பஞ்ச வாத்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்ச வாத்தியம்

பஞ்ச வாத்தியம் (Panchavadyam) இது கேரள மாநிலத்தின் கோயில்களில் ஐந்துவகை இசைக்கருவிகளால் வாசிக்கப்படும் இசை ஆகும்.

திமிலை[தொகு]

இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது

மத்தளம்[தொகு]

தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது.

இந்தளம்[தொகு]

இது இரண்டு தட்டு வடிவில் அமைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை இரு கைகளில் பொருத்தி இசைக்கப்படுகிறது.

உடுக்கை[தொகு]

தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்தும் இருக்கும், இக்கருவி இரண்டு கை விரல்களால் இசைக்கப்படுகிறது

கொம்பு[தொகு]

வளைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை வாயினால் ஊதி இசைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_வாத்தியம்&oldid=3446203" இலிருந்து மீள்விக்கப்பட்டது