எரத்ன
6°47′00″N 80°22′00″E / 6.78333°N 80.36667°E
எரத்ன | |
மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - இரத்தினபுரி |
அமைவிடம் | 6°48′00″N 80°22′00″E / 6.8000°N 80.3667°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 456 (அடி) 138 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 70506 - +94 45 xxx xxxx - SP |
எரத்ன (Eratna) அல்லது எரத்னகொடை இலங்கையின் சபரகமுவா மாகாணம், இரத்தினபுரி மாவட்டத்தில்[1] அமைந்துள்ள ஒரு மக்கள் குடியிருப்பாகும்.ஏ-4 நெடுஞ்சாலையில் குருவிட்டைநகரை அடைந்து அங்கிருந்து கிழக்குப் பக்கமாக பிரிந்துச் செல்லும் சிறுவீதியூடாக எரத்னவை அடையலாம். 25,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட பட்டதொட குகை, பட்டதொம்ப குகை ஆகிய இரண்டு குகைகள் இங்கு அமைந்துள்ளன.[2] சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு பாதை எரத்ன வழியாகச் செல்கிறது.
ஆதாரம்[தொகு]
- ↑ அமைவிடம் பற்றிய தகவல்கள்
- ↑ "இலங்கையின் குகைகள்". Archived from the original on 2008-06-18. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.