தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா
தோற்றம்
| தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (DDUGJY) | |
|---|---|
| நாடு | இந்தியா |
| பிரதமர் | நரேந்திர மோடி |
| அமைச்சகம் | மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (இந்தியா) |
| முதன்மையர் | பியுஷ் கோயல் |
| துவங்கியது | 2015 |
| Budget | ₹756 பில்லியன் (ஐஅ$8.8 பில்லியன்) |
| தற்போதைய நிலை | கிராமப்புற மின்மயமாக்கல் இலக்கு நிறைவடைந்தது. பிற அமைப்புகளை வலுப்படுத்துதும் பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பர் 2018 க்கு முன்பாக முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது |
| இணையத்தளம் | http://www.ddugjy.gov.in/ |
தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana) (DDUGJY) என்பது இந்தியாவிலுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்திய அரசின் திட்டமாகும்.[1]
நோக்கம்
[தொகு]18,452 மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு 1000 நாட்களுக்குள், மே 1, 2018 க்குள் மின்மயமாக்க அரசு முடிவு செய்தது.[2]
வரலாறு
[தொகு]இந்த திட்டமானது நவம்பர் 2014 இல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்டது.[3]