கண்மணி குணசேகரன்
Jump to navigation
Jump to search
கண்மணி குணசேகரன் | |
---|---|
![]() | |
தொழில் | நாவலாசிரியர் |
நாடு | ![]() |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
அஞ்சலை (புதினம்)[1] |
கண்மணி குணசேகரன் (பிறப்பு: 1971) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
நாவல்கள்[தொகு]
- அஞ்சலை
- நெடுஞ்சாலை
- கோரை
- வந்தாரங்குடி
- பூரணி பொற்கலை