பயனர்:Amrithavalli Srinivasan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்தவல்லி
பெயர்அமிர்தவல்லி
இயற்பெயர்அமிர்தவல்லி
சொந்தப் பெயர்அமிர்தவல்லி
பால்பெண்
பிறந்த நாள்03/05/1998
பிறந்த இடம்செங்கல்பட்டு
தற்போதைய வசிப்பிடம்தமிழ்நாடு
நாடு இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்இந்து
கல்வி, தொழில்
தொழில்மாணவி
கல்விஉளவியல்
கல்லூரிகிறித்து கல்லூரி
பல்கலைக்கழகம்கிறித்து பல்கலைக்கழகம்
பாடசாலைவிக்னேஷ் ரெங்கா பள்ளி
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குபாட்டு, நடனம், வீணை, ஓவியம்
சமயம்இந்து
அரசியல்स्वतंत्र
தொடர்பு விபரம்
மின்னஞ்சல்s.amrithavalli@yahoo.com
முகநூல்Amrithavalli Srinivasan

பள்ளிப் பருவத்தில் "உன்னை பற்றி சொல்" என்று கேட்டால், என் பெயர், வகுப்பு, பெற்றோர் பெயர், என்று அடுக்கியிருப்பேனே தவிர என்னைப் பற்றிய புரிதல் பெரிதாக இருந்ததில்லை. இப்போது பெங்களூரு கிறித்து கல்லூரியில் உளவியல் இளங்கலைப் பட்டம் முதலாம் ஆண்டு சேர்ந்தாகிவிட்டது.நான் ஆசை பட்ட படிப்பு, கல்லூரி என நன்றாக அமைந்த வாய்ப்பை திறமையாக பயன்படுத்தவே முயல்கிறேன். எதிலுமே ஆர்வம், ஈடுபாடு, முயற்சி, எதிர்பார்பின்மை இருந்தால் அந்த செயல் வெற்றி பெறும் என்ற என் தந்தையின் வாக்கியத்தை என்றும் செயல்படுத்துவேன்.இயற்கையை ரசிப்பது மிகவும் பிடிக்கும்.மரம், செடிகளை வளர்ப்பது, இந்திய நாணயங்கள் சேர்ப்பது, அஞ்சல் அட்டைகள் சேர்ப்பது என பல பொழுதுபோக்குகள் இருந்தாலும், புத்தகங்கள் படிப்பது, கர்நாடக சங்கீதம் பாடுவது, வீணை வாசிப்பது, யோகா செய்வது மிகவும் பிடித்தவைகளாகும்.அன்னை தெரேசாவின் சேவைகளால் மிகவும் கவரப்பட்ட நான் எல்லோரிடமும் அன்பும் கருணையும் செலுத்த கற்றுக்கொண்டேன். நிறைய கலைகள் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் உள்ளது. என் ஆசிரியர்கள், நண்பர்கள், தொலைக்காட்சி, கணிணி போன்றவற்றின் மூலம் நான் தெரிந்துகொண்ட மற்றும் அனுபவித்தவற்றை மனதிலே தொகுத்ததில் தற்காலத்தில் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன்."நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை" என்ற பாரதியாரின் கூற்றிற்கேற்ப தைரியம், தன்நம்பிகை , பல்திறன் கொண்ட பெண்ணாகவே என்னை உருவகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதேசமயம் நம் தமிழக மற்றும் இந்திய உடை கலாச்சாரத்தை மிகவும் நேசிக்கிறேன். விடுமுறை நாட்களில் புடவை அணிந்து ஒப்பனை செய்து கொள்வது மிகவும் பிடிக்கும்.என் பெற்றோரான திரு.சீனிவாசன்- திருமதி.வத்சலா அவர்களின் ஒரே பாசமகளாவேன். அவர்களின் பாசம் கலந்த கண்டிப்பு என்றும் என்னை நேர்வழிப்படுத்தும். நான் மனதால் சோர்வடையும்போது, பாடல்கள் கேட்பது, வீட்டை சுத்தம் செய்வது, மருதாணி வைப்பது, தூங்குவது, சமையல் செய்வது, நண்பர்களிடம் பேசுவது, பெற்றோருடன் சிரித்து பேசுவது போன்றவற்றில் ஏதாவது ஒன்றை செய்து புத்துணர்வு அடைவேன். முகத்திற்கு முன்பு சிரித்து பேசி முதுகிற்கு பின்னால் தவறாக பேசுவது எனக்கு பிடிக்காது. முடிந்தவரை அனைவரிடமும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று என் தாயார் அடிக்கடி கூறுவார். "உன்னை நீ முதலில் நேசித்தால்தான் பிறரை உன்னால் நேசிக்க முடியும்" என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு.அடிக்கடி உணர்ச்சிவசப்பக்கூடிய சுவபாவம் எனக்கு.எனக்கு ஒருவரை மிகவும் பிடித்துவிட்டால் கண்மூடித்தனமாக நம்பிவிடுவேன். ஊர் சுற்றுவது, தனியாக நேரம் செலவிடுவது பிடிக்கும்.வருங்காலத்தில் சிறந்த உளவியல் நிபுனராக ம்க்களின் மனநலத்தினை காக்க விரும்புகிறேன். வாழ்வில் எந்த முடிவு எடுப்பதானாலும் பெற்றோரை மனதில் வைத்து எடுப்பதும் பிறர் மனம் புண்படாமல் நடப்பது முக்கியம். அவ்வாறே செய்கிறேன். எந்த பிரச்சனை நேர்ந்தாலும் அதனை தைரியமாக நேர்கொண்டு சமாளிக்கும் பக்குவத்தை ஏற்படுத்திக்கொண்டேன். நடப்பவை எல்லாம் நன்மைக்கே!