திண்டுக்கல் ஐ. லியோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்டுக்கல் ஐ. லியோனி என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

ஆசிரியப் பணி

இவர் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். 2011-ம் ஆண்டு திமுகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.[1] 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும்[2], 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை[3] ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.[4][5]

குறிப்புகள்

  1. திண்டுக்கல் ஐ. லியோனியின் தேர்தல் பிரச்சார காணொளி, பார்த்த நாள், 14, ஏப்ரல், 2012.
  2. குள.சண்முகசுந்தரம். "அம்மா பிரதமரானால் எதிர்க்கட்சி மாப்ளைங்க வாலைச் சுருட்டிக்கணும்: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் மே 26, 2016.
  3. "திமுக ஆட்சியில்தான் விழுப்புரம் வளர்ச்சி: திண்டுக்கல் ஐ.லியோனி". தினமணி. பார்க்கப்பட்ட நாள் மே 26, 2016.
  4. "110 விதியின் கீழ் அறிவித்தவற்றை ஜெயலலிதா செயல்படுத்தவில்லை: திண்டுக்கல் ஐ.லியோனி குற்றச்சாட்டு". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் மே 26, 2016.
  5. "வைகோ செய்த துரோகம்? திண்டுக்கல் ஐ லியோனி ஆவேசம்". வெப்துனியா. பார்க்கப்பட்ட நாள் மே 26, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டுக்கல்_ஐ._லியோனி&oldid=2718431" இலிருந்து மீள்விக்கப்பட்டது