பஞ்சாரா வேட்டைநாய் (Banjara Hound) என்பது வஞ்சாரி வேட்டைநாய் என்றும் அழைக்கப்படும் நாயானது, இந்தியாவில் காணப்படும் நாய் இனங்களுள் ஒன்றாகும். இது ஒரு நீண்ட மெல்லிய கால்களும் கூரிய பாயும் விரைவோட்டமுடைய முயல்வேட்டை நாய் வகையினைச் சார்ந்தது. இது மகாராட்டிராவின் நாடோடிகளான பஞ்சாராவால் வளர்க்கப்பட்டு வேட்டையாடப் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3] இது ஒரு பெரிய சலுக்கி நாயினை ஒத்திருக்கிறது. இதனுடைய உயரம் 28 அங்குலம் ஆகும். இதனுடைய பலம் மற்றும் மான்களை இழுத்துவரும் திறனுக்காக புகழ் பெற்றது.[1][4][5]