பரணி கலையகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரணி பிக்சர்ஸ் அல்லது பரணி கலையகம் (Bharani Pictures) என்பது சென்னையில் அமைந்திருந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதனை 1947 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண ராவும், பானுமதி ராமகிருஷ்ணாவும் இணைந்து நிறுவினர். [1] அதன் பின் 1950 இல் இருவரும் பரணி ஸ்ரூடியோ வை உருவாக்கினர். இவர்கள் இருவரதும் மகனான டாக்டர். பரணி குமார் என்பரின் பெயரையே இக்கலையகத்திற்கு வைத்தனர். தற்போது இந்த ஸ்டுடியோவை பரணி குமாரே பராமரித்து வருகின்றார். இது அமைந்துள்ள சுற்றுப்புறத்திலேயே இவர் 'பரணி வைத்தியசாலை'யை நிறுவியுள்ளார். பரணி ஸ்டுடியோவினுடைய முதல் திரைப்படமான சண்டிராணி 1953 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதுமாக தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

வருடம் திரைப்படம் மொழி இசையமைப்பு
1947 ரத்னமலா தெலுங்கு சி. ஆர். சுப்புராமன்
1949 லைலா மஞ்சு தமிழ் சி. ஆர். சுப்புராமன்
1949 லைலா மஞ்சு தெலுங்கு சி. ஆர். சுப்புராமன்
1952 பிரேமா தெலுங்கு சி. ஆர். சுப்புராமன்
1952 காதல் தமிழ் சி. ஆர். சுப்புராமன்
1953 சண்டிரானி தெலுங்கு சி. ஆர். சுப்புராமன்
1953 சண்டிரானி தமிழ் சி. ஆர். சுப்புராமன்
1953 சண்டிரானி ஹிந்தி சி. ஆர். சுப்புராமன்
1954 சக்ரபாணி தெலுங்கு பி. பானுமதி
1954 விப்ர நாராயணா தமிழ் எஸ். ராஜேஸ்வர ராவ்
1954 விப்ர நாராயணா தெலுங்கு எஸ். ராஜேஸ்வர ராவ்
1956 சிந்தாமணி தெலுங்கு
1957 மணமகன் தேவை தமிழ் ஜி. ராமநாதன்
1957 வரடு கவலி தெலுங்கு ஜி. ராமநாதன்
1961 பதசரி தெலுங்கு மாஸ்டர் வேணு
1961 கானல் நீர் தமிழ் மாஸ்டர் வேணு
1964 விவாக பந்தம் தெலுங்கு
1967 கிரிக லக்சுமி தெலுங்கு
1972 அந்த மன மஞ்சிகே தெலுங்கு
1974 அம்மாயி பெல்லி தெலுங்கு
1977 மனவடி கோசம் தெலுங்கு
1984 ராசயித்திரி தெலுங்கு
1987 அட்டகரு சின்டபாட் தெலுங்கு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரணி_கலையகம்&oldid=3219807" இலிருந்து மீள்விக்கப்பட்டது