நாரீனிச்சிதைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாரீனிச்சிதைவு. நீல அம்புக்குறிகள் தூண்டுதலையும், சிவப்பு அம்புக்குறிகள் தடுப்பதையும் குறிக்கின்றன.

நாரீனிச்சிதைவு (Fibrinolysis) என்னும் செயற்பாடு குருதி உறைகட்டிகள் வளர்ந்து சிக்கல்களை உருவாக்காமல் தடுக்கிறது[1]. இவை, முதன்மையான நாரீனிச்சிதைவு, இரண்டாம் நிலை நாரீனிச்சிதைவு என இரண்டு வகைகளாக உள்ளன. முதன்மை வகையானது சாதாரணமான உடல் செயற்பாடுகளில் ஒன்றாகும். ஆனால், இரண்டாம் வகையானது மருந்துகள், மருத்துவ சீர்குலைவுகள் அல்லது பிற காரணங்களினால் குருதி உறைகட்டிகள் சிதைவதைக் குறிக்கின்றது[1].

நாரீனிச்சிதைவு செயற்பாட்டில், குருதி உறைதலினால் ஏற்படும் நாரீணி உறைகட்டிகள் சிதைவடைகின்றன[2]. இதன் முதன்மை நொதியமான பிளாசுமின் நாரீனி வலைப்பின்னல்களை வெவ்வேறு இடங்களில் வெட்டி சுற்றோட்ட துண்டுகளை உருவாக்குகிறது. இத்துண்டுகள் பிற புரதச் சிதைப்பிகளால் முற்றாகச் சிதைக்கப்பட்டு சிறுநீரங்கங்கள், கல்லீரல் மூலமாக வெளியேற்றப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Dugdale, David et al. "Primary or secondary fibrinolysis", Medline Plus.  Retrieved 7 August 2011.
  2. Cesarman-Maus G, Hajjar KA (May 2005). "Molecular mechanisms of fibrinolysis". British journal of haematology 129 (3): 307–21. doi:10.1111/j.1365-2141.2005.05444.x. பப்மெட்:15842654. https://archive.org/details/sim_british-journal-of-haematology_2005-05_129_3/page/307. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரீனிச்சிதைவு&oldid=3536976" இலிருந்து மீள்விக்கப்பட்டது