அ. வெங்கடாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. வெங்கடாசலம்
சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
1984–1988
பதவியில்
1996–2001
பதவியில்
2001–2006
பிரதமர்அ.வெங்கடாசலம்
தொகுதிஆலங்குடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1955-09-15)செப்டம்பர் 15, 1955
புள்ளாச்சி குடியிருப்பு வடகாடு, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு(2010-10-07)அக்டோபர் 7, 2010
துணைவர்லட்சுமி
பிள்ளைகள்ராஜதுரை, ராஜபாண்டி, ராஜராஜன்,பவளக்கொடி, சுமதி
வேலைஅரசியல்வாதி

அ. வெங்கடாசலம் (A.Venkatachalam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டதிலுள்ள வடகாடு ஆகும். இவர் ஆலங்குடி தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாதுறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்ட மக்கள் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அக்டோபர் 7, 2010 அன்று முகம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலைச்செய்யப்பட்டார்.[1]

வளர்ச்சியும் அரசியல் பின்னணியும்[தொகு]

வெங்கடாசலம் தன்னுடைய கல்வி பயணத்தை இறுதியாக புதுக்கோட்டையில் உள்ள அரசுக்குச் சொந்தமான மன்னர் கல்லூரியில் பி.யூ.சி பயின்றார்.1984, 1996,2001 ஆம் ஆம் ஆண்டுகளில் இவர் தேர்தலில் போட்டியிட்டார்.[2] 1984-ல் அரசியல் களத்தில் இறங்கிய வெங்கடாசலம் 2010 வரை தனக்கென ஒரு பாதையை வகுத்து அதன் வழியாக அவரின் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக பெரிதும் பாடுபட்டார். 1996ல் கட்சியில் இடம் கொடுக்காத நிலையிலும் சட்டமன்ற தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._வெங்கடாசலம்&oldid=3937788" இலிருந்து மீள்விக்கப்பட்டது