தாமரைக் கோபுரம்
| தாமரைக் கோபுரம் Lotus Tower | |
|---|---|
නෙළුම් කුළුණ | |
| பொதுவான தகவல்கள் | |
| நிலைமை | கட்டுமானப் பணியில் |
| வகை | கலப்புப் பயன்பாடு:
|
| இடம் | கொழும்பு, இலங்கை |
| ஆள்கூற்று | 06°55′37″N 79°51′30″E / 6.92694°N 79.85833°E |
| நிறைவுற்றது | செப்டம்பர் 16, 2019 |
| உயரம் | |
| அலைக்கம்ப கோபுரம் | 350 m (1,148.3 அடி) |
| தொழில்நுட்ப விபரங்கள் | |
| தள எண்ணிக்கை | 13 (அடித்தலத்தில் 6, பூவில் 7) |
| உயர்த்திகள் | 7 |
| வலைதளம் | |
| http://www.lotustower.lk/ | |
தாமரைக் கோபுரம் (Lotus Tower, சிங்களம்: නෙළුම් කුළුණ) என்பது இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும்,[1] மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் அமைந்துள்ளது.[2][3] இது இலங்கையின் அடையாள குறியீடாக பிரதிபலிக்கிறது.[4] இக்கோபுரம் தற்போது (செப்டம்பர் 2019) தெற்காசியாவில் மிகவும் உயரமான சுயமாகத் தாங்கும் அமைப்பு ஆகும். அத்துடன், ஆசியாவில் 11-வது உயரமான கோபுரமும், உலகின் 19-வது உயரமான கோபுரமும் ஆகும்.[4] இக்கோபுரம் முதலில் கொழும்பின் புறநகரான பேலியகொடையில் கட்டப்படுவதாக இருந்தது, ஆனால் பின்னர் இலங்கை அரசு கொழும்பு நகரிற்கு இடத்தை மாற்றியது.[5] தாமரை-வடிவமுள்ள இக்கோபுரம், தொலைத்தொடர்பு, காணகம், மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் கட்டி முடிப்பதற்கான $104.3 மில்லியன் செலவை சீனாவின் எக்சிம் வங்கி கடனாகக் கொடுத்துதவியது.[6] இக்கோபுரத்தை கொழும்பு நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இருந்து காணக்கூடியதாக உள்ளது.
ஏழாண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த தாமரைக் கோபுரம் 2019 செப்டம்பர் 16 ஆம் நாள் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.[7][8][9]
அமைவிடம்
[தொகு]ஆரம்பத்தில் இக்கோபுரத்தை நிருவாகத் தலைநகர் கொழும்பின் புறநகர் ஒன்றில் அமைக்கவே திட்டமிடப்பட்டது. பின்னர் திட்டம் மாற்றப்பட்டு கொழும்பு நகர மத்தியில் பெய்ரா ஏரியை நோக்கிய பகுதியில் டி. ஆர். விஜயவர்தனா மாவத்தை வழியே தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டது.[10]
கட்டுமானப் பணி
[தொகு]2012 சனவரி 3 ஆம் நாள் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் மகிந்த ராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் கையெழுத்திடப்பட்டது.[11] 2012 சனவரி 20 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.[10] 2014 திசம்பரில், கோபுரம் 125 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. 2015 சூலையில் 255 மீட்டர் உயரத்தை எட்டியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ உயரமான தாமரை கோபுரம்: இலங்கை தலைநகர் கொழும்பில் திறந்துவைப்பு தி இந்து தமிழ் திசை-வியாழன், செப்டம்பர் 19 2019
- ↑ "Lotus Tower - The Skyscraper Center". www.skyscrapercenter.com. Retrieved 2017-12-15.
- ↑ "Foundation stone laid for Lotus Tower". Archived from the original on 9 மார்ச் 2013. Retrieved 21 பெப்ரவரி 2013.
- 1 2 "Symbolic landmark of Sri Lanka: Lotus Tower (Nelum Kuluna)". Sunday Observer (in ஆங்கிலம்). 2019-09-14. Retrieved 2019-09-16.
- ↑ "Colombo to get 350 m high multifunctional communication tower soon". Sunday Times. Archived from the original on 16 டிசம்பர் 2011. Retrieved 15 December 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Sri Lankan version of Rs. 11bn Eiffel tower mooted". Asian Tribune News. Archived from the original on 19 ஏப்ரல் 2012. Retrieved 10 நவம்பர் 2010.
- ↑ இலங்கை தாமரை கோபுரம்: தெற்காசியாவின் உயரமான கோபுரம் திறந்து வைக்கப்பட்டது
- ↑ "China hails BRI progress - Global Times". www.globaltimes.cn. Archived from the original on 1 மே 2019. Retrieved 1 May 2019.
- ↑ "Lotus Tower to bloom today - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2019-09-16. Retrieved 16 September 2019.
- 1 2 Colombo Lotus Tower – Minister Basil Rajapakse Lays Foundation Stone பரணிடப்பட்டது 2013-04-26 at the வந்தவழி இயந்திரம், TRCSL Press. Retrieved 20 January 2012
- ↑ CEIEC Signed the Contract of Colombo Lotus Tower Project பரணிடப்பட்டது 2018-09-26 at the வந்தவழி இயந்திரம், CEIEC.com News. Retrieved 3 January 2012