உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை முத்துக்குமாரசுவாமி கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முத்துக்குமார சுவாமி கோயில்
பெயர்
வேறு பெயர்(கள்): கந்தசாமி திருக்கோயில்
முத்து குமாரசாமி கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:கந்தகோட்டம், ஜார்ஜ் டவுன்
கோயில் தகவல்
மூலவர்:முத்துக்குமார சுவாமி முருகன்
குளம்: 
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி விசாகம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று 
கல்வெட்டுகள்: 

முத்துக்குமாரசாமி கோவில் அல்லது கந்தசாமி கோயில் (Kandaswami Temple, Georgetown) என்பது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகரத்தில் பாரிமுனை பகுதியில் சென்னை மத்திய தொடருந்து நிலையம் அருகில் கந்தகோட்டத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.

இக்கோயிலின் மூலவர் பெயர் கந்தசுவாமி. உற்சவர் பெயர் முத்துக்குமாரசுவாமி. அம்மன் பெயர் வள்ளி & தெய்வானை. தீர்த்தம் சரவணப்பொய்கை. இக்கோயில் மூலவரை பாடியவர்கள் இராமலிங்க அடிகள் மற்றும் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். இக்கோயில் கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது.[1]

வரலாறு.

[தொகு]

திருபோரூர் திருகோயிலின் வரலாற்றினை முதன் முதலாக அக் கோயிலின் குருக்களான சோமாசி குருக்கள் என்பவர் தம் மனைவிக்கு எடுத்துக் கூறினார். அதை உடனிருந்து கேட்டிருந்த சபாபதி குருக்கள் அந்த வரலாற்றினைப் பத்து விருத்தங்களாக எழுதி அவற்றை தமது பேரனான சோமாஸ்கந்த குருக்களிடம் கொடுத்தார். சோமாஸ்கந்த குருக்கள் அவ்வரலாற்றினை நன்கு கற்று தமக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளுக்கு வேதகிரி குருக்கள் என்பவர் முலம் விளக்கம் பெற்றார். சோமாஸ்கந்த குருக்கள் தம்முடைய மாணாக்கரான குளத்தூர் கோயில் கிருஷ்ணப்ப செட்டியாரை அழைத்து அவருக்கு ஆகமங்கள், புராணங்கள், சமயனுல்கள், சாத்திரங்கள் முதலியவற்றை கற்பித்து பின்பு தம் பாட்டனார் தமக்கு தந்த கந்த பெருமான் வரலாற்றைப் பற்றிய பத்து விருத்தப்பாக்கலையும் அவரிடம் தந்தார். அப்பாடல்களில் அமைந்துள்ள வரலாறுகள் எல்லோருக்கும் விளங்கும்படி வரகவி - கோயில் கிருஷ்ணப்ப செட்டியார் 206 விருத்தப்பாக்களில் சென்னை கந்தப்பெருமான் திருகோயிலின் தலபுராணத்தைப் பாடினார். கந்தகோட்டம் முருகன் கோவில் 1000 வருடங்களுக்கு பழமையான முருகன் கோவில் தான் இந்த கந்தகோட்டம் முருகன் கோவில். தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் கந்தகோட்டம் முருகன் கோவில் மிகவும் முக்கியமானது இந்த கந்தகோட்டம் முருகன்.

தல சிறப்பு

[தொகு]

உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். சிறப்பு நாட்களில் இவருக்கே முதன்மைப் பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள குளக்கரை சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்

கோவில் தெய்வங்கள்

[தொகு]
  • மூலவர்-கந்தசுவாமி(முருகன்)
  • உற்சவர்-முத்துக்குமாரர்
  • தாயார்-வள்ளி, தெய்வானை
  • தல விருட்சம்-மகிழம்
  • தீர்த்தம்-சரவணப் பொய்கை
  • ஆகமம்/பூஜை-குமார தந்திரம்

திருவிழாக்கள்

[தொகு]

தை மாதம் 18-ஆம் நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம்.

கோயில் நடை திறக்கும் நேரம்

[தொகு]

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

கோவில் அமைவிடம்

[தொகு]

கோவில் அமைவிடம் https://www.google.com/maps/place/Kandhakottam+Temple/@13.0859894,80.2769728,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a526f55ae087f47:0x92eea08e9b07a5e5!8m2!3d13.0859842!4d80.2791615?hl=en-US கோவில் வலைத்தளம் http://www.kandhakottam.tnhrce.in/ பரணிடப்பட்டது 2017-09-20 at the வந்தவழி இயந்திரம்

தலப்பெருமை

[தொகு]

சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]