றில் ஆள்வரை - நீக்கப்பட்டது
28 அமர்வு நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்றங்கள் பிறப்பிக்கலாகும் விதிப்புகள் 22 அமர்வு நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்றங்கள் பிறப்பிக்கலாகும் விதிப்புகள்
29 நடுவர்களால் பிறப்பிக்கலாகும் விதிப்புகள் 23 நடுவர்களால் பிறப்பிக்கலாகும் விதிப்புகள்
30 அபராதம் கட்ட தவறுகைக்கு சிறைவாச விதிப்பு 24 அபராதம் கட்ட தவறுகைக்கு சிறைவாச விதிப்பு
31 ஒன்றை நீதிவிசாரணையில் அநேக குற்றசெயல்கள் மெய்ப்பிக்கப்படும் வேளைகளில் விதிப்பு 25 ஒன்றை நீதிவிசாரணையில் அநேக குற்றசெயல்கள் மெய்ப்பிக்கப்படும் வேளைகளில் விதிப்பு
32 ஆளுரிமைகளை உரித்தாக்கும் செயல்முறை 26 ஆளுரிமைகளை உரித்தாக்கும் செயல்முறை
33 பணியமர்த்தப்பட்ட அலுவலர்களின் ஆளுரிமை 27 பணியமர்த்தப்பட்ட அலுவலர்களின் ஆளுரிமை
34 ஆளுரிமைகளை திரும்பப்பெறல் 28 ஆளுரிமைகளை திரும்பப்பெறல்
35 நீதிபதிகள் மற்றும் நடுவர்களின் ஆளுரிமைகளை அவர்களின் பதவி பின்தொடரச்சியாளர்கள் செயலாற்றலாம் 29 நீதிபதிகள் மற்றும் நடுவர்களின் ஆளுரிமைகளை அவர்களின் பதவி பின்தொடரச்சியாளர்கள் செயலாற்றலாம்
36 காவலக மேல்நிலை அலுவலர்களின் ஆளுரிமைகள் 30 காவலக மேல்நிலை அலுவலர்களின் ஆளுரிமைகள்
37 பொதுமக்கள் எப்போது நடுவர்கள் மற்றும் காவலகத்திற்கு உதவ வேண்டியது 31 பொதுமக்கள் எப்போது நடுவர்கள் மற்றும் காவலகத்திற்கு உதவ வேண்டியது
38 பற்றாணை நிறைவேற்றலுக்கு காவலக அலுவலர் அல்லாத பிற ஆளுக்கு உதவல் 32 பற்றாணை நிறைவேற்றலுக்கு காவலக அலுவலர் அல்லாத பிற ஆளுக்கு உதவல்
39 பொதுமக்கள் குறிப்பிட்ட சில குற்றசெயல்கள் பற்றி தகவல் கொடுக்க வேண்டியது 33 பொதுமக்கள் குறிப்பிட்ட சில குற்றசெயல்கள் பற்றி தகவல் கொடுக்க வேண்டியது
40 குறிப்பிட்ட தகவலை தெரியப்படுத்த ஒரு கிராமத்தின் விவகாரங்கள் தொடர்புற்று பணியமர்த்தப்பட்ட அலுவலர்களின் கடமைகள் 34 குறிப்பிட்ட தகவலை தெரியப்படுத்த ஒரு கிராமத்தின் விவகாரங்கள் தொடர்புற்று பணியமர்த்தப்பட்ட அலுவலர்களின் கடமைகள்
41 எப்போது காவலகத்தார் பற்றாணையின்றி கைதுசெய்யலாம் 35 எப்போது காவலகத்தார் பற்றாணையின்றி கைதுசெய்யலாம்
41A காவலக அலுவலர் முன்பாக முன்னிலையாக அறிவிப்பு - கூறு 35-ல் உட்படுத்தப்பட்டுள்ளது
41B கைது நடைமுறை மற்றும் கைது செய்யும் அலுவலரின் கடமைகள் 36 கைது நடைமுறை மற்றும் கைது செய்யும் அலுவலரின் கடமைகள்

தீர்வு காணவேண்டிய தொழில்நுட்ப சிக்கல்கள்[தொகு]

தேவையான ஆதாரங்கள் மற்றும் போதுமான காவல் பயிற்சி இல்லாமல், சட்டங்கள் செயல்பட பல மாதங்கள் ஆகும் என்று அதிகாரிகள் மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றின்படி, புதிய சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் குழப்பம் நிலவுவதாக பல காவல்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இந்தச் சட்டங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வெவ்வேறு தேதிகள் இருக்க முடியாது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திசம்பர் 25-ஆம் தேதி அறிவிக்கையானது, அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பு மூலம் மத்திய அரசு நிர்ணயம் செய்யும் தேதியில் விதிகள் நடைமுறைக்கு வரும் என்று கூறினாலும், தற்போது நாடு முழுவதும் உள்ள 95% காவல் நிலையங்களால் பயன்படுத்தப்பட்டுவரும் கணினி மென்பொருளில் மாற்றங்கள் உட்பட பல தொழில்நுட்ப சிக்கல்களால் புதிய விதிகளை அமல்படுத்துவது எளிதானது அல்ல என தெரிகிறது[13].

