ஆனந்த் கீத்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்து கீத்தே
Anant geete 03 06 2014.jpg
ஆனந்து கீத்தே
கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோதி
தொகுதி ராய்காட்
தனிநபர் தகவல்
பிறப்பு 2 சூன் 1951 (1951-06-02) (அகவை 71)
மும்பை, மகாராட்டிரம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி சிவ சேனா
வாழ்க்கை துணைவர்(கள்) அசுவினி கீத்தே
இருப்பிடம் மும்பை
As of மே, 2014
Source: [1]

ஆனந்த் கங்காராம் கீதே (Anant Geete) மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறைக்கான அமைச்சர்[1]. சிவசேனா கட்சியை சேர்ந்தவர். 1951, ஜூன் 2ல் மும்பையில் பிறந்தார். வயது 62. மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் துவக்கினார். பின் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவராக பணியாற்றினார். லோக்சபா தேர்தலில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசில் பல துறைகளில் அமைச்சர் பொறுப்பும் வகித்துள்ளார். சிவ சேனா கட்சியின் மூத்தத் தலைவராக கருதப்படுகிறார். 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் தொகுதியில் போட்டியிட்டு, தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த சுனில் தத்தாத்ரேயாவை 2,110 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.[2] இவர் 1951-ஆம் ஆண்டின் ஜூன் இரண்டாம் நாளில் பிறந்தார். இவர் மும்பையில் பிறந்தார்.

பதவிகள்[தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளில் இருந்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. 4 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2014-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-30 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_கீத்தே&oldid=3543213" இருந்து மீள்விக்கப்பட்டது