சௌச்சல சோட்டா கோவிந்த மந்திர்
சௌச்சல சோட்டா கோவிந்த மந்திர் (Chauchala Chhota Govinda Mandir) என்பது வங்காளதேசத்தின் ராச்சாகி கோட்டத்தில் உள்ள புதியா உபசீலாவில் உள்ள புதியா கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஓர் இந்து கோவிலாகும். இக்கோயில் 1790-1800 ஆம் ஆண்டுகளில் இருந்ததாக கருதப்படுகிறது. [1][2]
ராச்சாகி நகரத்திலிருந்து 32 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள புதிய நகரத்தில் இக்கோவில் உள்ளது இந்த நகரம் இரயில் மூலம் அணுகும் வகையிலும் டாக்கா ராச்சாகி நெடுஞ்சாலையிலும் உள்ளது. [3]
சிறப்பம்சங்கள்[தொகு]
சோட்டா கோவிந்த மந்திர் கோவில் பாரா அக்னிக் மந்திர் அருகில் பிரமிட் வடிவ பெட்டகத்தால் மூடப்பட்ட உயரமான மேடையில் உள்ளது. கோவிலின் உட்புறம் கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் தாழ்வாரங்களுடன் கூடிய ஓர் அறை உள்ளது. [2] தெற்கு முகப்பு சுடுமண் தகடுகளால் விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. விசுணுவின் பத்து அவதாரங்கள் , காவியமான இராமாயண புராணத்தின் ஒரு அத்தியாயமான லங்காகண்டம், ராதா - கிருஷ்ண காவியக் கதைகள், மலர் வடிவமைப்புகள், வடிவியல் கலை மற்றும் அந்தக் காலத்திய குடிமை வாழ்க்கையின் காட்சிகளை இத்தகடுகள் சித்தரிக்கின்றன. மேற்கில் உள்ள முகப்பில் சுடுமண் அலங்காரப் பலகைகள் உள்ளன. அவற்றில் சில பாழடைந்த நிலையில் அல்லது பாழடைந்த நிலையில் உள்ளன. [2]
படக்காட்சியகம்[தொகு]
-
சுடுமட்சிலை
-
சுடுமட்சிலை
-
சுடுமட்சிலை
-
கோவில்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mahmumuda, Alam (2013). Puthia temple complex: Developing tourism through architecture (pdf) (Bachelor of Architecture). BRAC University. p. 30. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015.
- ↑ 2.0 2.1 2.2 "Puthia Rajbari". Chauchala Chhota Govinda Mandir. Rajshahi University Web Page. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link). Chauchala Chhota Govinda Mandir. Rajshahi University Web Page. Archived from the original பரணிடப்பட்டது 2015-05-18 at the வந்தவழி இயந்திரம் on 18 May 2015. Retrieved 13 May 2015. - ↑ Bangladesh.