இதற்கிடையே, 2023 டிசம்பரில் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தேதி இவ்வாண்டு ஜனவரி 26 ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்ததாக பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதற்கு ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம் என்றும், அடுத்த இரண்டு மாதங்களில் அகமதாபாத்தில் ஒரு பைலட் திட்டம் தொடங்கப்படும் என்றும், அடுத்த ஓராண்டுக்குள் இணைப்பு சிக்கல் உள்ள சில பகுதிகளைத் தவிர, நாட்டிலுள்ள 90% பகுதிகள் புதிய சட்டங்களின் வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்றும் அந்த அதிகாரியை குறிப்பிட்டு இச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்செய்தி மேலும் தெரிவிப்பதாவது, அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூர்நுனிக் கோபுரம் அமைப்பில் பணிபுரியும் காவலர்களுக்கு 3,000 முதன்மை பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பார்கள் என்றும், பயிற்சியை மேற்பார்வையிடும் பணியகம் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் கீழ் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், குற்றவியல் நீதி அமைப்பு, தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு, ஒத்திவைப்பு எச்சரிக்கை தொகுதி, குற்றவியல் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலை மற்றும் தொடர்புடைய இதர அமைப்புகள் உள்ளிட்ட குற்றவியல் நீதி அமைப்பின் பிற பிரிவுகளை ஒருங்கிணைக்க தேசிய குற்ற பதிவுகள் பணியகம் ஒருங்கிணைக்கும், என்றும் தெரிகிறது. இந்த சுயாதீன தொகுதிகளின் ஒருங்கிணைப்பு மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இணங்க, விரைவான குற்றவியல் நீதி அமைப்பை ஏற்படுத்தும் என்று அதிகாரி கூறினார். பல தளங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்படுத்தலைக் காணும் முதல் நிலையமாக சண்டிகர் இருக்கும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன[14].

இந்தியாவின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் 2024 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று ஒன்றிய அரசு மூன்று அரசிதழ் அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளதாக பத்திரிக்கைச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் பாரதிய நீதி விதித்தொகுப்பபின் கீழ் மோதி விரைதல் வழக்குகள் தொடர்பான விதியை அது நிறுத்தி வைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன[15].

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக மக்களவையில் 3 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன; தேச துரோக சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்". ஆகத்து 11, 2023 – via www.thehindu.com.
  2. "தேசத்துரோகச் சட்டம் ரத்து செய்யப்படும்: ஐபிசி, சிஆர்பிசி, இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக 3 மசோதாக்களை மக்களவையில் அமித் ஷா அறிமுகப்படுத்தினார்". ஆகத்து 11, 2023 – via தி எகனாமிக் டைம்ஸ் - தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. ""பிரிவினைச் சட்டம்" தேசத்துரோகத்தை மாற்றுகிறது: குற்றவியல் சட்டங்களை மாற்றியமைக்க புதிய மசோதாக்கள்". NDTV.com.
  4. https://www.indiatoday.in/india/story/government-brings-in-three-bills-to-revamp-indias-crime-laws-crpc-amit-shah-lok-sabha-2419541-2023-08-11
  5. https://www.livemint.com/news/india/parliament-monsoon-session-ends-today-amit-shah-announces-major-overhaul-of-criminal-justice-system-with-new-bill-11691738520380.html
  6. https://www.ndtv.com/india-news/the-3-bills-that-will-soon-replace-british-era-criminal-laws-their-aim-explained-4289008
  7. "பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு (இரண்டாம்) விதித்தொகுப்பு மசோதா, 2023" (PDF).
  8. தாசு, அவ்ஸ்திகா (2023-12-20). "மக்களவை இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விதித்தொகுப்பு மற்றும் சான்றுச் சட்டத்தை மாற்றியமைக்கும் குற்றவியல் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுகிறது". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-20.
  9. மேசை, டி.எச். வலை. "ஜனாதிபதி முர்மு ஒப்புதல் அளித்ததால், குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மசோதாக்கள் சட்டமாக இயற்றப்பட்டன". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-25.
  10. பாலாஜி, ஆர் (2023-12-21). "90 நாட்கள் வரை போலீஸ் காவலில் இருக்கும் நபரை ஸ்கேன் செய்யவும்" (in en). டெலகிராஃப் ஆன்லைன் (புதுதில்லி). https://www.telegraphindia.com/india/scan-on-detention-of-accused-person-in-police-custody-for-staggering-period-of-up-to-90-days/cid/1988289. 
  11. தாசு, அவ்ஸ்திக (2023-12-13). "புதிய குற்றவியல் நடைமுறைச் சட்ட மசோதா, முதல் 15 நாட்கள் காவலில் வைக்கப்படுவதற்கு அப்பால் போலீஸ் காவலை அனுமதிப்பது குறித்த நாடாளுமன்றக் குழுவின் கவலைகளை புறக்கணிக்கிறது." (in en). livelaw.in. https://www.livelaw.in/top-stories/bharatiya-nagarik-suraksha-sanhita-criminal-procedure-police-custody-15-days-244456. 
  12. பௌமிக், ஆராத்திரிக (2023-12-18). "திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: முக்கிய மாற்றங்கள் விளக்கப்படுகின்றன" (in en). தி இந்து. https://www.thehindu.com/news/national/revised-criminal-law-bills-the-key-changes-explained/article67637348.ece. 
  13. "அரசிதழில் அறிவிப்பு இருந்தும் புதிதாக இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் குழப்பம்". திசம்பர் 26, 2023 – via www.thehindu.com.
  14. சிங்கு, விஜைதா (2024-01-03). "3 புதிய குற்றவியல் கோட்களின் ரோல்-அவுட் அட்டவணை ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும்" (in en). தி இந்து (புதுடெல்லி). https://www.thehindu.com/news/national/date-of-implementation-of-new-criminal-laws-to-be-notified-before-january-26-to-come-into-effect-in-nine-12-months/article67699283.ece. 
  15. மன்றல், மகேந்தர் சிங்கு (2024-02-24). "இந்தியாவின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது" (in en). தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (புதுடெல்லி). https://indianexpress.com/article/india/bharatiya-nyaya-sanhita-india-new-criminal-laws-july-1-9178612/.