ஆடுதின்னாப்பாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதின்னாப்பாலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
[Magnoliid]
வரிசை:
[Piperales]
குடும்பம்:
[Aristolochiaceae]
பேரினம்:
[Aristolochia]
இனம்:
A. tagala
இருசொற் பெயரீடு
Aristolochia tagala

ஆடுதின்னாப்பாலை அல்லது ஆடுதீண்டாப்பாலை (Aristolochia tagala, Indian birthwort; "இடச்சுக்காரர் குழாய்" எனவும் அழைக்கப்படும்.[1]) என்பது ஒரு மூலிகைத் தாவரமாகும். ஆடு தின்னாத அளவுக்குக் கசப்புத்தன்மை உடையதால் ஆடுதின்னாப்பாலை, ஆடுதீண்டாப்பாலை என்னும் பெயர்கள் வழங்கலாயின.[2] வாரம் எனும் பெயரும் இதற்குள்ளது. எட்டித் தழையையும் மேயும் வெள்ளாடுகூட கறித்துப் பார்த்துவிட்டுத் தின்னாமல் ஒதுக்கி வாரம் செய்வதால் இந்தச் செடிக்கு வாரம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

பரம்பல்[தொகு]

இது பரவலாகக் காணப்படுகிறது. இதன் பரம்பல் இமயமலை முதல் இலங்கை வரை தென்கிழக்காசியா (மியன்மர், இந்தோனேசியா, இந்தோசீனா, தாய்லாந்து உட்பட) சீனா, ஓசியானியா (மேலேசியா, சொலமன் தீவுகள், அவுத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வரை) ஆகிய இடங்களில் காணப்படுகிறது[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Wee Yeow Chin. "Aristolochia tagala". Nature Watch. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  2. இரா. மதிவாணன் (1993). செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி முதன்மடலம்-இரண்டாம் பாகம் (ஆ, இ, ஈ). செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். பக். 58. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதின்னாப்பாலை&oldid=3622885" இலிருந்து மீள்விக்கப்பட்டது