இரத்னபாலன் (சகமான வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்னபாலன்
மகாராஜாதிராஜா
நாதுல்லாவின் அரசன்
ஆட்சிக்காலம்சுமார் கி.பி. 1119–1132
முன்னையவர்ஆஷாராஜா
பின்னையவர்இராயபாலன்
அரசமரபுநாதுல்லா சகமான வம்சம்
தந்தைபிரித்திவிபாலன்

இரத்னபாலன் (Ratnapala) ( ஆட்சி சுமார் 1119–1132 கி.பி ) நாதுல்லா சகமான வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னர். இவர் நாதுல்லாவைச் சுற்றியுள்ள பகுதியை (இன்றைய இராசத்தானில் உள்ள நாதோல்) ஆட்சி செய்தார். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு சகமான மன்னராக ஆன தனது மாமா ஆஷாஜாவிடமிருந்து அரியணையைக் கைப்பற்றினார்.

ஆட்சி[தொகு]

இரத்னபாலன், சகமான அரசன் பிருத்விபாலனின் மகன். [1] இவர் பிருத்விபாலனின் மரணத்திற்குப் பிறகு பிறந்திருக்கலாம் அல்லது மரணத்தின் போது இவருக்கு சிறுவயதாக இருந்திருக்கலாம். [2] இதன் காரணமாக, பிருத்விபானுக்குப் பிறகு அவரது சகோதரர்கள் ஜோஜல்லதேவன் மற்றும் ஆஷாராஜா ஆகியோர் சிலகாலம் ஆட்சி செய்தனர். ஆஷாராஜா குறைந்தபட்சம் கி.பி.1115 வரை நாதுல்லாவின் அரியணையைக் கட்டுப்படுத்தினார். [3] அவரது உறவினர் ஒருவர் மண்டோரைக் கைப்பற்றியதாகவும், ஆஷாராஜா அதை மீண்டும் கைப்பற்றியதாகவும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த உறவினர் ஒருவேளை இரத்னபாலனாக இருக்கலாம். [4]

கிபி 1119 வாக்கில், இரத்னபாலன் சகமான அரசராக ( மகாராஜாதிராஜா ) ஆனதாக செவாரி கல்வெட்டு மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. [1] இரத்னபாலன் பலவந்தமாக ஆஷாராஜாவை வெளியேற்றினார். இதன் காரணமாக ஆஷாராஜா போட்டியாளரான சோலாங்கிய மன்னன் செயசிம்ம சித்தராசனுடன் இணைந்தார். [3]

இரத்னபாலனின் கி.பி.1119 செவாரி கல்வெட்டு, கும்தா குர்ச்சா ( பாலி மாவட்டத்தில் உள்ள நவீன கோண்டோக்) பிராமணர்களுக்கு தானம் வழங்கப்பட்டதை பதிவு செய்கிறது. [5] மற்றொரு கல்வெட்டு இவர் ரியாசகுடபா கிராமத்தை திரிபுருசதேவன் கோயிலுக்கு வழங்கியதை பதிவு செய்கிறது. [4]

இரத்னபாலவிற்குப் பின் இவரது மகன் இராயபாலன் ஆட்சிக்கு வந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 R. B. Singh 1964, ப. 250.
  2. R. B. Singh 1964, ப. 248.
  3. 3.0 3.1 R. B. Singh 1964, ப. 251.
  4. 4.0 4.1 4.2 Dasharatha Sharma 1959, ப. 131.
  5. R. B. Singh 1964, ப. 250-251.

உசாத்துணை[தொகு]