கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

() தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பதினோராவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஓகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஓவன்னா" என்பது வழக்கம்.

"ஓ" யின் வகைப்பாடு[தொகு]

தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துகள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

இனவெழுத்து[தொகு]

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், என்பது க்கு இன எழுத்தாக அமையும்[2].

சொல்லில் ஓகாரம் வரும் இடங்கள்[தொகு]

'ஓ' எழுதும் முறை

தனி சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும் சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙோ, ஞோ, டோ, ணோ, யோ, ரோ, லோ, வோ, ழோ, ளோ றோ, னோ ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டோ, யோ, ரோ, லோ போன்ற எழுத்துகளும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டோக்கியோ, யோவான், ரோடு, லோரன்ஸ் (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.

ஓகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஆனால் ஞகர மெய்யுடன் ஓகாரம் சொல்லுக்கு இறுதியில் வராது[4]. ஏகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.

"ஓ" வும் மெய்யெழுத்துகளும்[தொகு]

வுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து ஓகார உயிர் மெய்யெழுத்துகள் உருவாகின்றன. மெய்யெழுத்துகள் முதலெழுத்துகளாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துகளையே குறிக்கின்றன.[5]. இதனால், ஓகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஓகாரத்தைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு குறியீட்டையும் கால் குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.

18 மெய்யெழுத்துக்களோடும் ஓகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.

மெய்யெழுத்துக்கள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + ஓ கோ கோவன்னா
ங் இங்ஙன்னா ங் + ஓ ஙோ ஙோவன்னா
ச் இச்சன்னா ச் + ஓ சோ சோவன்னா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + ஓ ஞோ ஞோவன்னா
ட் இட்டன்னா ட் + ஓ டோ டோவன்னா
ண் இண்ணன்னா ண் + ஓ ணோ ணோவன்னா
த் இத்தன்னா த் + ஓ தோ தோவன்னா
ந் இந்தன்னா ந் + ஓ நோ நோவயன்னா
ப் இப்பன்னா ப் + ஓ போ போவன்னா
ம் இம்மன்னா ம் + ஓ மோ மோவன்னா
ய் இய்யன்னா ய் + ஓ யோ யோவன்னா
ர் இர்ரன்னா ர் + ஓ ரோ ரோவன்னா
ல் இல்லன்னா ல் + ஓ லோ லோவன்னா
வ் இவ்வன்னா வ் + ஓ வோ வோவன்னா
ழ் இழ்ழன்னா ழ் + ஓ ழோ ழோவன்னா
ள் இள்ளன்னா ள் + ஓ ளோ ளோவன்னா
ற் இற்றன்னா ற் + ஓ றோ றோவன்னா
ன் இன்னன்னா ன் + ஓ னோ னோவன்னா

வரிவடிவம்[தொகு]

தமிழில் ஓகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஓகாரத்தைக் குறிக்கப் பயன்பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர்த் தமிழை எழுதுவதற்குத் தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துகள் பயன்பட்டுள்ளன.

தொல்காப்பியம் ஒகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், ஒகரத்துக்கும் ஓகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் ஓகாரமே புள்ளியில்லாத அடிப்படைக் குறியீடாக அமைந்தது தெளிவு. இவ்வேறுபாடுகளைக் கல்வெட்டு எழுத்துகளில் காணமுடியவில்லை. பிந்திய தமிழ் கல்வெட்டுகளில் ஒகரமும், ஓகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவரே ஓகாரத்தைக் குறிக்க அடியில் சிறிய சுழியொன்றைச் சேர்த்து அதனை ஒகரத்திலிருந்து வேறுபடுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

ஓகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஓர் ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஓகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஓகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.

பிரெய்லியில் ஓகாரம்[தொகு]

கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துகளை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஓர் எழுத்துகான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது, மூன்றாவது வரிசைகளில் இடப்பக்கப் புள்ளியும் இரண்டாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அஃது வைக் குறிக்கும். இதைக் கீழே உள்ள படம் காட்டுகிறது.

பாரதி பிரெய்லியில் ஏகாரம்

குறிப்புகள்[தொகு]

  1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11
  2. இளவரசு, சோம., 2009. பக். 44
  3. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 33
  4. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 37
  5. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 15

உசாத்துணைகள்[தொகு]

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ&oldid=3601155" இலிருந்து மீள்விக்கப்பட்டது