பயனர் பேச்சு:சுவாமி வித்தியானந்தா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், சுவாமி வித்தியானந்தா, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--பரிதிமதி (பேச்சு) 05:00, 3 மார்ச் 2013 (UTC)

எழுத்து நடை குறித்து[தொகு]

வேதங்களைப் பற்றிய தனி பக்கம் உள்ளது (பார்க்க. வேதம்)
தக்க ஆதாரங்களுடன் தகவல்களை அங்கு இடுமாறு வேண்டுகிறேன். தமிழில் வேதம் நல்ல முயற்சி என்றாலும், எழுத்து கலைக்களஞ்சிய நடையில் இல்லை. அதனையும் மாற்றிட வேண்டுகிறேன்.--பரிதிமதி (பேச்சு) 05:02, 3 மார்ச் 2013 (UTC)

வேதம் பற்றிய கட்டுரைகள்[தொகு]

வணக்கம் சுவாமி வித்தியானந்தா. தாங்கள் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதத் துவங்கியதற்கு மகிழ்ச்சி. விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் உருவாக்கும் முயற்சி. எனவே வலைப்பதிவில் எழுதுவதைப் போல இங்கு எழுதுவது வரவேற்கப்படுவதில்லை. தங்களின் வேதம் தொடர்பான கட்டுரைகளில் ஏராளமான வடமொழிச்சொற்கள் (சமற்கிருதம்) மலிந்துள்ளன. மேலும் அதர்வண வேதம் வேறு; முண்டக உபநிடதம் வேறு இரண்டையும் இணைத்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை. அதர்வண வேதம் கூறும் கருத்துகள் முண்டக உபநிடதம் கூறும் கருத்துகள் என்பது போன்ற தலைப்புகளில் தனித்தனிக் கட்டுரைகளாக இருத்தல் நலம் என நிணைக்கிறேன். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:54, 3 மார்ச் 2013 (UTC)