கிராதார்ஜுனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைவேடன் வடிவத்தில் உள்ள சிவபெருமானுடன் போரிடும் அருச்சுனன்
வேடன் உருவில் காட்யளித்த சிவபெருமானிடம் சரணடையும் அருச்சுனன், 19ம் நூற்றாண்டின் ஓவியம் ராஜா ரவி வர்மா

கிராதார்ஜுனியம் (Kirātārjunīya) (சமக்கிருதம்: किरातार्जुनीय, (மலைவேடனும்), அருச்சுனனும்), கிபி ஆறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த சமசுகிருத மொழி கவிஞர் பாரவியால் எழுதப்பட்ட சமசுகிருத மொழி காவியம் ஆகும். இக்காவியம் 18 காண்டங்கள் கொண்ட பெருங்காப்பியமாகும்.

காவியச் சுருக்கம்[தொகு]

மகாபாரத இதிகாசத்தின் வன பருவத்தில் அருச்சுனன் சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரம் எனும் தெய்வீக ஆயுதத்தைப் பெறும் நிகழ்வை [1], பாரவி 18 காண்டங்களில் கிராதார்ஜுனியம் எனும் சமசுகிருத பெருங் காவியமாக பாடியுள்ளார். கிராதார்ஜுனியம், அருச்சுனனின் வீரதீரச் செயலை வெளிப்படுத்துகிறது. [2] கிராதார்ஜுனியம், சமசுகிருத மொழியின் ஆறு பெருங்காப்பியங்களில் ஒன்றாகும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. அர்ஜுனனின் கடும் தவம் - வனபர்வம் பகுதி 38
  2. Amaresh Datta, ed. (2006), The Encyclopaedia Of Indian Literature Volume One (A To Devo), Sahitya Akademi, p. 462, ISBN 978-81-260-1803-1
  3. Har 1983, ப. iii

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராதார்ஜுனியம்&oldid=2425105" இலிருந்து மீள்விக்கப்பட்டது