திருநாவாய் நவ முகுந்தன் கோயில்

ஆள்கூறுகள்: 10°51′49.3″N 75°58′54.2″E / 10.863694°N 75.981722°E / 10.863694; 75.981722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநாவாய் நவ முகுந்தன் கோயில்
திருநாவாய் நவ முகுந்தன் கோயில் is located in கேரளம்
திருநாவாய் நவ முகுந்தன் கோயில்
திருநாவாய் நவ முகுந்தன் கோயில்
கேரள மாநிலத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்:10°51′49.3″N 75°58′54.2″E / 10.863694°N 75.981722°E / 10.863694; 75.981722
பெயர்
பெயர்:திருநாவாய் நவமுகுந்தன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:மலப்புறம் மாவட்டம்
அமைவு:திருநாவாய்
ஏற்றம்:31 m (102 அடி)
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள கோயிலமைப்பு

திருநாவாய் நவ முகுந்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இத்தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது.[1][2] இறைவன் நவமுகுந்தன் என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில்[1] வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார்.[3] இறைவி: மலர்மங்கை நாச்சியார். விமானம் வேதவிமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921-ல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது.[4] இத்தலம் கஜேந்திரனால் வழிபடப்பட்ட தலமாகும்.[5] திருமங்கையாழ்வாரால் இரண்டு பாசுரங்களும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களும் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.

Tirunavaya Temple

பித்ரு க்ஷேத்திரம்[தொகு]

துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத்திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார். ஆடி அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜைகளைச் செய்கின்றனர்.[6]

ஓவியங்கள்[தொகு]

பழைமையான பல ஓவியங்கள் இத்திருத்தலத்தில் உள்ளன

அமைவிடம்[தொகு]

சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டிலிருந்தும் திருநாவாய் செல்ல பேருந்துகள் உள்ளன.

பாசுரம்[தொகு]

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்

கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும் திரு நாவாய்

கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே

— திருவாய்மொழி, 9ம் பத்து 8ம் திருமொழி 5ம் பாசுரம்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
  2. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  3. "Thirunavaya Temple". Indian Temples Portal. Archived from the original on 2006-10-18. பார்க்கப்பட்ட நாள் 2006-10-13.
  4. "Malappuram Tourist Attraction - Pilgrimage Centres". Archived from the original on 2006-09-06. பார்க்கப்பட்ட நாள் 2006-10-13.
  5. http://www.templenet.com/Tamilnadu/df076.html
  6. குமுதம் ஜோதிடம்;30.08.2013; பக்கம் 3

வெளி இணைப்புகள்[தொகு]