நித்யானந்த மகாபத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நித்யானந்த மகாபத்ரா
Nityananda Mahapatra
நித்யானந்த மகாபத்ராவின் உருவப்படம்
சட்டமன்ற உறுப்பினர்: ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1957–1971
முன்னையவர்மகம்மது அனீபு
பின்னவர்அரேகிருட்டிணா மகதாபு
தொகுதிபத்ரக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1912-06-17)17 சூன் 1912
பத்ரக்கு, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு17 ஏப்ரல் 2012(2012-04-17) (அகவை 99)
புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
காரணம் of deathசுவாசக் கோளாறு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஒரிசா சனா காங்கிரசு
வேலைஎழுத்தாளர், அரசியல்வாதி
விருதுகள்சாகித்திய அகாதமி விருது,1987

நித்யானந்தா மகாபத்ரா (Nityananda Mahapatra) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1912 ஆம் ஆன்டு சூன் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] கவிஞர் மற்றும் பத்திரிகையாளராகவும் இவர் அறியப்படுகிறார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

தேசியவாத நடவடிக்கைகளுக்காக 1930 மற்றும் 1942 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நித்யானந்த மகாபத்ரா பிரித்தானிய அரசாங்கத்தால் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார்.[2] ஒடியா இதழான டகராவின் ஆசிரியராகவும்,[3] சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றார்.[4] அரசியல் வாழ்க்கையில் மகாபத்ரா 1957 ஆம் ஆண்டு முதல் [5] 1971 ஆம் ஆண்டு வரை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகவும் [6] 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை வழங்கல் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.

இறப்பு[தொகு]

2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதியன்று சுமார் 9:45 மணிக்கு நித்யானந்த மகாபத்ரா இறந்தார். ஒடிசாவின் புவனேசுவரில் உள்ள காரவேலாநகரில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் காரணமாக ஆதித்யா கேர் மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தார். தனது 100 ஆவது பிறந்தநாளுக்கு மூன்று மாதங்கள் குறைவாக இருந்தபோதுதான் இவர் இறந்தார்.

இலக்கிய விருதுகள்[தொகு]

மகாபத்ரா 1974 ஆம் ஆண்டு ஒடிசா சாகித்ய அகாடமி விருதையும் [7] 1987 ஆம் ஆண்டில் கேந்திர சாகித்ய அகாடமி விருதையும் தனது காராதிகா நாவலுக்காகப் பெற்றார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. according to website of Odisha Legislative Assembly born on 17 June, but possibly born 17 June
  2. "Profile of Shri Nityananda Mahapatra". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 21 June 2011.
  3. History of Indian Literature: .1911–1956, struggle for freedom : triumph and tragedy. Sahitya Akademi. 
  4. The Encyclopaedia of Indian Literature, Volume 5. Sahitya Akademi. 
  5. "Post Held of Shri Nityananda Mahapatra". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 21 June 2011.
  6. "Membership of Shri Nityananda Mahapatra in Odisha Legislative Assembly". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 21 June 2011.
  7. "List of Odisha Sahitya Akademi Award Winning Books and their Writers". Odisha Sahitya Akademi. Archived from the original on 18 December 2010. பார்க்கப்பட்ட நாள் 11 July 2010.
  8. "Recipients of Kendra Sahitya Academy Award for Oriya Literature" (PDF). Kendra Sahitya Akademi. Archived from the original (PDF) on 14 December 2010. பார்க்கப்பட்ட நாள் 11 July 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்யானந்த_மகாபத்ரா&oldid=3926441" இலிருந்து மீள்விக்கப்பட்டது