பயனர் பேச்சு:கொ.அன்புகுமார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கொ.அன்புகுமார். எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வரும் இவர் இளம் வயது முதல் பத்திரிகை துறையில் ஆர்வம் கொண்டு பல முன்னணி செய்தி ஊடகங்களில் பணியாற்றியிருக்கிறார். கருப்பு சிவப்பு கழகங்கள்,தக்கை, மரமொதுங்கிய நிழல் என இவர் எழுதிய 3 நூல்கள் பலராலும் விரும்பப் படுகிறது.எழுத்தாளராகவும் மூத்த பத்திரிகையாளராகவும் இருந்துவரும் அன்புகுமார் அன்பு அறக்கட்டளை என்ற சேவை நிறுவனத்தை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்துவருகிறார். செந்தமிழ் மாமணி விருது, இலக்கியச் செம்மல் விருது, பல்துறை வித்தகர் விருது, சிறந்த மனித நேயர் விருது, சேவைக்கான அப்துல்கலாம் விருது, வோர்ல்ட் ஹுமானிடேரியன் அமைப்பு சர்வதேச அளவில் வழங்கிய ஸ்டார் ஆஃப் தி கோவிட் விருது,இந்தியன் ஐ கான் விருது, சிறந்த பத்திரிகையாளர் விருது, மனித உரிமைகள் அமைப்பின் மாமனிதர் விருது, சோழன் புக் ஆஃப் ரெக்கார்ட் சேவை செம்மல் விருது, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வழங்கிய ஸ்டார் ஆஃப் நெய்பர்ஹூட் விருது, அப்துல்கலாம் விஐபி விருது, செம்மொழி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சேவைக்கான செம்மல் விருது, திருவள்ளுவர் விருது, பாரதி யுவகலா விருது, பல அமைப்புகள் அவ்வப்போது வழங்கி கெளரவித்த விருதுகள் என அவர் வாங்கி அடுக்கியிருக்கும் விருதுகளின் பட்டியல் நீளம் அதிகம்.

கலைக்களஞ்சியக் கட்டுரை[தொகு]

வணக்கம், கொ.அன்புகுமார்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 06:47, 23 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியமற்ற கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். --AntanO 08:00, 23 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]