அம்பிகா, பார் ராஜா
அம்பிகா | |
---|---|
பார் ராஜா | |
![]() சுமார் 18 ஆம் நூற்றாண்டின் ஒரு கையெழுத்துப் பிரதியில் அம்பிகா, பார் ராஜாவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். | |
பார் ராஜா | |
பதவியில் | 1732 – 1738 |
பிறப்பு | திரௌபதி கலுகாயன் கோன், சிவசாகர் |
இறப்பு | 1738 சிமதாலி, கோலாகாட், அகோம் பேரரசு (தற்போதைய அசாம், இந்தியா) |
துணைவர் | ராம்நாத் சோலால் கோகன் (பிரிந்தது 1732) சிவசிங்கா (தி. 1732) |
குழந்தைகளின் பெயர்கள் | திபம் ராஜா உட்பட 3 பேர் |
மதம் | இந்து சமயம் |

அம்பிகா, பார் ராஜா (Ambika, Bar Raja) (பிறப்பு திரௌபதி ; இறப்பு 1738) அகோம் மன்னன் சிவ சிங்கா என்பப்படும் சுதன்பாவின் பட்டத்தரசியாவார். இவரது அக்கா புலேசுவரியின் மரணத்திற்குப் பிறகு இவர் பார் ராஜா ஆனார். சிவசாகர் சிவத்தோள் மற்றும் சிவசாகர் குளம் ஆகியவற்றை நிர்மாணிப்பதில் பெயர் பெற்றவர். மேலும், கற்றல் மற்றும் கல்வியின் சிறந்த புரவலராக இருந்தார்.[1]
குடும்பம்
[தொகு]
அம்பிகை, திரௌபதி என்ற பெயருடன் பிறந்தார்.[1]
திரௌபதி மிரி ஹண்டிகோய் குடும்பத்தைச் சேர்ந்த ராம்நாத் சோலால் கோகன் என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.[1][2]
திரௌபதியின் அக்காவான புலேசுவரி [3] 1731இல் இறந்தார். மன்னன், சிவ சிங்கா, பின்னர் வலுக்கட்டாயமாக திரௌபதியின் கணவனிடமிருந்து பிரித்து மணந்து கொண்டார். இவரது முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த இரண்டு மகன்களும் தங்கள் தந்தையுடன் வாழ்ந்தனர். மேலும் திரௌபதி 'அம்பிகா' என்ற பெயரைப் பெற்றார். இவர்களுக்கு உக்ர சிங்கா என்ற திபம் ராஜா மகனாகப் பிறந்தார்.[4][5]
கலைப்பணி
[தொகு]அம்பிகா கலையின் சிறந்த புரவலராக இருந்தார். இவரது ஆதரவின் பேரில், அசாமின் சிறந்த அறியப்பட்ட சித்திர கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றான "ஹஸ்திவித்யார்ணவம்" என்ற யானைகளைப் பற்றிய புகழ்பெற்ற கையெழுத்துப் பிரதி எழுதப்பட்டது. ஆறாவது பாகவத புத்தகம், கவிச்சந்திர திவிஜ்யா என்பவரால் இயற்றப்பட்டதும் பாத லிகிரா என்பவரால் விளக்கப்பட்டதுமான தர்ம புராணம் ஆகியவை அந்தக் காலத்தின் மற்றொரு முக்கியமான கலைப் படைப்புகள்.[5]
இறப்பு
[தொகு]அம்பிகை 1738 இல் சீனாதலி என்ற இடத்தில் இறந்தார்.[6] பின்னர் மன்னன் 1739 ஆம் ஆண்டில், மதுரியல் குடும்பத்தைச் சேர்ந்த, பதவி நீக்கம் செய்யப்பட்ட சோலால் கோகனின் மகள் அகாரி கபுரு என்பவரை மணந்து, அவருக்கு பார் ராஜா என்ற பட்டத்தை வழங்கினார். மேலும் அவருக்கு சர்பேசுவரி என்று பெயரையும் சூட்டினார்.[7]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Gogoi, Padmeswar (1968). The Tai and the Tai Kingdoms: With a Fuller Treatment of the Tai-Ahom Kingdom in the Brahmaputra Valley (in ஆங்கிலம்). Department of Publication, Gauhati University.
- ↑ Saikia, Sayeeda Yasmin (1992). History at the Crossroads: An Analysis of the Satsari Buranji of Assam (in ஆங்கிலம்). University of Wisconsin--Madison.
- ↑ Menon, Mady (2020-08-25). NINU: A Saga of the Valorous Wanchos (in ஆங்கிலம்). Notion Press. ISBN 978-1-64919-932-4.
- ↑ Bhattacharjee, Jayanta Bhusan (1986). Studies in the History of North-east India: Essays in Honour of Professor H.K. Barpujari (in ஆங்கிலம்). North-Eastern Hill University.
- ↑ 5.0 5.1 Gupta, Rajatananda Das (1972). Eastern Indian Manuscript Painting (in ஆங்கிலம்). D. B. Taraporevala Sons.
- ↑ Digital, A. T. (2021-01-31). "On the pedestal". assamtribune.com (in ஆங்கிலம்). Retrieved 2023-02-03.
- ↑ (Gogoi 1968)