உதயணன் வாசவதத்தா
| உதயணன் வாசவதத்தா | |
|---|---|
சுவரிதழ் | |
| இயக்கம் | டி. ஆர். ரகுநாத்[1] |
| தயாரிப்பு | ஆர். எம். ராமனாதன்[1] |
| கதை | உதயகுமார் ஏ. எஸ். ஏ. சாமி (வசனம்)[1] |
| இசை | சி. ஆர். சுப்பராமன்[1] |
| நடிப்பு | ஜி. என். பாலசுப்பிரமணியம் வசுந்தரா தேவி எம். எஸ். சரோஜா டி. பாலசுப்பிரமணியம் கே. சாரங்கபாணி காளி என். ரத்னம் |
| ஒளிப்பதிவு | மார்கசு பர்ட்லி[2] |
| படத்தொகுப்பு | ஏ. காசிலிங்கம் எஸ். ஏ. முருகேசன்[1] |
| கலையகம் | உமா பிக்சர்ஸ் |
| விநியோகம் | உமா பிக்சர்ஸ்[1] |
| வெளியீடு | 21 சூன் 1947 (India)[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
உதயணன் வாசவதத்தா (Udayanan Vasavadatta) என்பது 1947-ல் தமிழ் மொழியில் வெளிவந்தத் திரைப்பட்மாகும். டி. ஆர். ரகுநாத் இதை இயக்கிய இப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம், வசுந்தரா தேவி எம். எஸ். சரோஜா ஆகியோர் முன்னனி பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் டி. பாலசுப்பிரமணியம், கே. சாரங்கபாணி, காளி என். ரத்னம் ஆகியோர் துணைப்பாத்திரங்களில் தோன்றினர்.[2]
கதை
[தொகு]வத்ச நாட்டு அரசன் உதயணன் (ஜி. என். பாலசுப்பிரமணியம்) வாசவதத்தையை (வசுந்தரா தேவி) கண்டு இருவரும் காதலில் விழுகிறார்கள். உதயணனுக்கு ஒரு தெய்வீக யானையை இந்திரன் பரிசாக அளிக்கிறார். உதயணன் செய்த தவறால் அந்த யானை அவரை விட்டுச் சென்றுவிடுகிறது. வாசவதத்தையை அவ்வூரிலேயே விட்டுவிட்டு உதயணன் யானையைத் தேடி அலைகிறார். வாசவதத்தை அந்த இராச்சியத்தில் வேறொரு பெயரில் இசையும், நடனமும் கற்றுக் கொடுக்கிறார். இதற்கிடையில் மரகதக்கல்லில் செய்யபட்ட போலி யானையைக் காட்டி உதயணனை வரவழைத்து எதிரி நாட்டு அரசன் ஒருவன் கைது செய்கிறான். மேலும் இவரது நாட்டையும் கைப்பற்றுகிறான். பல சோதனைகளைக் கடந்து தனது எதிரிகளை வெற்றி கொண்டு, வாசவதத்தையை எப்படி உதயணன் எப்படி கைப்பிடிக்கிறார் என்பதே கதை.[2]
நடிப்பு
[தொகு]பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் தகவல் தொகுப்பு மற்றும் தி இந்து நாளேடுகளின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.[1][2]
ஜி. என். பாலசுப்பிரமணியம் - உதயணன்
வசுந்தரா தேவி - வாசவதத்தை
எம். எஸ். சரோஜா
டி. பாலசுப்பிரமணியம்
கே. சாரங்கபாணி
காளி என். ரத்னம்
சி. டி. ராஜகந்தம்
என். கிருஷ்ணமூர்த்தி
பி. எஸ். வீரப்பா
டி. கே. சம்பங்கி
எம். வி. மணி
கொளத்து மணி
டி. டி. அரசு
வி. நடராஜ ஐய்யர்
கே. என் .கமலம்
கே. என் .ராஜம்
என். நாகசுப்ரமண்யம்
தயாரிப்பு
[தொகு]ஆர். எம். ராமனாதன் அவர்கள் உமா பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை தயரித்துள்ளார். முதலில் தியாகராஜ பாகவதர் உதயணன் பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து ஒரு சில காட்சிகளும், பாடல்களும் படமாக்கப்பட்டன. பின்னர் பாகவதர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, காரணமாக கைது செய்யபட்டார். இதனால் அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஜி. என். பாலசுப்பிரமணியத்தை நாயகனாக்கி படம் எடுக்கபட்டது.[2]
ஒளிபதிவை மார்கசு பர்ட்லி மேற்கொண்டுள்ளார். நடனம் வி. பி. ராமையா பிள்ளை மற்றும் காமினி குமார் சின்ஹா [2]
ஒலித்தொகுப்பு
[தொகு]இதன் இசை சி. ஆர். சுப்பராமன் , பாபநாசம் சிவன் மற்றும் பாடல்களை கம்பதாசன் எழுதியுள்ளனர். ஜி. என். பாலசுப்பிரமணியம் மற்றும் வசுந்தரா தேவி ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர் .[2]
விமர்சனம்
[தொகு]ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் பாடல்களும், வசுந்தரா தேவியின் நடனமும் மிகவும் அற்புதமாக இருக்கிறது என தி இந்து நாளேட்டில் ராண்டார் கை எழுதுகிறார்.[2] ஆனால், இப்படம் சரியான வசூலைத் தரவில்லை.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 8 சூன் 2017.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Randor Guy (28 November 2010). "Udayanan Vasavadatta 1946". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170608093956/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Udayanan-Vasavadatta-1946/article15718572.ece. பார்த்த நாள்: 8 June 2017.