குவாங்சூ நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவாங்சூ (ஆங்கிலம் : Gwangju ) இது தென் கொரியாவின் ஆறாவது பெரிய நகரம் ஆகும். இது மத்திய அரசின் உள்துறை அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட்ட பெருநகர நகரமாகும் . 2005 ஆம் ஆண்டில் முவான் நகரத்தில் உள்ள தெற்கு கிராமமான நாமக்கிற்கு மாகாண அலுவலகம் மாற்றப்படும் வரை இந்த நகரம் தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் தலைநகராக இருந்தது. கிமு 57 இல் இந்த நகரம் நிறுவப்பட்டது. கொரிய முப்பேரரசு காலங்களில் இது பேக்சியின் நிர்வாக மையங்களில் ஒன்றாகும்.[1] 1929 ஆம் ஆண்டில், ஜப்பானிய பேரரசின் ஆட்சியின் காலத்தில், நகரத்தில் கொரிய மற்றும் சப்பானிய மாணவர்களிடையே ஒரு மோதல் ஒரு பிராந்திய ஆர்ப்பாட்டமாக மாறியது, இது காலனித்துவ காலத்தில் சப்பானிய பேரரசின் கொடுமைக்கு எதிரான நாடு தழுவிய ஒரு பெரிய எழுச்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

வேளாண் பிராந்தியமான சியோலாவின் மையத்தில் உள்ள இந்த நகரம் அதன் உயர்ந்த சுவை மற்றும் மாறுபட்ட உணவு வகைகளுக்கு பிரபலமானது.

பெயர் காரணம்[தொகு]

அதன் பெயரில் உள்ள குவாங் என்பது "ஒளி" மற்றும் சூ என்பது "மாகாணம்" என்று பொருள்படும். குவாங்சூ வரலாற்று ரீதியாக முசூ என்று பதிவுசெய்யப்பட்டது . [2]

தொழில் துறை[தொகு]

சியோலுக்கு ஒரு ரயில் பாதை அமைக்கும் ஒரு கட்டுமானத்துடன் குவாங்சூவில் நவீன தொழில் நிறுவனம் நிறுவப்பட்டது. பருத்தி துணி, அரிசி ஆலைகள் மற்றும் மதுபான உற்பத்தி நிலையங்கள் ஆகியவை சில தொழில்களில் அடங்கும். 1967 ஆம் ஆண்டில் தொழில்துறை மண்டலத்தை நிர்மாணித்தது தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தது, குறிப்பாக தானியங்கி வாகனத் தொழிலுடன் இணைக்கப்பட்ட துறைகளில் இது நன்கு வளர்ச்சியடைந்தது.

குவாங்சூ எழுச்சி[தொகு]

மே 1980 இல், டிசம்பர் 12, 1979 இல் நடந்த இராணுவ சதியின் தலைவரான சுன் டூ-கவானுக்கு எதிராக குவாங்சூவில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆர்ப்பாட்டங்கள் சிறப்பு நடவடிக்கைக் கட்டளையின் உயரடுக்குப் பிரிவுகள் உட்பட இராணுவப் படைகளால் அடக்கப்பட்டன. வன்முறை அடக்கப்பட்ட பின்னர் நிலைமை அதிகரித்தது, இதன் விளைவாக குவாங்சூ எழுச்சி ஏற்பட்டது, அங்கு பொதுமக்கள் ஆயுதக் களஞ்சியங்களைத் தாக்கி ஆயுதம் ஏந்தினர். 9 நாட்களுக்கு பின்னர் எழுச்சி அடக்கப்பட்ட நேரத்தில், பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பல காவல் படைகள் / வீரர்கள் இறந்தனர். 1987 ஆம் ஆண்டில் பொதுமக்கள் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்ட பின்னர், இந்த சம்பவத்தில் பலியானவர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு தேசிய கல்லறை நிறுவப்பட்டது.[3]

புள்ளி விவரங்கள்[தொகு]

2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குவாங்ஜூ மக்களில் 33% பேர் கிறிஸ்தவ மதத்தையும் (20% புராட்டஸ்டன்டிசம் மற்றும் 13% கத்தோலிக்க மதத்தையும் ) 14% பௌத்த மதத்தையும் பின்பற்றுகிறார்கள். 53% மக்கள் பெரும்பாலும் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல அல்லது மியூஸம் மற்றும் பிற பூர்வீக மதங்களைப் பின்பற்றுகிறார்கள்..

கல்வி[தொகு]

சோனம் தேசிய பல்கலைக்கழகம், குவாங்ஜு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் குவாங்ஜு கல்வி பல்கலைக்கழகம் ஆகியவை குவாங்ஜூவில் உள்ள பொது பல்கலைக்கழகங்கள் ஆகும்.

சுற்றுலா[தொகு]

குவாங்ஜு ஆசியா கலாச்சார மையம் - ஆசியா கலாச்சார மையம் (ஏ.சி.சி அல்லது ஆசிய கலாச்சார வளாகம் என்றும் அழைக்கப்படுகிறது) குவாங்ஜுவின் கலை மற்றும் ஜனநாயக கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது, அத்துடன் கண்காட்சிகள், அனுபவங்கள் மற்றும் சர்வதேச கலைஞர்களின் நிகழ்வுகள் போன்றவை இங்கு நிகழ்த்தப்படுகிறது.[4]

குறிப்புகள்[தொகு]

  1. "The History of Gwangju". Archived from the original on 2017-06-30.
  2. "Origin and History of Gwangju". www.gwangju.go.kr (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-18.
  3. "May 18th Democratic Uprising". Archived from the original on 2017-06-30.
  4. "Asia Culture Center". www.acc.go.kr. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாங்சூ_நகரம்&oldid=3550801" இலிருந்து மீள்விக்கப்பட்டது