நாற்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் உள்ள பழம்பாடல்களைத் தொல்காப்பியமும் யாப்பருங்கலக்காரிகையும் நான்கு வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.

பா[தொகு]

  1. வெண்பா
  2. ஆசிரியப்பா
  3. கலிப்பா
  4. வஞ்சிப்பா

என்பன அவை.

பாவினம்[தொகு]

யாப்பருங்கலக்காரிகை இந்தப் பாக்களின் இனங்கள் என

  1. தாழிசை (குறட்தாழிசை, வெண்டாழிசை), (ஆசிரியத் தாழிசை), (கலித்தாழிசை), (வஞ்சித்தாழிசை)
  2. துறை (வெண்டுறை, வெண்செந்துறை), (ஆசிரியத்துறை), (கலித்துறை), (வஞ்சித்துறை)
  3. விருத்தம் (வெளிவிருத்தம்), (ஆசிரிய விருத்தம்), (கலிவிருத்தம்), (வஞ்சி விருத்தம்)

என்னும் பாகுபாடுகளை விரித்துக்கொள்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்பா&oldid=1169030" இலிருந்து மீள்விக்கப்பட்டது