பொலன்னறுவை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 64: வரிசை 64:


==கலை மற்றும் பண்பாடு==
==கலை மற்றும் பண்பாடு==
கலைகள் அதிகம் வளர்ச்சியடைந்த காலமாக இதனைக் குறிப்பிட முடியும். பொலன்னறுவை காலக் கட்டடங்கள் இதனைப் பறைசாற்றுகின்றன. பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இந்து மதத்தின் செல்வாக்கை அறியலாம். அனுராதபுர சந்திரவட்டக்கல்லில் காணப்பட்ட எருது வடிவம் பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இருந்து நீக்கப்பட்டமை இதற்கு ஆதாரமாகும்.

==மதங்கள்==
==மதங்கள்==
==பொருளாதார நிலமை==
==பொருளாதார நிலமை==

05:19, 9 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

Kingdom of Polonnaruwa
பொலன்னறுவை இராச்சியம்
පොළොන්නරු රාජධානිය
கிபி 1017–கிபி 1236
தலைநகரம்பொலன்னறுவை
பேசப்படும் மொழிகள்சிங்களம்,தமிழ்
சமயம்
பௌத்தம், இந்து
அரசாங்கம்மன்னராட்சி
• கிபி 1017-
இராசராச சோழன்
• கிபி 1187-1215
கலிங்க மாகன்
வரலாறு 
• தொடக்கம்
கிபி 1017
• முடிவு
கிபி 1236
முந்தையது
பின்னையது
அனுராதபுர இராச்சியம்
தம்பதெனிய இராச்சியம்
பொலன்னறுவையிலுள்ள சிவன் கோயில்களுள் ஒன்று, மீள்கட்டுமானம் செய்யப்பட்டது.
பொலன்னறுவை சந்திரவட்டக்கல்.

பொலன்னறுவை இராச்சியம் (Polonnaruwa Kingdom) அல்லது பொலன்னறுவை இராசதானி (சிங்களம்: පොළොන්නරුව රාජධානිය) என்பது அனுராதபுர இராச்சியம் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. பின்னர் சிங்கள மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இலங்கை நீர்வள நாகரிகத்தின் பொற்காலமாக இதனைக் குறிப்பிடலாம்.

வரலாறு

அநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மஹிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராஜராஜ சோழ மன்னனால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் இராஜேந்திர சோழனால் உருகுணையில் ஐந்தாம் மஹிந்தன் பிடிபட்டு சோழ நாட்டிற்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டான். சோழர்களால், மகாவலி கங்கையால் சூழப்பட்ட பொலன்னறுவை இலங்கையின் தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது.சோழர்கள் 52 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனாவான். இவன் விகாரைகள் பலவற்றை அமைத்தான். இவ்வரசன் பாண்டியர்களோடு திருமண ஒப்பந்தங்களைச் செய்தான்.

முதலாம் பராக்கிரமபாகு

பொலன்னறுவையின் சிரேஷ்ட ஆட்சியாளன் ஆவான். பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டிய பெருமை இவனையே சாரும்.

ஏனைய ஆட்சியாளர்கள்

முதலாம் பராக்கிரமபாகுவின் பின் நிஸங்கமல்லன் ஆட்சி செய்தான். பின்னர் சில பலமற்ற அரசர்களும் அரசிகளும் ஆட்சி செய்தார்கள்.

வீழ்ச்சி

கலிங்க மாகன் உடைய படயெடுப்புடன் பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றது.

கலை மற்றும் பண்பாடு

கலைகள் அதிகம் வளர்ச்சியடைந்த காலமாக இதனைக் குறிப்பிட முடியும். பொலன்னறுவை காலக் கட்டடங்கள் இதனைப் பறைசாற்றுகின்றன. பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இந்து மதத்தின் செல்வாக்கை அறியலாம். அனுராதபுர சந்திரவட்டக்கல்லில் காணப்பட்ட எருது வடிவம் பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இருந்து நீக்கப்பட்டமை இதற்கு ஆதாரமாகும்.

மதங்கள்

பொருளாதார நிலமை

விவசாயம்

கைத்தொழில்

கல்வி

காட்சியகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலன்னறுவை_இராச்சியம்&oldid=1185192" இலிருந்து மீள்விக்கப்பட்டது