திருக்கூடலூர் ஜெகத்ரட்சகப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்கூடலூர் ஜெகத்ரட்சகப் பெருமாள் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருவையாறு-கும்பகோணம் சாலையில கிழக்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் ஜெகத்ரட்சகப் பெருமாள் என்றும் வையங்காத்த பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் பூமிதேவி, நீலாதேவியுடன் நான்கு கரங்களோடு நின்ற நிலையில் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். வலது கரத்தில் செங்கோல் ஏந்திய நிலையில் உள்ளதால் உய்யவந்தான் என்றும் அழைக்கின்றனர். [1]

சிறப்பு[தொகு]

தேவர்கள் நந்தக முனிவருடன் வந்து பெருமாளை வணங்கியதால் இக்கோயில் திருக்கூடலூர் என்றழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014