சி. மு. மு. அரு. அலமேலு அருணாசலம் உயர்நிலைப் பள்ளி, பனையப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனையப்பட்டி உயர்நிலைப்பள்ளி

சி. மு. மு. அரு. அலமேலு அருணாசலம் உயர்நிலைப்பள்ளி,பனையப்பட்டி என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சரகத்திற்குட்பட்ட பனையப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது[1]

நிர்வாகம்[தொகு]

பள்ளியானது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள் நிர்வாகத்தில் செயல்படுகிறது.

கல்வி[தொகு]

ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பனையப்பட்டி,மேலப்பனையூர்,பளுவினிப்பட்டி,பூவக்கோன்பட்டி,கூடலூர்,குலமங்களம்,வீரணாம்பட்டி,பூலாம்பட்டி,வடகாடு,பொன்னனூர்,விராச்சிலை,குழிபிறை போன்ற அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர்.இப்பள்ளியில் சுமாராக 250 மாணவ,மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியில் 2015-16 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சியும்,2016-2017 கல்வி ஆண்டில் 94 சதவிகித தேர்ச்சியும் பெற்றது.சென்ற கல்வி ஆண்டில் 23 மாணவ மாணவியர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்தனர். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தலா 3 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றனர்.தரமான கல்வியை வழங்கி வருவதில் இப்பள்ளி பெருமை கொள்கிறது. தமிழ்நாடு அரசு வழங்கும் 14 வகை நலத்திட்ட உதவிகள் மாணவ,மாணவியர்களுக்கு பெற்று வழங்கி வருகிறது.

ஆசிரியர்கள்[தொகு]

தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள்,இரண்டு இடைநிலை ஆசிரியர்கள்,ஒரு நெசவு ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் நல்ல முறையில் கல்வி கற்பித்து வருகிறார்கள்.

பணியாளர்கள்[தொகு]

இப்பள்ளியில் ஒரு இளநிலை உதவியாளரும்,ஒரு அலுவலக உதவியாளரும்,இரண்டு பகுதி நேரப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]