மலைவலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
added Category:இந்து சமய வழிபாட்டுச் சடங்குகள் using HotCat |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்]] |
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்]] |
||
[[பகுப்பு:இந்து சமய வழிபாட்டுச் சடங்குகள்]] |
07:04, 13 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
திருவண்ணாமலை மலை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர். புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்தனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மலையின் அமைப்பு
அருணாச்சல மலையானது 2668 அடி உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள்
- . இந்திர லிங்கம்,
- . அக்னி லிங்கம்,
- . எம லிங்கம்,
- . நிருதி லிங்கம்,
- . வருன லிங்கம்,
- . வாயு லிங்கம்,
- . குபேர லிங்கம், மற்றும்
- . ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.
ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை