எ. சிட்னி சுதந்திரன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எ. சிட்னி சுதந்திரன் | |
---|---|
பிறப்பு | சிட்னி சுதந்திரன் ஜூன் 22, 1944 பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா. |
இருப்பிடம் | பாளையங்கோட்டை, திருநெல்வேலி |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | பாளை.சுசி |
கல்வி | தாவரவியல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் |
பணி | ஓய்வு பெற்ற பேராசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர், பேராசிரியர் |
சமயம் | கிறித்தவம் |
பெற்றோர் | எபநேசர், ஞானசுந்தரி அன்னபாய் |
வாழ்க்கைத் துணை | டாக்டர் லலிதா சிட்னி |
பிள்ளைகள் | மகள்கள் -2 |
எ. சிட்னி சுதந்திரன் (பிறப்பு: ஜூன் 22, 1944) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரியில் தாவரவியல் பேராசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2000 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வெளியாகும் பல அச்சிதழ்களிலும், இணைய இதழ்களிலும் பாளை. சுசி எனும் பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை என பல படைப்புகளை எழுதியுள்ளார். இவரது மனைவி லலிதா சிட்னி தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையின் கீழான பல அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
எழுதியுள்ள நூல்கள்[தொகு]
- பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் - 2010
- ஹென்றி பவர் ஐயர் - 2010