ஆற்றுத் திருவிழா
ஆற்றுத் திருவிழா தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலும் விழுப்புரம் மாவட்டத்திலும் கொண்டாடப்படுகின்ற திருவிழாவாகும்.
நிகழ்விடம்[தொகு]
இவ்விழா தை மாதத்தின் ஐந்தாம் நாள் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறுகிறது.[1]
விழா நிகழ்வு[தொகு]
கடலூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளான கடலூர் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், தாழங்குடா, குண்டுஉப்பலவாடி, ஆனைக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், நானமேடு, உச்சிமேடு, கடலூர் துறைமுகம், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, தேவனாம்பட்டி, புதுச்சேரி கன்னியகோயில்ஆகிய இடங்களில் உள்ள அம்மன், முருகன், விநாயகர், பராசக்தி கோயில்களைச் சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொண்டாடப்படுகிறது.[1]