ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மரிங்கிப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரிங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டத்தின் மரிங்கிப்பட்டி என்ற ஊராட்சியில் அமைந்துள்ள அரசுத் தொடக்கப்பள்ளி ஆகும்.

நிர்வாகம்[தொகு]

தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அன்னவாசல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்[தொகு]

இப்பள்ளியில் 35 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் வளர்ச்சியில் இவ்வூர் மக்களின் பங்களிப்பு அளப்பறியது இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்களான விலையில்லா பாடநூல், சீருடை, குறிப்பேடுகள், காலணிகள், எழுதுபொருட்கள், உதவித்தொகைகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

கற்றல் முறைகள்[தொகு]

இப்பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை செயல் வழிக்கற்றல்[1] முறையிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி முறையிலும் கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]