இக்பால் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்பால் சிங்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
பதவியில்
27 சூலை 2009 – சூலை 2013
முன்னையவர்சுர்சித் சிங் பர்னாலா
பின்னவர்வீரேந்திர கத்தாரியா
உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
10 ஏப்ரல் 1992 – 9 ஏப்ரல் 1998
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூன் 1945 (1945-06-04) (அகவை 78)
லாகூர், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்குரீந்தர் பீர் கவுர்

இக்பால் சிங் (Iqbal Singh)(பிறப்பு 4 ஜூன் 1945) என்பவர் இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தின் துணைநிலை ஆளுநராகப் பதவி வகித்தவர் ஆவார்.

அரசியல்[தொகு]

சிங், இந்தியத் தேசிய காங்கிரசில், அகில இந்தியக் காங்கிரசு நிர்வாக குழுவின் செயலாளர் உட்பட, 12 வருடங்கள் தொடர்ந்து காங்கிரஸ் காரியக் குழுவுக்கு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். 1992 முதல் 1998 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1]

ஆளுநர்[தொகு]

இக்பால் சிங் புதுச்சேரி ஒன்றியத்தின் துணைநிலை ஆளுநராக 27 சூலை 2009 முதல் 9 சூலை 2013 வரை பதவி வகித்தார்.

கௌரவங்கள்[தொகு]

இவரது பங்களிப்புகளைப் பாராட்டி, ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு 5 திசம்பர் 2009 அன்று கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of All Members Of Rajya Sabha Since 1952". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013. Iqbal Singh Shri Punjab INC 10/04/1992 09/04/1998

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்பால்_சிங்&oldid=3369735" இலிருந்து மீள்விக்கப்பட்டது