கணேந்திர நாராயண் ராய்
கணேந்திர நாராயண் ராய் Ganendra Narayan Ray | |
---|---|
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் 7 அக்டோபர் 1991 – 30 ஏப்ரல் 1998 | |
தலைவர், இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் | |
பதவியில் 11 மார்ச்சு 2005 – 4 அக்டோபர் 2011 | |
குசராத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி | |
பதவியில் 2 திசம்பர் 1990 – 7 அக்டோபர் 1991 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மே 1933 |
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
கணேந்திர நாராயண் ராய் (Ganendra Narayan Ray) இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி ஆவார். 1933 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். குசராத்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். [1] [2]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
மாநிலக்கல்லூரி, இசுகாட்டிசு பேராலயக் கல்லூரி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை ஆகியவற்றில் ராய் கல்வி பயின்றார். [2] [3] [4]
தொழில்[தொகு]
1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இவர் குசராத்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். [1] 1991 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். [2] [4] தற்போது கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக்கில் வசிக்கிறார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Incumbency List". Archived from the original on 19 June 2009. பார்க்கப்பட்ட நாள் 10 January 2013.
- ↑ 2.0 2.1 2.2 Hon'ble Mr. Justice G.N. Ray
- ↑ Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008. page 592
- ↑ 4.0 4.1 Press Council of India details