பானி பூசண் சக்ரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானி பூசண் சக்ரவர்த்தி
4ஆவது மேற்கு வங்காள ஆளுநர்l
பதவியில்
8 ஆகத்து 1956 – 3 நவம்பர் 1956
முன்னவர் அரேந்திர கூமர் முகர்சி
பின்வந்தவர் பத்மசா நாயுடு
தலைமை நீதிபதி கல்கத்தா உயர் நீதிமன்றம்
பதவியில்
1952–1958
முன்னவர் ஆர்தர் திரிவோர் ஹாரிசு
பின்வந்தவர் குல்லாடா சரன் தாசு குப்தா
தனிநபர் தகவல்
பிறப்பு 1898
இறப்பு மே 8, 1981(1981-05-08) (அகவை 82–83)

பானி பூசண் சக்ரவர்த்தி (Phani Bhusan Chakravartti) (1898 - 8 மே 1981) என்பவர்கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய மற்றும் பெங்காலி நிரந்தர தலைமை நீதிபதி ஆவார்.[1][2]

பணி[தொகு]

சக்ரவர்த்தி பிரித்தானிய இந்தியாவில் டாக்காவில் பிறந்தார். கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சேருவதற்கு முன், கொல்கத்தா ஜெகன்னாத் கல்லூரி மற்றும் ரிப்பன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார் (1920-1926). 1945ல் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். சக்கரவர்த்தி 1952-ல் சர் ஆர்தர் ட்ரெவர் ஹாரிஸுக்குப் பிறகு கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.[3] 1956ஆம் ஆண்டு அரேந்திர குமார் முகர்சியின் திடீர் மறைவுக்குப் பிறகு, இவர் சில மாதங்களுக்கு மேற்கு வங்காளத்தின் தற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்றார். சக்கரவர்த்தி 1958-ல் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

புத்தக வெளியீடு[தொகு]

சக்கரவர்த்தி மார்னிங் ப்ளாசம்ஸ் என்ற ஆங்கில புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Chief Justices". http://calcuttahighcourt.nic.in/former_cj.htm. 
  2. "Office of the Official Liquidator". http://olkolkata.in/details/. 
  3. "FORMER CHIEF JUSTICES". http://calcuttahighcourt.nic.in/pdf_files/former_chief_justice.pdf. 
  4. Vol - I, Subodh Chandra Sengupta & Anjali Basu (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. பக். 322. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-85626-65-0. Vol - I, Subodh Chandra Sengupta & Anjali Basu (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 322. ISBN 81-85626-65-0.