அய்யாலராஜு இராமபத்ருடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யாலராஜு இராமபத்ருடு ( Ayyalaraju Ramabhadrudu ) ( தெலுங்கு : అయ్యలరాజు రామభద్రుడు) சுருக்கமாக இராமபத்ரன் (பொது ஊழி 16வது நூற்றாண்டு ) ஒரு பிரபலமான தெலுங்குக் கவிஞரும் விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயனின் அரசவையிலிருந்த அஷ்டதிக்கஜங்களில் ஒருவராகவும் இருந்தார்.

சுயசரிதை[தொகு]

காவலி வெங்கட ராமசாமி என்பவரின் கருத்துப்படி, இவர் சிடெட் மாவட்டங்களைச் சேர்ந்தவர். [1] இவரது பிறப்பிடம் ஆந்திராவில் கடப்பா என்று பரவலாகக் கருதப்படுகிறது. இவர் முதலில் கிருஷ்ணதேவராயரானால் ஆதரிக்கப்பட்டார். பின்னர் அவரது மரணத்திற்குப் பிறகு அலிய ராம ராயனின் மருமகன் கோபுரி நரசராயனின் அரசவைக்குச் சென்றார். இவர் "பிள்ளாள இராமபத்ருடு" என்றும் அழைக்கப்பட்டார்.

படைப்புகள்[தொகு]

இராமாப்யுதயமு என்ற தனது புகழ்பெற்ற படைப்பை நரசராயனுக்கு அர்ப்பணித்தார். கிருஷ்ணதேவராயனின் வேண்டுகோளின் பேரில், மன்னனின் ஒரு படைப்பை தெலுங்கில் சகல கதா சார சங்கிரகம் என்று மொழிபெயர்த்தார் .

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramabhadra in Biographical Sketches of Dekkan Poets. Calcutta: Cavelly Venkata Ramaswamie. 1829. பக். 109. https://commons.wikimedia.org/wiki/File:Biographical_Sketches_of_Dekkan_Poets.djvu. பார்த்த நாள்: 27 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யாலராஜு_இராமபத்ருடு&oldid=3149403" இலிருந்து மீள்விக்கப்பட்டது