ஆற்றுத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆற்றுத் திருவிழா தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலும் விழுப்புரம் மாவட்டத்திலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கொண்டாடப்படுகின்ற திருவிழாவாகும்.

நிகழ்விடம்[தொகு]

இவ்விழா தை மாதத்தின் ஐந்தாம் நாள் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறுகிறது.[1]

கொண்டாடப்படும் நோக்கம்[தொகு]

நீருக்கு ஆதாரமான ஆற்றுக்கு நன்றி சொல்லும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஐந்தாம் நாள் தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு நன்றி சொல்லி இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்

விழா நிகழ்வு[தொகு]

கடலூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளான கடலூர் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், தாழங்குடா, குண்டுஉப்பலவாடி, ஆனைக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், நானமேடு, உச்சிமேடு, கடலூர் துறைமுகம், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, தேவனாம்பட்டி,பணப்பாக்கம், கண்ரக்கோட்டை, பாகூர், சோரியாகுப்பம், புதுச்சேரி கன்னியகோயில்ஆகிய இடங்களில் உள்ள முத்துமாரியம்மன், முருகன், விநாயகர், பராசக்தி கோயில்களைச் சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொண்டாடப்படுகிறது.[1]

பிற இடங்கள்[தொகு]

  • மணலூர் பேட்டை தென் பெண்ணை ஆற்றங்கரை
  • திருக்கோவிலூர் தென் பெண்ணை ஆற்றங்கரை
  • பண்ருட்டியில் கெடிலம் ஆற்றங்கரை [1]
  • பண்ருட்டி அடுத்துள்ள கண்டரக்கோட்டை பெண்ணியாற்றின் கரை [2]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றுத்_திருவிழா&oldid=3871752" இலிருந்து மீள்விக்கப்பட்டது